Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, January 16
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘தக் லைஃப்’ தடைக்கு எதிரான வழக்கு: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
    தேசியம்

    ‘தக் லைஃப்’ தடைக்கு எதிரான வழக்கு: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

    adminBy adminJune 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘தக் லைஃப்’ தடைக்கு எதிரான வழக்கு: கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி / பெங்களூரு: நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக‌ கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில் ‘த‌மிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது’ என குறிப்பிட்டார். இதற்கு கன்னட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காததால், கர்நாடக திரைப்பட வர்த்தக சபை இந்த திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்தது.

    இதற்கு எதிராக கமல்ஹாசன் கடந்த 3-ம் தேதி க‌ர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, ”கமல்ஹாசனின் கருத்தால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் இங்கு அந்த திரைப்படத்தை திரையிட முடியாது” எனக்கூறி மன்னிப்பு கேட்குமாறு வலியுறுத்தினார். இதனால் ’தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை.

    இந்த தடையை எதிர்த்து சமூக ஆர்வலர் மகேஷ் ரெட்டி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தக் லைஃப் திரைப்படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்றிதழ் பெற்று தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அந்த திரைப்படத்தை கன்னட அமைப்பினர் வாய்மொழி அச்சுறுத்தல் மூலம் கர்நாடகாவில் வெளியிட முடியாமல் தடையை ஏற்படுத்தியுள்ளனர்.

    கமல்ஹாசனின் கன்னட மொழி குறித்த கருத்துக்களால் அந்த திரைப்படத்துக்கு சட்டரீதியான தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இருப்பினும் சட்டத்துக்கு புறம்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது” என‌ குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு நேற்று நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில், ”கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தடையானது சட்டத்துக்கு புறம்பானது. இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-ன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். கன்னட அமைப்பினர் திரையரங்குகளுக்கு தீ வைப்பதாக விடுத்த மிரட்டலுக்கு கர்நாடக அரசு அடிபணிந்துள்ளது.

    கர்நாடக அரசின் இந்த அணுகுமுறை மொழி சிறுபான்மை மற்றும் வகுப்புவாத வன்முறை அச்சுறுத்தல்களை மறைமுகமாக ஊக்குவிப்பதாக உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பீடுகளுக்கும் மாநிலத்தின் சட்ட ஒழுங்குக்கும் ஏற்பட்ட தோல்வியாகும்” என வாதிடப்பட்டது.

    இதனை ஏற்ற நீதிபதிகள், தக் லைஃப் திரைப்படத்துக்கு தடை விதித்தது தொடர்பாக பதில் அளிக்குமாறு கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    இதனிடையே கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசனின் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் இன்னும் மன்னிப்பு கேட்காததால் அந்த வழக்கின் விசாரணை வரும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிடப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘மோடியை பழிப்பது சுலபம்; ஆனால்…’ – ராகுலை விமர்சித்த ஆச்சாரிய பிரமோத் கிருஷ்ணம்

    December 3, 2025
    தேசியம்

    “அடுத்து மேற்கு வங்கத்திலும் காட்டாட்சியை அகற்றுவோம்” – பிரதமர் மோடி உறுதி

    December 3, 2025
    தேசியம்

    பிஹாரில் தனித்து போட்டியிட்ட ஒவைசி கட்சி 5 இடங்களில் வெற்றி

    December 3, 2025
    தேசியம்

    பிஹார் பெண்களின் ஞானமே என்டிஏ வெற்றிக்கு காரணம்: பாஜக மூத்த தலைவர் விளக்கம்

    December 3, 2025
    தேசியம்

    டெல்லி கார் குண்டுவெடிப்பு: புல்வாமாவில் மருத்துவர் உமர் நபியின் வீடு இடிப்பு

    December 3, 2025
    தேசியம்

    ‘பரகாமணி’ திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடித்த தேவஸ்தான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மர்ம சாவு: போலீஸார் விசாரணை

    December 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அதிதி ராவ் ஹைடாரி ஒரு காப்பக அங்கரகா குர்தா அணிந்து நவீன நேர்த்தியுடன் நகங்களை அணிந்துள்ளார் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • செயற்கைக்கோள்கள் பூமிக்கு திரும்பாமல் எப்படி விண்வெளியில் தங்கியிருக்கும் மற்றும் அதன் பின்னால் உள்ள அறிவியல் என்ன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • இந்த நாளின் உறவு குறிப்பு: மகிழ்ச்சியான பிணைப்புகளுக்கு சகோதரி ஷிவானியின் அறிவுரை: “உறவுக்குச் செல்லுங்கள்…” | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உங்கள் வாஷிங் மெஷின் மற்றும் ட்ரையரை குறைந்த கட்டணம் மற்றும் சிறந்த ஆற்றல் பயன்பாட்டிற்கு இயக்க இதுவே சிறந்த நேரம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தொழில்முனைவோர், குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்: வணிக வெற்றிக்காக எலோன் மஸ்க் சத்தியம் செய்யும் 5 பழக்கங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2026 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.