Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ட்ரோலுக்கு ஆளான பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்
    தேசியம்

    ட்ரோலுக்கு ஆளான பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்

    adminBy adminMay 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ட்ரோலுக்கு ஆளான பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி: தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை வீரர் வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி ட்ரோல் செய்யப்பட்டதற்கு தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் வினய் நர்வாலும் ஒருவர். திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில் அவர் தனது மனைவி ஹிமான்ஷி நர்வால் உடன் பஹல்காம் சென்றிருதபோது பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். வினய் நர்வால் உயிரிழப்பும், ஹிமான்ஷி கதறி அழுததும் நாடு முழுவதும் கவனம் பெற்றது.

    அண்மையில் ஹிமான்ஷி, “வினய் எங்கிருந்தாலும், ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று முழு தேசமும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகளுக்கு எதிராக யாரும் செயல்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு அமைதி வேண்டும், அமைதி மட்டுமே வேண்டும். நிச்சயமாக, எங்களுக்கு நீதி வேண்டும்.” என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில், ஹிமான்ஷி கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். தற்போது அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது தேசிய மகளிர் ஆணையம். ட்ரோலர்களைக் கண்டித்துள்ளது.

    இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “வினய் நர்வாலின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி ஹிமான்ஷி நர்வால் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்படுவதைக் காண்கிறோம். அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஒரு பெண் அவரது சித்தாந்தங்களை வெளிப்படுத்தியதற்காக ட்ரோல் செய்யப்படுவது என்பது எவ்வகையிலும் ஏற்பதற்கில்லை. மேலும், ஒருவரின் கருத்தை ஏற்பதையோ, மறுதலிப்பதையோ நாகரிகமாக செய்ய வேண்டும். தேசிய மகளிர் ஆணையம் ஒவ்வொரு பெண்ணின் மாண்பையும், மரியாதையையும் பாதுகாக்க விழைகிறது.” என்று தெரிவித்துள்ளது.

    மேலும், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாக தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளது. வினய் நர்வாலின் மதத்தைக் கேட்டு அவர் சுடப்பட்டதையும் தேசிய மகளிர் ஆணையம் சுட்டிக்காட்டி கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த நாடும் இந்த பயங்கரவாத தாக்குதலால் காயம்பட்டதோடு, ஆத்திரமடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    உ.பி.யில் பெயர் மாறியதால் வழக்கில் சிக்கியவர் 17 ஆண்டு சட்டப்போராட்டத்துக்கு பின் விடுதலை

    July 28, 2025
    தேசியம்

    ஆன்லைன் கேம் மூலமாக பெண்களை குறிவைக்கும் மதமாற்ற கும்பல்: போலீஸ் விசாரணையில் தகவல்

    July 28, 2025
    தேசியம்

    சிக்கிமின் சோ லா போர்க்களம் சுற்றுலா தலமாகிறது

    July 28, 2025
    தேசியம்

    பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சத்தீஸ்கர், ஜார்க்கண்டில் 7 மாவோயிஸ்ட்கள் உயிரிழப்பு

    July 28, 2025
    தேசியம்

    உத்தராகண்ட் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாப உயிரிழப்பு

    July 28, 2025
    தேசியம்

    ‘ஞான பாரத இயக்கம்’ திட்டத்துக்கு வித்திட்ட தஞ்சை மணிமாறன்: பிரதமர் மோடி புகழாரம்

    July 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டிமென்ஷியா வெற்றுப் பார்வையில் மறைக்கிறது: வல்லுநர்கள் கண்டறியப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அமைதியான அறிகுறிகள் தோன்றும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • உ.பி.யில் பெயர் மாறியதால் வழக்கில் சிக்கியவர் 17 ஆண்டு சட்டப்போராட்டத்துக்கு பின் விடுதலை
    • 10 நிமிடம் நிறுத்தப்படும் நிலையங்களில் ரயில் கழிப்பறையை சுத்தம் செய்ய உத்தரவு
    • ஒரு கொசு ஒரு கடியில் எவ்வளவு இரத்தம் குடிக்கிறது? அந்த சிறிய நமைச்சலுக்கு பின்னால் அதிர்ச்சியூட்டும் தொகை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆன்லைன் கேம் மூலமாக பெண்களை குறிவைக்கும் மதமாற்ற கும்பல்: போலீஸ் விசாரணையில் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.