Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 15 பேர் ராஜினாமா – புதிய கட்சியை தொடங்கினர்!
    தேசியம்

    டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 15 பேர் ராஜினாமா – புதிய கட்சியை தொடங்கினர்!

    adminBy adminMay 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் 15 பேர் ராஜினாமா – புதிய கட்சியை தொடங்கினர்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு அடுத்த பெரும் அதிர்ச்சியாக, டெல்லியில் மாநகராட்சியின் 15 கவுன்சிலர்கள் கட்சியிலிருந்து ராஜினாமா செய்து, இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர்.

    புதிதாக உருவாக்கப்பட்ட இந்திரபிரஸ்த விகாஸ் கட்சிக்கு ஹேம்சந்த் கோயல் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முகேஷ் கோயல், ஹிமானி ஜெயின், தேவிந்திர குமார், ராஜேஷ் குமார் லாடி, சுமன் அனில் ராணா, தினேஷ் பரத்வாஜ், ருணாக்‌ஷி சர்மா, மனிஷா, சாஹிப் குமார், ராக்கி யாதவ், உஷா சர்மா மற்றும் அசோக் பாண்டே போன்ற முக்கிய ஆம் ஆத்மி தலைவர்களும் இக்கட்சியில் இணைந்துள்ளனர். தற்போது முகேஷ் கோயலின் விலகல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில், அவர் டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சியின் அவைத் தலைவராகப் பணியாற்றினார்.

    “கடந்த ஓரிரு வருடங்களாக எந்த பொதுப் பணிகளையும் செய்ய முடியாததால் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சியைத் தொடங்கியுள்ளோம். இடையூறுகள் காரணமாக சபை ஒருபோதும் சுமுகமாக இயங்காத நிலை உள்ளது. மேலும், பல கவுன்சிலர்கள் எங்கள் புதிய கட்சியில் சேரக்கூடும்” என்று கோயல் கூறினார். இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கோயல் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆம் ஆத்மியிலிருந்து விலகிய கவுன்சிலர்கள் சமர்ப்பித்த கூட்டு ராஜினாமா கடிதத்தில், “நாங்கள் அனைவரும் 2022-ஆம் ஆண்டில் டெல்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டோம், ஆனால் 2022-இல் டெல்லி மாநகராட்சியில் ஆட்சிக்கு வந்த போதிலும், கட்சியின் உயர் தலைமையால் டெல்லி மாநகராட்சியை சுமுகமாக நடத்த முடியவில்லை.

    உயர்மட்டத் தலைமைக்கும் நகராட்சி கவுன்சிலர்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிகக் குறைவு. இதன் காரணமாக கட்சி எதிர்க்கட்சி வரிசைக்கு வந்தது. பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால், கவுன்சிலர்களான நாங்கள் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பிப்ரவரி மாத தொடக்கத்தில், ஆண்ட்ரூஸ் கஞ்சைச் சேர்ந்த அனிதா பசோயா, ஹரி நகரைச் சேர்ந்த நிகில் சப்ரானா மற்றும் ஆர்கே புரத்தைச் சேர்ந்த தர்மவீர் சிங் ஆகிய மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவுக்குத் தாவியதைத் தொடர்ந்து, டெல்லி மாநகராட்சியில் பாஜக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதேபோல கடந்த ஆண்டு செப்டம்பரில் மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவுக்கு தாவினர்.

    இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 25-ஆம் தேதி நடந்த மேயர் தேர்தல் போட்டியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி விலகியது. பாஜக கவுன்சிலர்களான ராஜா இக்பால் சிங் மற்றும் ஜெய் பகவான் ஆகியோர் டெல்லி மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களான மன்தீப் சிங் மற்றும் அரிபா கானை தோற்கடித்தனர். இரண்டு உயர் பதவிகளுக்கும் பதிவான மொத்தம் 142 வாக்குகளில், பாஜகவின் ராஜா இக்பால் சிங் 133 வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் காங்கிரஸின் மன்தீப் சிங் 8 வாக்குகளைப் பெற்றார். ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹார் தொழிலதிபரும், பாஜக பிரமுகருமான கோபால் கெம்கா சுட்டுக் கொலை

    July 5, 2025
    தேசியம்

    ‘வரிவிதிப்பு விவகாரத்தில் ட்ரம்ப்பிடம் மோடி அடிபணிவாரா?’ – ராகுல் காந்திக்கு பியூஷ் கோயல் பதில்

    July 5, 2025
    தேசியம்

    20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மராத்தி’யால் ஒன்றிணைந்த உத்தவ் – ராஜ் தாக்கரே: பின்னணி என்ன?

    July 5, 2025
    தேசியம்

    வர்த்தக ஒப்பந்தத்துக்கான ட்ரம்ப்பின் காலக்கெடுவுக்கு மோடி பணிவார்: ராகுல் காந்தி

    July 5, 2025
    தேசியம்

    இந்திய கடற்படையில் போர் விமானியாக பயிற்சி பெற்ற முதல் பெண் ஆஸ்தா பூனியா!

    July 5, 2025
    தேசியம்

    ட்ரோன், மோப்ப நாய் உதவியுடன் காஷ்மீர் கிஸ்த்வர் காடுகளில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “ஹபீஸ் சயீத், மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க பாக். தயார்தான், ஆனால்…” – பிலாவல் பூட்டோ
    • ‘பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோராக உயர்த்திய ஈஷா’ – மத்திய அமைச்சர் பாராட்டு
    • உளவியின்படி, வாதங்களை சிறப்பாகக் கையாள உதவும் நடைமுறை தந்திரங்கள்
    • பிஹார் தொழிலதிபரும், பாஜக பிரமுகருமான கோபால் கெம்கா சுட்டுக் கொலை
    • விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை: ஜூலை 15-ல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.