இந்நிலையில் ஹரியானாவின் தவுஜ், நூஹ் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் டெல்லி போலீஸார் மற்றும் மத்திய அமைப்புகளின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு ஒருங்கிணைந்த சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் உமர் நபிக்கு தெரிந்த 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 3 பேரை டெல்லி போலீஸார் தங்கள் பிடியில் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து அதிகார வட்டாரங்கள் கூறியதாவது: ஹ் பகுதியில் அல் பலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த முகம்மது, முஸ்தாகிம் என்ற மருத்துவர்களை என்ஐஏ உதவியுடன் டெல்லி போலீஸார் தங்கள் பிடியில் கொண்டு வந்தனர். இவர்கள் உமர் நபியின் நெருங்கிய நண்பர்கள். மேலும் தீவிரவாத சதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் முஜாம்மில் உடன் தொடர்பில் இருந்துள்ளனர்.

