Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»டெல்லியில் லஞ்சம் கேட்ட ஐஆர்எஸ் அதிகாரி கைது: ரூ.1 கோடி, 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
    தேசியம்

    டெல்லியில் லஞ்சம் கேட்ட ஐஆர்எஸ் அதிகாரி கைது: ரூ.1 கோடி, 3.5 கிலோ தங்கம் பறிமுதல்

    adminBy adminJune 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டெல்லியில் லஞ்சம் கேட்ட ஐஆர்எஸ் அதிகாரி கைது: ரூ.1 கோடி, 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: லஞ்சம் கேட்ட இந்திய வருவாய்த் துறை (ஐஆர்எஸ்) அதிகாரியை டெல்லியில் சிபிஐ கைது செய்தது. அவரிடமிருந்து ரூ.1 கோடி ரொக்கம் மற்றும் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    டெல்லியில் வருமான வரி செலுத்துவோர் சேவை துறை இயக்குநரகத்தின் கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றுபவர் அமித் குமார் சிங்கால். இவர் 2007-ம் ஆண்டு இந்திய வருவாய்த் துறை பிரிவைச் சேர்ந்தவர். இந்நிலையில், அதிகாரி சிங்கால் மீது டெல்லியில் லாபினோ’ஸ் பீட்சா நிறுவனத்தின் உரிமையாளர் சனம் கபூர் என்பவர் சிபிஐயிடம் புகார் அளித்தார்.

    அதனடிப்படையில் டெல்லி மற்றும் பஞ்சாபில் சிங்காலுக்கு சொந்தமான வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.1 கோடி ரொக்கம் மற்றும 3.5 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் நேற்று கூறியதாவது: சனம் கபூருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பிரச்சினையை தீர்த்துவைக்க ரூ.45 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார் அதிகாரி சிங்கால். மேலும், லஞ்சம் தராவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிப்பதாகவும் மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து கபூர் அளித்த புகாரை தீவிரமாக விசாரித்தோம். அதன்பிறகுதான் அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் வகுத்த திட்டத்தின்படி, அமித் குமார் சிங்காலின் உதவியாளர் ஹர்ஷ் கோடக் என்பவர் பீட்சா நிறுவன உரிமையாளரான சனம் கபூரிடம் முதல்கட்டமாக ரூ.25 லட்சத்தை லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கினார். டெல்லிக்கு பணி மாற்றலாகி வருவதற்கு முன்னர் மும்பையில் சுங்கத் துறையில் இணை ஆணையராக சிங்கால் பணியாற்றி உள்ளார். சிங்காலின் உதவியாளர் ஹர்ஷ் கோடக்கையும் கைது செய்துள்ளோம்.

    கபூர் அளித்த தகவல்கள் அனைத்தையும் தீவிரமாக விசாரணை நடத்திய பிறகே அதிகாரி அமித் குமார் சிங்கால், அவரது உதவியாளர் ஹர்ஷ் கோட்டக் ஆகியோரை கைது செய்தோம். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். வரும் 13-ம் தேதி வரை அவர்களை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    முதல் கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் 2026 ஏப்ரல் 1 முதல் தொடக்கம்

    June 30, 2025
    தேசியம்

    ஒடிசாவின் புரி ரதயாத்திரை கூட்ட நெரிசலில் 3 பக்தர்கள்  உயிரிழப்பு

    June 30, 2025
    தேசியம்

    கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: முக்கிய குற்றவாளி மனோஜித் ஒரு சைக்கோ என குற்றச்சாட்டு

    June 30, 2025
    தேசியம்

    மாணவ, மாணவியரின் உடல்நலன், மனநலனை மேம்படுத்த கடும் எதிர்ப்பை மீறி கேரள பள்ளிகளில் ஜும்பா நடன பயிற்சி

    June 30, 2025
    தேசியம்

    ஹரியானாவில் முன்னாள் காங். எம்எல்ஏ-வின் ரூ.557 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

    June 30, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா இழந்த விமானம் குறித்து காங்கிரஸ் மீண்டும் கேள்வி

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா பாஜக? – நாராயணன் திருப்பதி நேர்காணல்
    • Prepieabeades: வாரத்திற்கு 150 நிமிட உடற்பயிற்சி ப்ரீடியாபயாட்டீஸை மாற்றியமைக்கலாம் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பிக் பேங் முதல் பிரகாசமான கருந்துளை குண்டுவெடிப்புகளை நாசா கவனிக்கிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கல்விக்கு உதவும் ‘சமூக வலைதளம்’
    • அமித் ஷா குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.