Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலக கட்டிடத்தை திறந்தார் மோடி
    தேசியம்

    டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலக கட்டிடத்தை திறந்தார் மோடி

    adminBy adminAugust 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலக கட்டிடத்தை திறந்தார் மோடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: டெல்லியில் கடமை பாதை அருகே புதிதாக கட்டப்பட்ட மத்திய தலைமை செயலக கட்டிடம் ‘கர்தவ்யா பவன்-3’-யை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

    தலைநகர் டெல்லியில் உள்ள பழமையான அரசு கட்டிடங்கள் எல்லாம். ‘சென்ட்ரல் விஸ்டா’ மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கட்டிடங்களுக்கு மாற்றப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் தான் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது.

    டெல்லி ராய்சினா ஹில்ஸ் பகுதியில் நார்த் பிளாக் மற்றும் சவுத் பிளாக் பகுதியில் கடந்த 90 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மத்திய அமைச்சகங்கள் மற்றும் இதர துறை அலுவலகங்கள், சாஸ்திரி பவன், கிரிஷி பவன், உத்யோக் பவன் மற்றும் நிர்மன் பவன் போன்ற பழைய கட்டிடங்களில் செயல்பட்டு வந்த அலுவலகங்களை ஒரே இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக டெல்லி கடமை பாதை அரு​கே, மத்​திய தலைமை செயல​கத்தை ‘கர்​தவ்யா பவன்’ என்ற பெயரில் 10 அடுக்​கு​மாடி கட்​டிடங்​களை மத்​திய வீட்​டு​வசதி மற்​றும் நகர்ப்​புற விவ​காரத்​துறை அமைச்​சகம் கட்டி வரு​கிறது. இந்த கட்​டிடங்​கள் தற்​போதைய தேவைக்கு ஏற்ற வகை​யில் நவீன வடி​வில் கட்​டப்​படு​கின்​றன. இதில் முடிவடைந்த நிலை​யில் உள்ள கர்​தவ்யா பவன்-3 கட்​டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்​தார்.

    இந்த புதிய கட்​டிடத்​துக்கு மத்​திய உள்​துறை, வெளி​யுறவுத்​துறை, ஊரக மேம்​பாட்​டுத் துறை, குறு,சிறு மற்​றும் நடுத்தர தொழில் துறை, மத்​தி​யப் பணி​யாளர், பெட்​ரோலி​யம் மற்​றும் இயற்கை எரி​வாயு ஆகிய அமைச்​சகங்​கள் மற்​றும் முதன்மை அறி​வியல் ஆலோ​சகரின் அலு​வல​கம் ஆகியவை மாறவுள்​ளன.

    வெளிப்​படை​யான நிர்​வாகம்: இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: நாடு முழு​வதும் கட்​டமைப்​பு​களை புதுப்​பிக்​கும் தொலைநோக்​குடன் மத்​திய அரசு செயல்​பட்டு கொண்​டிருக்​கிறது. கடந்த 11 ஆண்​டு​களில், வெளிப்​படை​யான நிர்​வாகத்​தை​யும், மக்​கள் நலன் சார்ந்த பணி​களை​யும் நாட்டு மக்​கள் பார்த்​துள்​ளனர்.

    சென்ட்​ரல் விஸ்டா திட்​டம் மற்​றும் இதர கட்​டமைப்பு வசதி​கள் எல்​லாம் நாட்​டின் உலகளா​விய தொலைநோக்கை வெளிப்​படுத்​துகிறது. மத்​திய அரசு அலு​வல​கங்​கள் எல்​லாம் ஆங்​கிலேயர் காலத்து பழமை​யான கட்​டிடங்​களில், போதிய வசதி​யின்றி பல ஆண்​டு​களாக இயங்கி வந்​தன. அங்கு பணி​யாற்​று​பவர்​களின் நலனுக்​காக கர்​தவ்யா பவன்​கள் கட்​டப்​படு​கின்​றன.

    மேக் இன் இந்​தியா மற்​றும் தற்​சார்பு இந்​தி​யா​வின் வெற்றி கதையை எழுத நாம் இணைந்து பணி​யாற்ற வேண்​டும். நாட்​டின் உற்​பத்​தியை அதி​கரிப்​பதே நமது தீர்​மான​மாக இருக்க வேண்​டும். நாட்​டின் கனவு​களை நிறைவேற்​றும் தீர்​மானத்தை கர்​தவ்யா பவன் வெளிப்​படுத்​துகிறது.

    இது வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யா​வுக்கு வழி​காட்​டும். இந்​தி​யா​வுடன் சுதந்​திரம் பெற்ற நாடு​கள் எல்​லாம் வளர்ச்​சி​யடைந்​த​போது, இந்​தியா மட்​டும் முன்​னேறாமல் இருந்​தது ஏன் என்​பது பற்றி ஆழமாக சிந்​திக்க வேண்​டிய நேரம் இது. தற்​போதைய பிரச்​சினை​களை நாம் எதிர்​கால தலை​முறை​யினருக்கு விட்டு செல்​லக் கூடாது என்​பது​தான் நமது பொறுப்​பாக இருக்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர் கூறி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தேர்தல் ஆணையத்தை நம்பாவிட்டால் எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்: பாஜக

    August 9, 2025
    தேசியம்

    நாடு முழுவதும் உற்சாகத்துடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்!

    August 9, 2025
    தேசியம்

    இந்திய நீதி அறிக்கை 2025: முதல் 5 இடங்களைப் பிடித்த தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள்!

    August 9, 2025
    தேசியம்

    அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை

    August 9, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு

    August 9, 2025
    தேசியம்

    ‘சமஸ்கிருதம்’ காலத்தால் அழியாத அறிவின் ஆதாரமாக உள்ளது: பிரதமர் மோடி வாழ்த்து

    August 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மாநில கல்விக் கொள்கை தன்னம்பிக்கை, சுய திறனை ஊக்குவிக்கும்: முத்​தரசன் வரவேற்பு
    • பாதுகாப்பு தளவாட உற்பத்தி சாதனை அளவாக ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்வு
    • தமன்னா பாட்டியா 10 முறை வளைவில் தீ வைத்தார்
    • ராட்வீலர் உள்ளிட்ட ஆக்ரோஷமான நாய்களை முறைப்படுத்த கோரிய வழக்கு: தலைமை கால்நடை அதிகாரி ஆஜராக உத்தரவு
    • ரோஸ்மேரி நீர் முதல் மெல்லும் கம் வரை: மூளையை கூர்மைப்படுத்துவதற்கும் நினைவகத்தை அதிகரிப்பதற்கும் 5 ஆச்சரியமான வழிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.