Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»டெல்லியின் பல பகுதிகளில் கனமழை – யமுனை நதியில் அபாய அளவை தாண்டி கரைபுரளும் வெள்ளம்
    தேசியம்

    டெல்லியின் பல பகுதிகளில் கனமழை – யமுனை நதியில் அபாய அளவை தாண்டி கரைபுரளும் வெள்ளம்

    adminBy adminSeptember 3, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டெல்லியின் பல பகுதிகளில் கனமழை – யமுனை நதியில் அபாய அளவை தாண்டி கரைபுரளும் வெள்ளம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: டெல்லி – என்சிஆரின் பல பகுதிகளில் இன்றும் கனமழை பெய்ததை அடுத்து, யமுனை ஆற்றில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டி பாய்ந்தோடுகிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் 7,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    டெல்லி – என்சிஆரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இன்று நண்பகல் 1 மணி நிலவரப்படி வெள்ளம் அபாய அளவான 205.33 மீட்டரைத் தாண்டி, 207 மீட்டரை எட்டியது. இதனால், கரையோர பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். கரையோர பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள், கடைகள், சந்தை பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததை அடுத்து, கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்காக, 25 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கரையோரங்களில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் முயற்சிகளை தேசிய பேரிடர் மீட்புப் படை முடுக்கிவிட்டுள்ளது. தற்போது நான்கு குழுக்கள் களத்தில் உள்ளதாகவும், 14-18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் கமாண்டன்ட் ஞானேஸ்வர் சிங் தெரிவித்துள்ளார்.

    யமுனா பஜார் பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். பிஸ்கட்டுகள், பிரெட் உள்ளிட்டவற்றை உண்டு அவர்கள் பசியாறினர். கனமழை காரணமாக நொய்டாவின் செக்டர் 167 உட்பட பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மழை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி வானிலை ஆய்வு மையம், இன்று (புதன்கிழமை) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மிதமான மழை பெய்யும். நாளை இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்த வாரம் முழுவதும் இதேபோன்ற நிலையே நீடிக்கும். செப்.5-ம் தேதி மிதமான மழையும், செப்.6-ம் தேதி இடியுடன் கூடிய மழையும், செப்.7 மற்றும் 8-ம் தேதிகளில் வானம் மேகமூட்டத்துடனும் இருக்கும் என தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    “யாருடைய தாயையும் அவதூறாக பேசக் கூடாது; ஆனால், பிரதமர் மோடி…” – தேஜஸ்வி யாதவ் கருத்து

    September 3, 2025
    தேசியம்

    விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஜெய்சங்கர் நம்பிக்கை

    September 3, 2025
    தேசியம்

    அனைத்து நக்சல்களும் சரணடையும்; பிடிபடும்; கொல்லப்படும் வரை மோடி அரசு ஓயாது: அமித் ஷா

    September 3, 2025
    தேசியம்

    பிஆர்எஸ் கட்சியில் இருந்து கவிதா ராஜினாமா: விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என அறிவிப்பு

    September 3, 2025
    தேசியம்

    ​காங்கிரஸ், ஆர்ஜேடி நிகழ்ச்சியில் என் தாய் பற்றி அவதூறாக பேசியது எனக்கு மட்டுமல்ல, அனைத்து தாய்மாருக்கும் அவமானம்: பிரதமர் மோடி

    September 3, 2025
    தேசியம்

    பிஹார் பேரணியில் ‘பைக்’ இழந்தவருக்கு புதிய ‘பல்சர்’ பரிசளித்த ராகுல் காந்தி

    September 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மீலாது நபி, தொடர் விடுமுறை: 2,470 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு
    • வைட்டமின் மின் எண்ணெய் உங்கள் முடி வளர்ச்சி, உச்சந்தலையில் ஆரோக்கியம் மற்றும் பிரகாசிக்க உதவுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘நான் அவரை இழந்துவிட்டேன் என்று நினைத்தேன்’: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் இர்விங் உணவகத்தில் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தமிழக ஹோட்டல்களில் பெப்சி, கோக் முதலான அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க முடிவு
    • 5 இருதயநோய் நிபுணர்கள் தங்கள் இதயங்களை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க தங்களை பின்பற்றும் அன்றாட பழக்கங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.