Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தையிடம் ஹரியானா போலீஸ் தீவிர விசாரணை – நடந்தது என்ன?
    தேசியம்

    டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தையிடம் ஹரியானா போலீஸ் தீவிர விசாரணை – நடந்தது என்ன?

    adminBy adminJuly 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தையிடம் ஹரியானா போலீஸ் தீவிர விசாரணை – நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    குருகிராம்: ஹரி​யானா மாநிலம் குரு​கி​ராமை சேர்ந்த டென்​னிஸ் வீராங்​கனை ராதிகா யாதவ். இவர் மாநில அளவி​லான போட்டிகளில் விளை​யாடி வந்​தார். குரு​கி​ராமின் சுஷாந்த் லோக் பகு​தி​யில் இவர் குடும்​பத்​துடன் வசித்து வந்த நிலை​யில் நேற்று முன்​தினம் வீ்ட்​டில் ராதிகாவை அவரது தந்தை தீபக் யாதவ் (49) துப்பாக்கியால் சுட்டதில் உயி​ரிழந்​தார்.

    இதுகுறித்து குரு​கி​ராம் காவல் துறை செய்​தித் தொடர்​பாளர் சந்​தீப் குமார் கூறுகை​யில், “வி​சா​ரணை​யில் மகளை சுட்​டுக்​கொன்​ற​தாக தீபக் ஒப்​புக்​கொண்​டுள்​ளார். உரிமம் பெற்ற ஒரு துப்​பாக்​கியை கைப்​பற்​றி​யுள்​ளோம். ராதி​கா, டென்​னிஸ் அகாடமி நடத்தி வரு​வ​தில் தீபக்​கிற்கு உடன்​பாடில்​லை.

    நாம் நல்ல நிலை​யில் இருப்​ப​தால் அகாடமி நடத்த வேண்​டிய அவசி​யமில்லை என்று மகளிடம் கூறி​யுள்​ளார். இதுகுறித்து அவர்​களுக்​குள் அடிக்​கடி வாக்​கு​வாதங்​கள் ஏற்​பட்​டுள்​ளன” என்​றார். இன்​ஸ்​டாகி​ராமில் ராதிகா ரீல்ஸ் வெளி​யிடு​வதும் மியூசிக் வீடியோ ஒன்​றில் தோன்​றியதும் தீபக் யாதவுக்கு பிடிக்கவில்லை.

    இதுகுறித்து போலீஸ் அதி​காரி​கள் கூறுகை​யில், “கொலைக்கு அத்​தகைய ஒரு காரணம் இருப்​ப​தாக இது​வரை தெரிய​வர​வில்​லை’’ என்​றனர். இந்​நிலை​யில் தீபக் யாதவை குரு​கி​ராம் நீதி​மன்​றத்​தில் போலீ​ஸார் நேற்று ஆஜர்​படுத்​தினர். இதில் தீபக் யாதவை ஒரு நாள் போலீஸ் காவலில் விசா​ரிக்க நீதி​மன்​றம் அனு​மதி வழங்​கியது.

    ராதிகா யாதவ் நேற்று முன்​தினம் ராதிகா காலை உணவை தயார் செய்​து​கொண்​டிருந்​த​போது அவரை தீபக் தனது துப்​பாக்​கி​யால் 5 முறை சுட்​டுள்​ளார். இதில் 3 குண்​டு​கள் ராதி​கா​வின் முதுகில் பாய்ந்​தன. பலமாத குடும்ப பிரச்​சினையை தொடர்ந்து ராதிகா துப்​பாக்​கி​யால் சுடப்​பட்​டுள்​ளார். மகளின் வரு​மானத்தை நம்பி வாழ்​வ​தாக சொந்த ஊர் மக்​களால் பலமுறை கேலி செய்​யப்​பட்​ட​தாக போலீ​ஸாரிடம் தீபக் கூறி​யுள்​ளார்.

    ஆனால் தீபக்​கின் இந்த வாக்​குமூலத்தை அவரை நன்கு அறிந்த அவரது சொந்த ஊரான வஜி​ரா​பாத்தை சேர்ந்த ஒரு​வர் மறுத்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறுகை​யில், “குரு​கி​ராமில் தீபக்​கிற்கு பல சொத்​துகள் உள்​ளன. இவற்​றின் மூலம் ரூ.15 லட்​சம் முதல் ரூ.17 லட்​சம் வரை அவர் மாத வாடகை பெற்று வரு​கிறார்.

    அவருக்கு ஆடம்பர பண்ணை வீடும் உள்​ளது. அவர் பணக்​காரர் என்​பது கிராமத்​தில் உள்ள அனை​வருக்​கும் தெரி​யும். இவ்​வளவு பணம் இருக்​கும் ஒரு​வரை கிராமத்​தில் யார் கேலி செய்​யப் போகிறார்​கள்? தீபக் தனது மகளை மிக​வும் நேசித்​தார்.

    மகளின் டென்​னிஸ் பயிற்​சிக்​காக தனது படிப்பை கைவிட்​டுள்​ளார். மகளுக்கு ரூ.2 லட்​சம் மதிப்​புள்ள டென்​னிஸ் ராக்​கெட்​டு​களை வாங்​கிக் கொடுத்​தார். எனவே இந்த கொலைக்கு பின்​னால் தனிப்​பட்ட காரணம் ஏதாவது இருக்​கும்​. டென்​னிஸ்​ அல்​லது டென்​னிஸ்​ அகாட​மி காரண​மாக இருக்​காது’’ என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    விமானத்தில் திடீர் கோளாறு: 200 ஏர் இந்தியா பயணிகள் 6 மணி நேரம் பரிதவிப்பு

    September 12, 2025
    தேசியம்

    வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட உத்தராகண்டுக்கு ரூ.1,200 கோடி உதவி: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

    September 12, 2025
    தேசியம்

    தெலங்கானாவில் தொடர் கனமழை மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழப்பு

    September 12, 2025
    தேசியம்

    ரூ.1.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக பி.எப். பிராந்திய ஆணையர் கைது

    September 12, 2025
    தேசியம்

    இமாச்சலில் கன மழையால் சேதம் 577 சாலைகளில் போக்குவரத்து தடை

    September 12, 2025
    தேசியம்

    கர்​நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரூ.4.5 கோடியில் தங்க, வைர ஆபரணங்கள் வழங்கிய இளையராஜா

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • விமானத்தில் திடீர் கோளாறு: 200 ஏர் இந்தியா பயணிகள் 6 மணி நேரம் பரிதவிப்பு
    • ஓமந்தூரார், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவு விண்ணப்பிக்க இன்று கடைசி
    • ஆசிய கோப்பை ஹாக்கி: இந்திய அணி தோல்வி
    • பட்டியலின ஊழியரை காலில் விழவைத்ததாக வெடித்த சர்ச்சை! – ஆளும் கட்சியினர் என்பதால் அடக்கிவாசிக்கிறதா போலீஸ்?
    • ஸ்ட்ரே கிட்ஸின் கே -பாப் ஐடல் ஹ்யூன்ஜின் – தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலிருந்து கற்றுக்கொள்ள 5 பாணி பாடங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.