Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, December 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 போர்க் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு
    தேசியம்

    ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 போர்க் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு

    adminBy adminJune 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 போர்க் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜூன் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.

    இந்திய கடற்படையில் 135-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் ஆகும். 20 நீர்மூழ்கிகளும் கடற்படையில் உள்ளன. வரும் 2030-ம் ஆண்டில் இந்திய போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 160 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வரும் 2035-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய கடற்படைக்காக 3-வது விமானந்தாங்கி போர்க்கப்பலை தயாரிக்கும் பணி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஐஎன்எஸ் விஷால் என பெயரிடப்பட்டு உள்ள இந்த போர்க்கப்பல் வரும் 2030-ம் ஆண்டில் கடற்படையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சூழலில் நடப்பு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதத்துக்குள் 10 புதிய போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக வரும் 18-ம் தேதி ஐஎன்எஸ் அர்னாலா கடற்படையில் இணைகிறது. இது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர்க்கப்பல் ஆகும். நீர்மூழ்கிகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இதே வகையை சேர்ந்த மேலும் 2 போர்க்கப்பல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.

    ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் தமால் போர்க்கப்பல் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதுவும் விரைவில் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. மேலும் நீலகிரி வகையை சேர்ந்த போர்க்கப்பல் நடப்பாண்டு இறுதிக்குள் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.

    இதுதொடர்பாக கடற்படை வட்டாரங்கள் கூறும்போது, “அமெரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன. ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதன் மூலம் இந்த பட்டியலில் இந்தியாவும் இணைந்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 88 போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக வரும் டிசம்பர் மாதத்துக்குள் 10 போர்க்கப்பல்கள் கடற்படையில் இணைகின்றன” என்று தெரிவித்தன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆந்திரா ரூ.13 லட்சம் கோடி முதலீடுகளை பெற்றுள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

    December 2, 2025
    தேசியம்

    114 வயதில் காலமான சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

    December 2, 2025
    தேசியம்

    லாலு குடும்பத்தில் வெடிக்கும் கோஷ்டி மோதல்: அரசியலில் இருந்து விலகுவதாக மகள் ரோகிணி அறிவிப்பு 

    December 2, 2025
    தேசியம்

    டெல்லி குண்டுவெடிப்பு விவகாரம்: டெட் டிராப் இ-மெயில் பயன்படுத்திய தீவிரவாதிகள்

    December 2, 2025
    தேசியம்

    ராஜேந்திர பாலாஜியை பழனிசாமி அடக்கி வைக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

    December 2, 2025
    தேசியம்

    100 தோப்புக் கரணம் போட்டதால் 6-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

    December 2, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தர்மேந்திரா
    • “பாஜகவின் அடுத்த வெற்றி இலக்கு தமிழகம், மேற்கு வங்கம்தான்!” – மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் நேர்காணல்
    • மைக்ரோசாப்ட் சிஇஓவுக்கு ரூ.850 கோடி சம்பளம்
    • பீட்ரூட் ஜூஸ் நன்மைகள்: தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பது நல்ல ஆரோக்கியத்தின் ரகசியமா? நன்மைகள் மற்றும் அதை தவிர்க்கும் போது தெரிந்து கொள்ளுங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆந்திரா ரூ.13 லட்சம் கோடி முதலீடுகளை பெற்றுள்ளது: முதல்வர் சந்திரபாபு நாயுடு தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.