Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 7
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
    தேசியம்

    ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

    adminBy adminSeptember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் இருந்து 45 ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    தமிழகத்தில் இருந்து சென்னை மயிலாப்பூர் பிஎஸ் செகண்ட்ரி பள்ளி முதல்வர் ரேவதி பரமேஸ்வரன், திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள பாரதியார் நூற்றாண்டு அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோர் மத்திய அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் 45 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நல்லாசிரியர் விருதினை வழங்க உள்ளார்.

    இந்த சூழலில் டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டில் நல்லாசிரியர்களுக்கு நேற்று சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. பின்னர் அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்தால் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம், இரட்டை கொண்டாட்டமாக மாறியிருக்கிறது. ஜிஎஸ்டி வரி மேலும் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஜிஎஸ்டி வரி அமல் செய்யப்பட்டது இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய சீர்திருத்தம் ஆகும். தற்போது ஜிஎஸ்டி 2.0 வரி விகிதம் நவராத்திரியின் முதல் நாளில் அமல் செய்யப்பட உள்ளது. இதன்படி இனிமேல் 5 சதவீதம், 18 சதவீதம் என இரு வரி அடுக்குகள் மட்டுமே அமலில் இருக்கும். புதிய வரி விகிதத்தால் சாமானிய மக்களின் வீட்டுச் செலவு கணிசமாக குறையும். மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும். அதேநேரம் ஜிஎஸ்டி வரி விகித மாற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கம் அளிக்கும்.

    21-ம் நூற்றாண்டில் இந்தியா மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும். செங்கோட்டையில் சுதந்திர தின உரையாற்றிபோது சுயசார்பு இந்தியா குறித்த கருத்துகளை எடுத்துரைத்தேன். இதுதொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆசிரியர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒரு தாய், குழந்தையை பெற்றெடுக்கிறார்.

    அந்த குழந்தைக்கு கல்வி போதித்து ஒளிமயமான எதிர்காலத்தை ஆசிரியரே உருவாக்கி கொடுக்கிறார். அந்த வகையில் எதிர்கால இந்தியாவை, ஆசிரியர்களே வடிவமைத்து வருகின்றனர். நாடு முழுவதும் பணியாற்றும் கோடிக்கணக்கான ஆசிரியர்கள், வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு அடித்தளமிட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    யமுனை நதியில் கரைபுரளும் வெள்ளம்: உத்தரகாசியில் மேகவெடிப்பு

    September 7, 2025
    தேசியம்

    ‘பாஜக பின்னணியில் தேர்தல் ஆணையம்’ – வாக்கு திருட்டு விவகாரத்தில் கார்கே விமர்சனம்

    September 7, 2025
    தேசியம்

    டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற ஜைனர்களின் மத நிகழ்ச்சியில் இரண்டு தங்க கலசங்கள் திருட்டு

    September 7, 2025
    தேசியம்

    ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி மறுப்பு

    September 7, 2025
    தேசியம்

    தேனிலவில் கணவன் கொலை வழக்கு: சோனம் உட்பட 5 பேருக்கு எதிராக 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

    September 7, 2025
    தேசியம்

    ரூ.12 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: வங்கதேசத்து பெண் உட்பட 12 பேர் கைது

    September 7, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கச்சத்தீவு குறித்த பேச்சுவார்த்தை அவசியமில்லை: இலங்கை அமைச்சர்
    • ஆசிரியர்கள் கல்வித் தகுதியை உறுதி செய்ய வேண்டும்; அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்
    • ”எனக்கு ஆதரவாக ராஜினாமா செய்தவர்களுக்கு நன்றி”: செங்கோட்டையன்
    • கடற்கரைகள் முதல் பண்டைய இடிபாடுகள் வரை: புதுச்சேரியை வரையறுக்கும் 5 அனுபவங்கள்!
    • யமுனை நதியில் கரைபுரளும் வெள்ளம்: உத்தரகாசியில் மேகவெடிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.