Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் ரூ.2 லட்சம் கோடி வருவாய் பாதிப்பு: இழப்பீடு கோரும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்
    தேசியம்

    ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் ரூ.2 லட்சம் கோடி வருவாய் பாதிப்பு: இழப்பீடு கோரும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்

    adminBy adminAugust 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் ரூ.2 லட்சம் கோடி வருவாய் பாதிப்பு: இழப்பீடு கோரும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஜிஎஸ்டி விகித சீர்​திருத்​தங்​களை மேற்​கொள்ள மத்​திய அரசு தீவிர நடவடிக்கை மேற்​கொண்​டுள்​ளது. இதனால், மாநிலங்​களுக்கு சுமார் ரூ.1.5 லட்​சம் கோடி முதல் ரூ.2 லட்​சம் கோடி வரை வரு​வாய் இழப்பு ஏற்​படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்​து, மாநிலங்​களுக்கு ஏற்​படும் வரு​வாய் பாதிப்பை ஈடு செய்​யும் வகை​யில் மத்​திய அரசு இழப்​பீடு வழங்க வேண்​டும் என்ற கோரிக்கை எதிர்க்​கட்​சிகள் ஆளும் மாநிலங்​கள் சார்​பில் முன்​வைக்​கப்​பட்​டுள்​ளது.

    இதுதொடர்​பாக, இமாச்சல பிரதேசம், ஜார்க்​கண்ட், கர்​நாட​கா, கேரளா, பஞ்​சாப், தமிழ்​நாடு, தெலுங்​கானா மற்​றும் மேற்கு வங்​கம் ஆகிய 8 மாநிலங்​களின் நிதி அமைச்​சர்​கள் செப்​டம்​பர் 3 மற்​றும் 4 தேதி​களில் நடை​பெறும் ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டத்​தில் தங்​களது முன்​மொழிவை வழங்க முடிவு செய்​துள்​ளன.

    இதுகுறித்து காங்​கிரஸ் கட்சி ஆளும் கர்​நாடக மாநில நிதி​யமைச்​சர் கிருஷ்ணா பைரே கவுடா கூறிய​தாவது: மத்​திய அரசின் ஜிஎஸ்டி விகித சீர்​திருத்​தத்​தால் ஒவ்​வொரு மாநில​மும் அதன் தற்​போதைய சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) வரு​வா​யில் 15-20 சதவீதத்தை இழக்​கும் என்று மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

    20 சதவீத ஜிஎஸ்டி வரு​வாய் இழப்பு என்​பது நாடு முழு​வதும் உள்ள மாநில அரசுகளின் நிதி அமைப்பை கடுமை​யாக சீர்​குலைக்​கும். எனவே, வரு​வாய் நிலைபெறும் வரை 5 ஆண்​டு​களுக்கு மாநிலங்​களுக்கு இழப்​பீடு வழங்​கப்பட வேண்​டும். ஜிஎஸ்டி விகிதங்​களைக் குறைத்து அடுக்​கு​களைக் குறைப்​ப​தற்​கான மத்​திய அரசின் தற்​போதைய திட்​டம் நிகர வரி விகிதத்தை 10 சதவீத​மாகக் குறைக்​கும்.

    இதனால் ஏற்​படும் வரு​வாய் இழப்பு என்​பது மக்​களை மட்​டுமின்றி வளர்ச்சி பணி​களை​யும் கடுமை​யாக பாதிக்​கும். போது​மான வரு​வாய் ஆதா​ரம் இல்லை என்​றால் அது மாநில சுயாட்​சி​யை​யும் பாதிப்​புக்கு உள்​ளாக்​கும். இவ்​வாறு கவுடா தெரி​வித்​தார். வரு​வாய் பாது​காப்​பைக் கணக்​கிடு​வதற்​கான அடிப்​படை ஆண்டை 2024-25 -ஆக நிர்​ண​யிக்க வேண்​டும் என்று 8 மாநிலங்​கள்​ சார்​பில்​ வலி​யுறுத்​தப்​பட்​டுள்​ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு: நாளை தொடங்கி அக்.7 வரை நடக்கிற‌து

    September 21, 2025
    தேசியம்

    ஜெகன் ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை: தேவஸ்தான ஊழியர் திருடும் வீடியோ வெளியானது 

    September 21, 2025
    தேசியம்

    இந்தியா தற்சார்பு நாடாக மாற வேண்டும்: குஜராத்தில் ரூ.34,200 கோடி திட்டங்களை தொடங்கி பிரதமர் மோடி பேச்சு

    September 21, 2025
    தேசியம்

    நாடு முழுவதும் மருத்துவர் எண்ணிக்கையை சீராக உயர்த்த மத்திய அரசு உறுதி: தேசிய மருத்துவ ஆணைய தலைவர் தகவல்

    September 21, 2025
    தேசியம்

    ம.பி. சுரங்கத்தில் 8 வைரங்களை தோண்டி எடுத்த பெண்

    September 21, 2025
    தேசியம்

    ஓட்டலில் வெடிகுண்டு தயாரித்த தீவிரவாதி கைது

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நினைத்ததை நிறைவேற்றும் அகரம் பாலமுருகன் | ஞாயிறு தரிசனம்
    • ஷூ வடிவம் தோரணை மற்றும் வலியை எவ்வாறு பாதிக்கிறது: கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்க்க சரியான பாதணிகளைத் தேர்வுசெய்ய ஒரு எளிய வழிகாட்டி – இந்தியாவின் டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கர்நாடக மாநிலத்தில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு: நாளை தொடங்கி அக்.7 வரை நடக்கிற‌து
    • மாணவர்களிடம் சாதிய உணர்வு போன்ற பிற்போக்குத்தனம் வந்துவிடக் கூடாது: ஆசிரியர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
    • ஜெகன் ஆட்சியின்போது திருப்பதி உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை: தேவஸ்தான ஊழியர் திருடும் வீடியோ வெளியானது 

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.