Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பில் 60 பேர் பலி: உயிர் பிழைத்தவர்கள் சொல்வது என்ன?
    தேசியம்

    ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பில் 60 பேர் பலி: உயிர் பிழைத்தவர்கள் சொல்வது என்ன?

    adminBy adminAugust 15, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜம்மு காஷ்மீர் மேக வெடிப்பில் 60 பேர் பலி: உயிர் பிழைத்தவர்கள் சொல்வது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கிஷ்த்​வார்: ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் நேற்று மேகவெடிப்​பால் ஏற்பட்ட திடீர் வெள்​ளப்​பெருக்​கில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திலிருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் நேற்று மேகவெடிப்​பின் காரண​மாக திடீர் வெள்​ளப்​பெருக்​குடன் நிலச்​சரி​வும் ஏற்​பட்​டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 60-ஆக உள்​ளது. இன்​னும் பலர் இடி​பாடு​களுக்​குள் சிக்​கி​யிருப்​ப​தாக நம்​பப்​படு​வ​தால் இறப்பு எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கக்​கூடும் என்று அஞ்​சப்​படு​கிறது. மீட்பு பணி​களில் என்​டிஆர்​எப், எஸ்​டிஆர்​எப், காவல்​துறை, ராணுவம் மற்றும் உள்​ளூர் தன்​னார்​வலர்​கள் பெரிய அளவில் ஈடு​பட்​டுள்​ளனர்.

    நேற்று இந்த சோக சம்பவம் நடந்தபோது மச்சைல் மாதா கோயில் யாத்திரையின் கடைசி கட்டத்துக்காக சோசிட்டியில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான யாத்ரீகர்களில் ஒன்பது வயது சிறுமி தேவன்ஷியும் ஒருவர். மேகவெடிப்பால் திடீர் வெள்ளம் ஏற்பட்டபோது ஒரு மேகி-பாயிண்ட் கடையில் சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கி புதைந்திருந்த அவர், சில மணி நேரங்களுக்குப் பிறகு அவரது மாமா மற்றும் பிற கிராமவாசிகளால் மீட்கப்பட்டார்.

    இதுபற்றி பேசிய அவர், “நாங்கள் ஒரு மேகி கடையில் நின்றோம். மேகவெடிப்பு வெள்ளத்தால் மக்கள் எங்களை வேகமாக ஓடச் சொன்னார்கள். நாங்கள் அங்கேயே நின்றோம். சில நிமிடங்களில், கடையின் மீது ஒரு பெரிய சேறு சகதியும் சரிந்தது. திடீர் வெள்ளத்தில் சிக்கி என்னால் மூச்சு விட முடியவில்லை. என் மாமா, பூஜி மற்றும் பலர் பல மணிநேரம் போராடி மரப் பலகைகளை அகற்றினர், நாங்கள் அனைவரும் வெளியே வந்தோம். என்னையும் என் குடும்ப உறுப்பினர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். மாதா எங்களைக் காப்பாற்றினார்”என்றார்.

    32 வயதான சினேகா இந்த வெள்ளத்தில் சிக்கி மீண்டு வந்தார். இதுபற்றி பேசிய அவர், “ நாங்கள் வாகனத்தில் சென்ற போது ஒரு பெரிய இடி சத்தம் கேட்டது, மலையின் மேல் மேக வெடிப்பு ஏற்பட்டதை கண்டோம். நான் ஒரு வாகனத்தின் கீழ் சேற்றில் சிக்கிக்கொண்டேன். என்னைச் சுற்றிலும் உடல்கள் கிடந்தன. அவர்களில் சிலர் கழுத்து உடைந்து, கைகால்கள் துண்டிக்கப்பட்ட குழந்தைகள். நான் உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கையே இல்லை.

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு வாகனத்தின் கீழ் புதைந்தபோது, எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். என் தந்தை முதலில் தன்னை விடுவித்துக் கொண்டார். பின்னர் எனக்கு உதவினார். நான் என் தாயை ஒரு மின் கம்பத்தின் அடியில் இருந்து வெளியே இழுத்தேன். அவர் மிகவும் காயமடைந்த நிலையில் இருந்தார்.

    வெளியே வந்தபோது உடல்கள் எல்லா இடங்களிலும் கிடந்தன. முழு மலையும் இடிந்து விழுந்ததுபோல இருந்தது. சிட்டோ மாதா கோயிலின் தாக்கூர் ஜி சிலை கூட எங்கள் கண்களுக்கு முன்பாக அடித்துச் செல்லப்பட்டது. அதிகாரிகள், காவல்துறை, ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் உள்ளூர்வாசிகளின் விரைவான நடவடிக்கை எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியது. ஒரு மணி நேரத்துக்குள், காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வாகனங்கள் வந்தன. அவர்கள் தாமதமாக வந்திருந்தால், இன்னும் பலர் இறந்திருப்பார்கள்” என்று அவர் கூறினார்.

    “வானமும் பூமியும் ஒன்றாக இடிந்து விழுவது போல் தோன்றியது. பெரிய வெடிப்பு சத்தத்திற்குப் பிறகு, முழுப் பகுதியும் மூடுபனி மற்றும் தூசியால் நிரம்பியிருந்தது. என்னுடன் வந்தவர்கள் என் மனைவி, மகள் உட்பட பெரும்பாலோர் சேற்றில் சிக்கினர். பாலம் கட்டுமான தளத்தில், 10-க்கும் மேற்பட்டோர் செனாப் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதை நான் கண்டேன்” என்று 12 பேருடன் வந்திருந்த உதம்பூரைச் சேர்ந்த சுதிர் கூறினார்.

    ஜம்முவைச் சேர்ந்த உமா பேசுகையில், “வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் இருக்க ஒரு வாகன டயரை பிடித்துக் கொண்டேன். ஒரு போலீஸ்காரர் என்னைக் காப்பாற்றினார். ஆனால் என் சகோதரி கஹ்னா ரெய்னாவை இன்னும் காணவில்லை” என்று அவர் கூறினார்.

    15 பேர் கொண்ட குழுவுடன் வந்திருந்த வைஷாலி சர்மா, “நாங்கள் ஒரு பாலத்தை நெருங்கியபோது மதியம் 12:15 மணியளவில். எங்களை ஓடச் சொல்லி சத்தம் போட்டனர். அதற்குள் நாங்கள் சேறு மற்றும் பாறைகளுக்கு அடியில் சிக்கினோம். நான் பாறைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டேன். என் பெற்றோர் எங்கே என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மணிப்பூரில் கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

    September 12, 2025
    தேசியம்

    நாடு முழுவதும் அல்லாமல், டெல்லியில் மட்டும் ஏன் பட்டாசு வெடிக்க தடை? – உச்ச நீதிமன்றம் கேள்வி

    September 12, 2025
    தேசியம்

    “பிரதமர் மோடி இப்போது மணிப்பூர் செல்வது நல்லது, ஆனால்…” – ராகுல் காந்தி கருத்து

    September 12, 2025
    தேசியம்

    டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் அறைகளில் சோதனை

    September 12, 2025
    தேசியம்

    பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்: ரூ.7,300 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல்

    September 12, 2025
    தேசியம்

    வாக்காளர் பட்டியலில் பெயர்: சோனியாவுக்கு எதிரான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் தள்ளுபடி

    September 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: அரசு தகவல்
    • பெண்களில் அல்சைமர் ஏன் மிகவும் பொதுவானது என்பதை விஞ்ஞானிகள் வெளிப்படுத்துகிறார்கள்: அபாயங்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மணிப்பூரில் கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!
    • கூட்டணி விவகாரம்: செப்.16-ல் தமிழக பாஜக முக்கிய ஆலோசனை
    • சரியான உணவுடன் நாள்பட்ட வலியை எப்படி சாப்பிடுவது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.