Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 17
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்
    தேசியம்

    ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்

    adminBy adminJuly 16, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்தை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் கடிதம் எழுதியுள்ளனர்.

    இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களின் இந்த கோரிக்கை சட்டப்பூர்வமானது. அதோடு, இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அவர்களின் உறுதியைக் காட்டுகிறது.

    கடந்த காலங்களில் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், முன் எப்போதும் இல்லாத வகையில் மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர், யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நீங்கள் பலமுறை உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள்.

    கடந்த மே 19, 2024ல் பவனேஸ்வரில் நீங்கள் அளித்த பேட்டியில், மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்பது நாங்கள் அளித்த வாக்குறுதி. நாங்கள் அதை நிச்சயம் நிறைவேற்றுவோம் என கூறி இருந்தீர்கள். அதோடு, செப்டம்பர் 19, 2024-ல் ஸ்ரீநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நீங்கள், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் நாங்கள் உறுதி அளித்திருக்கிறோம் என குறிப்பிட்டீர்கள். உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசு இத்தகைய உறுதிமொழியை அளித்துள்ளது.

    எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான ஒரு சட்டத்தை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் கொண்டு வர நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.

    மேலும், லடாக் யூனியன் பிரதேசத்தை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க அரசாங்கம் சட்டம் இயற்ற நாங்கள் வலியுறுத்துகிறோம். இது லடாக் மக்களின் கலாச்சாரம், முன்னேற்றம், அரசியல் சார்ந்த விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கும், அவர்களின் உரிமைகள், நிலம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதற்குமான முக்கிய நடவடிக்கையாக இருக்கும்” என தெரிவித்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுவோருக்கு ‘துன்புறுத்தல்’ நடப்பதாக மம்தா கண்டன பேரணி!

    July 16, 2025
    தேசியம்

    மத்திய அரசின் அதிதீவிர முயற்சியால் நிமிஷாவின் மரண தண்டனை தள்ளிவைப்பு

    July 16, 2025
    தேசியம்

    மாநிலங்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையில் விரைவில் சதம் அடிக்கும் பாஜக: பெரும்பான்மையை தாண்டியது என்டிஏ கூட்டணி

    July 16, 2025
    தேசியம்

    மணிப்பூர் சோதனையில் 86 ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீஸார்

    July 16, 2025
    தேசியம்

    ‘நீதி கிடைப்பதை உறுதி செய்வோம்’ – தீக்குளித்த ஒடிசா மாணவியின் தந்தைக்கு ராகுல் காந்தி ஆறுதல்

    July 16, 2025
    தேசியம்

    ‘பாம்புகள் எங்களின் நண்பர்கள்’ – கர்நாடகாவில் 2 மகள்களுடன் 8 ஆண்டுகள் குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் தகவல்!

    July 16, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்தியா வருகிறார் உசைன் போல்ட்!
    • மதத்தை வைத்து விஜய்யின் தாயை விமர்சிப்பதா? – அப்பாவுவுக்கு தவெக கண்டனம்
    • தரவரிசையில் ஜோ ரூட் மீண்டும் முதலிடம்!
    • சட்டவிரோத மணல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திண்டுக்கல் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவு
    • லார்ட்ஸ் போட்டியில் ரிஷப் பந்த், கருண் நாயர் ஆட்டமிழந்தபோதே இங்கிலாந்தின் வெற்றி உறுதியாகிவிட்டது: ரவி சாஸ்திரி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.