Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 15
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு
    தேசியம்

    ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு

    adminBy adminAugust 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி 46 பேர் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஜம்மு: ஜம்​மு-​காஷ்மீரன் கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் உள்ள தொலை​தூர மலை கிராமத்​தில் நேற்று மேகவெடிப்​பால் ஏற்​பட்ட பெரு​வெள்​ளம் மற்​றும் நிலச்​சரி​வில் சிக்கி சிஐஎஸ்​எப் பாது​காப்பு படை வீரர்​கள் இரு​வர் உட்பட 46 பேர் உயி​ரிழந்​தனர்.

    இதுகுறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் நேற்று மேகவெடிப்​பின் காரண​மாக தீடீர் வெள்​ளப்​பெருக்​குடன் நிலச்​சரி​வும் ஏற்​பட்​டது. இதனால் சோசிட்டி மலை கிராமத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் எண்​ணிக்கை 46-ஆக உள்​ளது. இன்​னும் பலர் இடி​பாடு​களுக்​குள் சிக்​கி​யிருப்​ப​தாக நம்​பப்​படு​வ​தால் இறப்பு எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கக்​கூடும் என்று அஞ்​சப்​படு​கிறது. இது​வரை​யில் மீட்​கப்​பட்ட 120 பேரில் 38 பேரின் நிலை கவலைக்​கிட​மாக உள்​ளது.

    மீட்பு பணி​களில் என்​டிஆர்​எப், எஸ்​டிஆர்​எப், காவல்​துறை, ராணுவம், உள்​ளூர் தன்​னார்​வலர்​கள் பெரிய அளவில் ஈடு​பட்​டுள்​ளனர். நிலைமை மோச​மாக இருப்​ப​தால் என்​டிஆர்​எப்​-ன் இரண்டு புதிய குழுக்​கள் உட்பட மீட்பு பணி​யாளர்​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

    மச்​சைல் மாதா கோ​யிலுக்கு செல்​லும் வழி​யில் அமைந்​துள்ள சோசிட்டி கிராமத்​தில் மதி​யம் 12 மணி முதல் 1 மணிக்​குள் இந்த பேரழிவு நிகழ்ந்​தது. ஜூலை 25-ம் தேதி தொடங்​கிய வரு​டாந்​திர மச்​சைல் மாதா யாத்​திரை செப்​டம்​பர் 5-ம் தேதி​யுடன் முடிவடைய உள்​ளது. இதற்​காக அங்கு ஏராள​மான மக்​கள் கூடி​யிருந்​த​போது இந்த சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது.

    9,500 அடி உயரத்​தில் அமைந்​துள்ள இந்த ஆலயத்​துக்​கான 8.5 கிலோமீட்​டர் பாத​யாத்​திரை சோசிட்டி கிராமத்​தில் இருந்தே தொடங்​கு​கிறது. இந்த கிராமம் கிஷ்த்​வார் நகரத்​திலிருந்து சுமார் 90 கிலோமீட்​டர் தொலை​வில் அமைந்​துள்​ளது. இங்கு பக்​தர்​களுக்​காக அமைக்​கப்​பட்ட சமூக சமையலறை (லங்​கர்) மேகவெடிப்​பால் பெரிதும் பாதிப்​படைந்​தது. திடீர் வெள்​ளம் காரண​மாக கடைகள் மற்​றும் பாது​காப்பு புறக்​காவல் நிலை​யம் உட்பட பல கட்​டமைப்​பு​கள் நீரில் அடித்​துச் செல்​லப்​பட்​டன.

    பேரிடர் ஏற்​பட்ட உடன் கிஷ்த்​வார் துணை ஆணை​யர் பங்​கஜ் குமார் சர்​மா, மூத்த காவல்​துறை கண்​காணிப்​பாள​ருடன் இணைந்து மீட்பு நடவடிக்​கைகளை துரிதப்​படுத்​தி​னார். இந்த மேகவெடிப்பு சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களுக்கு ஜம்​மு-​காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனேஜ் சின்ஹா இரங்​கல் தெரி​வித்​துள்​ளதுடன், மீட்பு மற்​றும் நிவாரண நடவடிக்​கைகளை துரிதப்​படுத்த அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டுள்​ளார்.

    இதனிடையே, ஜம்மு காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்​லா, கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் தொலை​தூர கிராமத்​தில் பெரும் ​மேக வெடிப்​பால் ஏற்​பட்​டுள்ள நிலைமை குறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ ஷாவிடம்​ விளக்​கி​னார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பனாரஸ் இந்து பல்கலை.யில் தெலுங்கு மொழி துறைத் தலைவர் பதவியை பெறுவதில் மோதல்: பேராசிரியர் மீது தாக்குதல், 3 பேர் கைது

    August 15, 2025
    தேசியம்

    அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு: உச்ச நீதிமன்றம் கருத்து

    August 15, 2025
    தேசியம்

    நாடு முழுவதும் இன்று 79-வது சுதந்திர தின கோலாகலம்: 12-வது முறையாக தேசிய கொடியேற்றுகிறார் பிரதமர்

    August 15, 2025
    தேசியம்

    காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரும் மனு மீது பதில் அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

    August 15, 2025
    தேசியம்

    ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பு: 44 பேர் உயிரிழப்பு, 200 பேரை காணவில்லை

    August 14, 2025
    தேசியம்

    பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வரலாற்று உதாரணம்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை

    August 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கூலி: திரை விமர்சனம்
    • அரசின் திட்டங்களை எதிர்த்து வழக்கு; வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
    • இந்த உணவுகள் மற்றும் பானங்கள் புற்றுநோயை பட்டினி கிடக்கும் என்று ஒரு சிறந்த மருத்துவர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பனாரஸ் இந்து பல்கலை.யில் தெலுங்கு மொழி துறைத் தலைவர் பதவியை பெறுவதில் மோதல்: பேராசிரியர் மீது தாக்குதல், 3 பேர் கைது
    • வாலிபாலில் டான் போஸ்கோ சாம்பியன்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.