Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, August 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை: பதுங்கு குகைகள் குண்டு வைத்து தகர்ப்பு
    தேசியம்

    ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை: பதுங்கு குகைகள் குண்டு வைத்து தகர்ப்பு

    adminBy adminAugust 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை: பதுங்கு குகைகள் குண்டு வைத்து தகர்ப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஸ்ரீநகர்: ஜம்மு மாகாணத்​தின் கிஷ்த்​வார் உள்​ளிட்ட எட்டு மாவட்​டங்​களில் பாகிஸ்​தானில் இருந்து நன்கு பயிற்சி பெற்ற தீவிர​வா​தி​கள் ஊடுரு​வி​யிருப்​பது நாட்​டின் பாது​காப்​புக்கு பெரும் அச்​சுறுத்​தலாக மாறி​யுள்​ளது. இந்த பகுதி 2021 வரை தீவிர​வாதத்​தால் பாதிக்​கப்​ப​டாத பகு​தி​யாக இருந்​தது. ஆனால் தற்​போது பெரிய தீவிர​வாத சம்​பவங்​கள் மற்​றும் என்​க​வுன்ட்​டர் நடை​பெறும் முக்​கிய தளமாக மாறி​விட்​டது.

    இந்த நிலை​யில், கிஷ்த்​வார் மாவட்​டத்​தில் உள்ள ஒரு மலைப்​பகு​தி​யில் தீவிர​வா​தி​களின் நடமாட்​டம் இருப்​ப​தாக உளவுத் துறை மூலம் பாது​காப்பு படை​யினருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதைத் தொடர்ந்து அப்​பகு​தி​யில் ஞாயிற்​றுக்​கிழமை முதல் பாது​காப்பு படை​யினர் தீவிர தேடு​தல் வேட்டை நடத்தி வரு​கின்​றனர்.

    நேற்று காலை தீவிர​வா​தி​கள் தங்​கி​யிருந்​த​தாக கருதப்​படும் மலைப்​பகு​தி​யில் அமைந்​துள்ள பதுங்கு குகைகளை பாது​காப்பு படை​யினர் குண்​டு​வீசி தகர்த்​தனர். இதன் காரண​மாக ஏற்​பட்ட பயங்கர தீ மற்​றும் புகை மூட்​டத்​தில் தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டார்​களா என்​பது தெளி​வாக தெரிய​வில்​லை. தொடர்ந்து அந்​தப் பகு​தி​கள் கண்​காணிக்​கப்​பட்டு வரு​கின்​றன.

    கிஷ்த்​வார் மலைகளில் பதுங்​கி​யுள்ள தீவிர​வா​தி​களை விரட்​டியடிக்க முயற்​சித்து வரும் அதேவேளை​யில் குல்​காம் மாவட்​டத்​தில் உள்ள அகால் காடு​களில் பாது​காப்பு படை​யினர் நீண்ட தீவிர​வாத எதிர்ப்பு நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டுள்​ளனர். இந்த மோதலின் 11 -வது நாளான சனிக்​கிழமை ராணுவ வீரர்​கள் இரு​வர் கொல்​லப்​பட்​டனர். மேலும் இரு​வர் காயமடைந்​தனர்.

    அகால் அடர் வனப்பகு​தி​யில் பதுங்​கி​யுள்ள தீவிர​வா​தி​கள் கையெறி குண்​டு​களை வீசி தாக்​குதல் நடத்தி வரு​கின்​றனர். அகாலில் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்​கிய தேடு​தல் வேட்​டை​யின்​போது நடை​பெற்ற துப்​பாக்கி சண்​டை​யில் உள்​ளூர் தீவிர​வாதி ஒரு​வர் கொல்​லப்​பட்​டார்.

    ஆனால், இந்த மோதல் பின்​னர் வனப் பகு​திக்​கும் பரவிய​தால் தேடு​தல் வேட்​டையை தொடர்ந்து நடத்த வேண்​டிய சூழல் பாது​காப்பு படை​யினருக்கு ஏற்​பட்​டது. இது​வரை நடை​பெற்ற மோதல்​களில் 10 பாது​காப்பு படை வீரர்​கள் காயமடைந்​துள்​ள​தாக அதி​காரப்​பூர்வ வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழுவின் அறிக்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு: மக்களவை ஒப்புதல்

    August 12, 2025
    தேசியம்

    நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்: டி ஷர்ட்டில் இடம்பெற்ற ‘மின்டா தேவி’ யார்?

    August 12, 2025
    தேசியம்

    நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அறிவித்தார் மக்களவை சபாநாயகர்

    August 12, 2025
    தேசியம்

    சிக்கிமில் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.40 ஆயிரம் நிதியுதவி

    August 12, 2025
    தேசியம்

    கேரளாவில் மதம் மாற வலியுறுத்தியதால் இளம்பெண் மர்மச்சாவு குறித்து விசாரணை

    August 12, 2025
    தேசியம்

    நாடு முழுவதும் 6,115 ரயில் நிலையங்களில் மத்திய அரசு இலவச வை-ஃபை சேவை

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • எய்ட்ஸ் தொற்றுள்ளவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை: புதுவை முதல்வர் அறிவிப்பு
    • ஜென்சன் ஹுவாங்கின் உடற்தகுதி: “தற்காப்புக் கலைகள் உங்களை தாழ்மையுடன் ஆக்குகின்றன. இது கற்பிக்கிறது…” | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழுவின் அறிக்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு: மக்களவை ஒப்புதல்
    • தூய்மைப் பணியை தனியாருக்கு தருவதை எதிர்த்து வழக்கு: மாநகராட்சி நிர்வாகம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
    • ஹார்வர்ட் ரிசர்ச் ‘தண்டு’ அல்லது கட்டுப்பாட்டு உத்தரவுகளைக் கொண்ட பெண்களை அதிக இதய நோய் அபாயத்தை எதிர்கொள்கிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.