லே: லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி, சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரம் போராட்டம் வன்முறையாக மாறியது. இது குறித்து லடாக் டிஜிபி சிங் ஜாம்வல் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
உண்ணாவிரத போராட்டம் வன்முறையாக மாற சோனம் வாங்சுக் காரணமாக இருந்தார். இந்த போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதான என விசாரணை நடைபெறுகிறது.
வாங்சுக் ஏற்கெனவே பாகிஸ்தான் சென்றுள்ளார். இஸ்லாமபாத் அதிகாரிகளுடன் அவர் பேசியுள்ளார். லே பகுதியில் போராட்டம் மேலும் தீவிரமடைவதை தடுக்க சோனம் கைது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.