Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சைப்ரஸ், கனடா, குரோஷியாவுக்கு பிரதமர் மோடி பயணம்: வருடாந்திர ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
    தேசியம்

    சைப்ரஸ், கனடா, குரோஷியாவுக்கு பிரதமர் மோடி பயணம்: வருடாந்திர ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்

    adminBy adminJune 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சைப்ரஸ், கனடா, குரோஷியாவுக்கு பிரதமர் மோடி பயணம்: வருடாந்திர ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார். இதில் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.

    இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.

    சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவ்லிட்ஸ் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஜூன் 15, 16 ஆகிய இரு நாட்களில் சைப்ரஸில் பயணம் மேற்கொள்கிறார். 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் சைப்ரஸ் செல்வது இதுவே முதல்முறை. இப்பயணத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக சைப்ரஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார். மேலும் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் உரையாற்றுவார்.

    இதையடுத்து கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பை ஏற்று, அந்நாட்டில் ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் வருடாந்திர ஜி7 உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடி பங்கேற்கும் 6-வது ஜி7 உச்சி மாநாடு இதுவாகும்.

    இந்த மாநாட்டில், எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், ஏஐ-ஆற்றல் இணைப்பு, குவாண்டம் போன்ற விஷயங்களில் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து ஜி-7 தலைவர்கள், தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார். உச்சி மாநாட்டுக்கு இடையில் பிரதமர் மோடி பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளும் மேற்கொள்வார்.

    இதையடுத்து குரோஷியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக் அழைப்பின் பேரில் ஜூன் 19-ல் பிரதமர் மோடி அந்நாட்டில் பயணம் மேற்கொள்கிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் குரேஷியா செல்வது இதுவே முதல்முறையாகும். இப்பயணத்தில் பிரதமர் மோடி, குரேஷிய அதிபரை சந்திக்கிறார். குரேஷிய பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார். பிரதமரின் இந்தப் பயணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாட்டுடனான இந்தியாவின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு பிரதமர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு

    July 1, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு 52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்

    July 1, 2025
    தேசியம்

    உளவாளியாக செயல்பட ரஷ்யாவிடமிருந்து நிதியுதவி பெற்ற 150 காங்கிரஸ் எம்.பி.க்கள்: பாஜக எம்.பி. குற்றச்சாட்டு

    July 1, 2025
    தேசியம்

    ஓமன் சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ: மீட்புப் பணிக்கு விரைந்தது இந்திய கடற்படை

    July 1, 2025
    தேசியம்

    கடந்த 10 ஆண்டுகளில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் பயனடைவோர் 64.3% அதிகரிப்பு

    July 1, 2025
    தேசியம்

    வேலை இல்லாததால் இந்தியாவுக்கு வர எல்லை கடந்தபோது பாக். இந்து தம்பதி பாலைவனத்தில் உயிரிழப்பு

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “அஜித்குமார் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து நீதியை நிலைநாட்டுக” – விஜய்
    • வெறும் 365 நாட்களில் ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்க 7 வழிகள்
    • திருப்புவனம் காவல்நிலைய கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி
    • லூயிஸ் உய்ட்டன் ஆட்டோ ரிக்ஷா பை: ஆட்டோரிக்ஷா பைக்கு வழிவகுக்கவும்: எல்வியின் தைரியமான அஞ்சலி இன்னும் இந்தியாவுக்கு! | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • சி.என்.எஸ்.ஏ பூமி மற்றும் சந்திரனின் படங்களை டயான்வென் -2 ஆல் 590,000 கி.மீ ஆழத்தில் வெளியிடுகிறது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.