Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூடியூபர் ‘யாத்ரி டாக்டர்’ பாகிஸ்தான் உளவாளியா? – உளவு துறை தீவிர விசாரணை
    தேசியம்

    சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூடியூபர் ‘யாத்ரி டாக்டர்’ பாகிஸ்தான் உளவாளியா? – உளவு துறை தீவிர விசாரணை

    adminBy adminMay 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூடியூபர் ‘யாத்ரி டாக்டர்’ பாகிஸ்தான் உளவாளியா? – உளவு துறை தீவிர விசாரணை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னையில் எம்பிபிஎஸ் படித்த யூ டியூபர் ‘யாத்ரி டாக்டரின்’ பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு உளவாளியாக செயல்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரோடு தொடர்புடைய ஒடிசாவை சேர்ந்த யூ டியூபர் பிரியங்கா சேனாபதி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளார்.

    இந்த வரிசையில் ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கி பழகிய யூ டியூபர் ‘யாத்ரி டாக்டரின்’ பாகிஸ்தான் தொடர்புகள் குறித்து இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. யாத்ரி டாக்டரின் இயற்பெயர் நவன்கர் சவுத்ரி. ஹரியானாவின் ரோத்தக் பகுதியை சேர்ந்த இவர் கடந்த 2015-ம் ஆண்டில் சென்னை மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றார். தற்போது அவர் டெல்லியில் வசித்து வருகிறார்.

    கடந்த 2017-ம் ஆண்டில் மருத்துவ பணியில் இருந்து விலகிய நவன்கர் சவுத்ரி, ‘யாத்ரி டாக்டர்’ என்ற பெயரில் யூ டியூப் சேனல் தொடங்கினார். உலகின் பல்வேறு நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து யூ டியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இதுவரை 144 நாடுகளில் இவர் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். இவரது யூ டியூப் சேனலில் 20 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் 6.5 லட்சம் பேர் இவரை பின்தொடர்கின்றனர்.

    யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ‘யாத்ரி டாக்டர்’ நவன்கர் சவுத்ரி, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். பாகிஸ்தானுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இதுதொடர்பாக இந்திய உளவுத் துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

    இதுகுறித்து நவன்கர் சவுத்ரி தனது யூ டியூப் சேனலில் கூறியிருப்பதாவது: தற்போது நான் அயர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டதை ஊடகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். தற்போது என்னை குறித்து எதிர்மறையான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்த தவறும் செய்யவில்லை. உலக நாடுகள் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிறேன். இதன்படி ஒருமுறை மட்டும் பாகிஸ்தான் சென்றுள்ளேன். ஜோதி மல்ஹோத்ராவை யூ டியூபராக மட்டுமே தெரியும். அவரது ரகசிய பின்னணி குறித்து தெரியாது. நான் தவறு செய்ததற்கான ஆதாரம் இருந்தால் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது என்னை கைது செய்யலாம். விசாரணை அமைப்புகளுக்கு முழுஒத்துழைப்பு வழங்குவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ஜோதியின் பஹல்காம் பயணம்: ஹரியானா போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்கு அண்மையில் சுற்றுலா சென்றுள்ளார். குல்மார்க், தால் ஏரி, லடாக் பகுதிகளிலும் அவர் சுற்றித் திரிந்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்களை யூ டியூபில் வெளியிட்டு உள்ளார்.

    ஜோதியின் பஹல்காம் பயணம் தற்போது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதுதொடர்பாக ஹரியானா போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு பகுதி வரை ஜோதி சென்றிருக்கிறார். அவர் சீன உளவு அமைப்புகளுடனும் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக காஷ்மீரை சேர்ந்த உளவுத் துறை அதிகாரிகள் ஜோதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: டெல்லியில் பிரபல சாமியார் தலைமறைவு

    September 24, 2025
    தேசியம்

    3,787 ஆதரவற்றோர் உடல்களுக்கு இறுதிச் சடங்கு: ‘உதவும் சேவகர்கள்’ அமைப்பினரின் மனிதாபிமானம்

    September 24, 2025
    தேசியம்

    சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட் தலைவர் உயிரிழப்பு

    September 24, 2025
    தேசியம்

    பாதுகாப்பு படையினருக்கு ம.பி.யில் ட்ரோன் பயிற்சி

    September 24, 2025
    தேசியம்

    பிரதமர் மோடியின் ‘சுதேசி’ கோரிக்கைக்கு ஆதரவு: ஜோஹோ தளத்துக்கு மாறிவிட்டதாக மத்திய அமைச்சர் தகவல்

    September 24, 2025
    தேசியம்

    பாஜக எம்.பி.யின் மனைவியிடம் டிஜிட்டல் கைது மோசடி செய்து பறித்த ரூ.14 லட்சத்தை மீட்ட கர்நாடக போலீஸார்

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அன்று சச்சினிடம் ஆட்டமிழந்த திராவிட்… இன்று அர்ஜுன் டெண்டுல்கரிடம் ஆட்டமிழந்த சமித் திராவிட்!
    • ’மனதை திருடி விட்டாய்’ இயக்குநர் நாராயணமூர்த்தி காலமானார்
    • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றம்: சென்னை உயர் நீதிமன்றம்
    • ஹிண்டன்பர்க் அறிக்கை வெறும் அதானி குழுமத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல: கவுதம் அதானி
    • யார் அபிஷேக் சர்மாவின் வதந்தியான காதலி லைலா பைசல்: கிரிக்கெட் வீரரின் சர்ச்சைக்குரிய கடந்தகால உறவு பற்றி – இந்தியாவின் டைம்ஸ்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.