Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை
    தேசியம்

    சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை

    adminBy adminSeptember 29, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சுதேசி பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: வரும் பண்​டிகை காலத்​தில் சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அறி​வுறுத்தி உள்ளார். 126-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்​பானது.

    இதில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது: தீபாவளிக்கு பிறகு சத் பண்​டிகை கொண்​டாடப்பட உள்​ளது. மத்​திய அரசின் முயற்சி​யால் கொல்​கத்​தா​வின் துர்கா பூஜை யுனெஸ்​கோ​வின் கலாச்​சார பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டது. இதே​போல சத் பூஜையையும் யுனெஸ்கோ பட்​டியலில் சேர்க்க முயற்சி மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

    அக்​டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்​தியை கொண்​டாட உள்​ளோம். நமது தேசத்​தந்தை சுதேசி கொள்​கையை வலி​யுறுத்​தி​னார். அவற்​றில் காதி மிக​வும் முக்​கிய​மானது. ஆனால் துர​திர்​ஷ்ட​வச​மாக, சுதந்​திரத்​துக்​குப் பிறகு காதி மீதான ஆர்​வம் குறைந்​தது. மத்​திய அரசின் முயற்​சிகளால் கடந்த 11 ஆண்​டு​களாக காதி பொருட்​களின் விற்​பனை அதி​கரித்து வரு​கிறது. வரும் காந்தி ஜெயந்தி நாளில் குறைந்​த​பட்​சம் ஒரு காதி பொருளை வாங்க வேண்​டு​கிறேன்.

    இதற்கு தமிழ்​நாட்டை சேர்ந்த யாழ் நேச்​சுரல்ஸ் ஓர் உதா​ரணம் ஆகும். அந்த நிறுவன உரிமை​யாளர்​கள் அசோக் ஜெகதீசன், பிரேம் செல்​வ​ராஜ் ஆகியோர் கார்ப்​பரேட் வேலையை துறந்து புதிய முயற்​சியை மேற்​கொண்​டனர். புற்​கள் மற்​றும் வாழை நார்​களி​லிருந்து யோகா பாய்​களை அவர்​கள் உரு​வாக்​கினர். மூலிகை சாயங்​களால் துணி​களுக்கு சாயம் பூசினர். இந்த புதிய முயற்சி மூலம் சுமார் 200 குடும்​பங்​களுக்கு அவர்​கள் வேலை​வாய்ப்பை வழங்கி உள்​ளனர்.

    ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்கு புகழாரம்: அடுத்த சில நாட்​களில் விஜயதசமியை கொண்​டாட உள்​ளோம். இந்த நாளில் ஆர்​எஸ்​எஸ் அமைப்பு 100-வது ஆண்டு விழாவை கொண்​டாடு​கிறது. பல நூற்​றாண்​டு​களாக இந்​தியா அடிமைத்​தனத்​தில் சிக்​கித் தவித்​தது. இந்த சூழலில் டாக்​டர் ஹெட்​கேவர் கடந்த 1925-ம் ஆண்டு விஜயதசமி நாளில் ராஷ்ட்​ரிய சுயம்​சேவக் சங்​கத்தை நிறு​வி​னார்.

    அவரது மறைவுக்கு பிறகு பரம் பூஜ்ய குருஜி தேசத்​துக்கு சேவை செய்​யும் மகத்​தான பணியை முன்​னெடுத்து சென்​றார். கடந்த 100 ஆண்​டு​களாக ஆர்​எஸ்​எஸ் அமைப்பு இடை​வி​டா​மல் தேச சேவை​யில் ஈடு​பட்டு வரு​கிறது. ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்​கும் அதன் தொண்​டர்​களுக்​கும் வாழ்த்​துகளைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

    வரும் பண்​டிகை காலத்​தில் சுதேசி பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும். உள்​நாட்​டில் உற்​பத்தி செய்​யப்​படும் பொருட்​களை மட்​டுமே வாங்​கு​வேன் என்று ஒவ்​வொரு இந்​தி​யரும் உறு​தி​யேற்க வேண்​டும். நமது பாதை சுதேசி பாதை​யாக இருக்க வேண்​டும். அனைத்து துறை​களி​லும் நாம் சுய​சார்பை எட்ட வேண்​டும். பண்​டிகை நாளில் நமது வீடு​களை சுத்​தம் செய்​கிறோம். அதே​நேரம் நமது தெருக்​கள், சுற்​றுப்​புறங்​கள், சந்​தைகள், கிராமங்​கள், நகரங்​களை​யும் சுத்​தம் செய்​ய வேண்​டும்​. இது நமது தலை​யாய கடமை ஆகும்​. இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்​.

    கடற்படை அதிகாரிகளுடன் உரையாடல்: மன​தின் குரல் நிகழ்ச்​சி​யின்​போது பிரதமர் மோடி கூறும்​போது, “கடலில் சுமார் 50,000 கி.மீ. பயணம் செய்து கடற்​படை பெண் அதி​காரி​கள் தில்​னா, ரூபா சாதனை படைத்​துள்​ளனர். அவர்​கள் தங்​களது சாகச பயண அனுபவங்​களை நம்​மோடு பகிர்ந்து கொள்​வார்​கள்’’ என்​றார். புதுச்​சேரியை சேர்ந்த ரூபாவுடன் பிரதமர் பேசி​ய​போது தமிழில் வணக்​கம் கூறி​னார். இதைத் தொடர்ந்து லெப்​டினென்ட் கமாண்​டர் ரூபா அழகிரி​சாமி கூறிய​தாவது:

    கடந்த 2017-ம் ஆண்டு கடற்​படை​யில் சேர்ந்​தேன். எனது தந்தை தமிழ்​நாட்டை சேர்ந்​தவர். அம்மா புதுச்​சேரியை சேர்ந்​தவர். விமானப் படை​யில் தந்தை பணி​யாற்​றி​னார். அவரை பின்​பற்றி நான் கடற்​படை​யில் இணைந்​தேன். பாய்மர படகில் இரு​வர் மட்​டுமே பயணம் செய்​தோம். 3 புயல்​களை​ எதிர்​கொண்​டோம்.

    ரூபா அழகிரிசாமி, தில்னா.

    சில நேரங்​களில் 3 மாடி உயரத்​துக்கு அலைகள் எழுந்​தன. அந்த அலைகளை எதிர்​கொண்​டோம். உறைய​வைக்​கும் குளிர், கடுமை​யான வெப்​பம், சூறாவளி காற்றை சமாளித்​தோம். அண்​டார்​டி​கா​வில் பயணம் செய்​த​போது அங்கு வெப்​பநிலை ஒரு டிகிரி செல்​சி​யஸாக இருந்​தது. அண்​டார்​டிகா குளிரை சமாளிக்க 7 அடுக்கு ஆடைகளை அணிந்​தோம். இவ்​வாறு ரூபா அழகிரி​சாமி தெரி​வித்​தார்.

    கடற்​படை லெப்​டினென்ட் கமாண்​டர் தில்னா கூறிய​தாவது: கடந்த 2014-ம் ஆண்​டில் கடற்​படை​யில் சேர்ந்​தேன். நான் கேரளா​வின் கோழிக்​கோட்டை சேர்ந்​தவள். எனது தந்தை ராணுவத்​தில் பணி​யாற்​றி​னார். எனது அம்மா இல்​லத்​தரசி. எனது கணவர் இந்​திய கடற்​படை​யில் பணி​யாற்​றுகிறார்.

    கடந்த 2024 -ம் ஆண்டு அக்​டோபர் 2-ம் தேதி கோவா​வில் இருந்து கடல் பயணத்தை தொடங்கி கடந்த மே 29-ம் தேதி கரைக்கு திரும்​பினோம். 238 நாட்​கள் சுமார் 50,000 கி.மீ. கடலில் பயணம் செய்​தோம். பாயிண்ட் நீமோ​வில் தேசிய கொடியை ஏற்றி சாதனை படைத்​தோம். பாய்​மரப் படகில் அங்கு சென்ற முதல் இந்​தி​யர், முதல் ஆசி​யர் என்ற பெரு​மையை பெற்​றோம். இவ்​வாறு தில்னா பேசி​னார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

    September 29, 2025
    தேசியம்

    கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ‘எக்ஸ்’ தளம் முறையீடு செய்ய முடிவு – பின்னணி என்ன?

    September 29, 2025
    தேசியம்

    பிஹாரில் 160+ இடங்களில் வெற்றி பெறுவோம் என அமித் ஷா கூறுவது வாக்கு திருட்டின் மீதான நம்பிக்கை: காங்.

    September 29, 2025
    தேசியம்

    17 மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை: ஆக்ராவில் சாமியார் சைதன்யானந்தா கைது

    September 29, 2025
    தேசியம்

    எச்1பி விசா உள்ள இந்திய ஊழியர்கள் திரும்புவதைத் தடுத்த அமெரிக்கர்கள்

    September 29, 2025
    தேசியம்

    வக்பு சட்டப் போராட்டம் குறித்து விஎச்பி கவலை: கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி அரசிடம் வேண்டுகோள்

    September 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • யாரையும் குறைகூற வரவில்லை; மக்கள் சொன்னதை மத்திய அரசிடம் சொல்வோம்: கரூரில் நிர்மலா சீதாராமன் பேட்டி
    • மயக்கம் எழுந்து நிற்பதா? உங்கள் மூளைக்கு மிகவும் அவசியமான ஒன்று இல்லை, ஆரோக்கியமான உணவு கூட வழங்க முடியாது | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • கரூர் சம்பவம்: ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு அமைத்தது பாஜக
    • பாவெல் துரோவ்: துபாயின் பணக்காரனை நிகர மதிப்பு .1 17.1 பில்லியன் சந்திக்கவும், அவர் ஒரு ஷேக் அல்லது இளவரசர் அல்ல | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.