Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, August 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்வு
    தேசியம்

    சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்வு

    adminBy adminAugust 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்வு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ​கொள்கை சீர்​திருத்​தம், தனி​யார் நிறு​வனங்​களு​டன் இணைந்து செயல்​படு​தல், அன்​னிய நேரடி முதலீட்டை தாராளமய​மாக்​கியது ஆகிய​வற்​றால் நாட்​டின் ராணுவ தளவாட உற்​பத்தி ரூ.1.5 லட்​சம் கோடியை எட்டி சாதனை படைத்​துள்​ளது.

    நாட்​டின் ராணுவ தளவாட உற்​பத்தி 2024-25-ம் ஆண்​டில் ரூ.1,50,590 கோடி​யாக உயர்ந்து புதிய சாதனை படைத்​துள்​ளது. இது இதற்கு முந்​தைய ஆண்​டின் உற்​பத்​தியை விட 18 சதவீதம் உயர்​வு. கடந்த 2019-20-ம் ஆண்டு உற்​பத்​தி​யுடன் ஒப்​பிடு​கை​யில் 90 சதவீதம் உயர்​வு.

    இந்த சாதனை குறித்து பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கூறிய​தாவது: ராணுவத் தளவாட உற்​பத்தி ரூ.1.5 லட்​சம் கோடியை எட்​டியதற்கு ராணுவத் தளவாட துறை மற்​றும் தொழிற் துறை​யினரின் பங்​களிப்பே காரணம். இந்த வளர்ச்​சி, உள்​நாட்டு ராணுவ தளவாட உற்​பத்​தி​யின் பலத்தை காட்​டு​வ​தாக​வும், இறக்​குமதி குறைந்து ராணுவத் தளவாட ஏற்​றும​தியை அதி​கரிக்​கும் அளவுக்கு நாட்டை கொண்டு சென்​றுள்​ளது.

    ஒரு நாடு தனது பாது​காப்பு தேவை​யில் தன்​னிறைவு பெற​வில்லை என்​றால், அதன் சுதந்​திரம் முழு​மையடை​யாது. நாம் ஆயுதங்​களை வாங்​கி​னால், நாம் பிற நாடு​களின் தயவில் இருக்க வேண்​டிய நிலை ஏற்​படும். அதனால்​தான், தற்​சார்பை அடைய மத்​திய அரசு நடவடிக்கை எடுத்​தது. தற்​போது ராணுவத் தளவாடத்​துறை விரிவடைந்​துள்​ளது, நாட்​டுக்கு இது​வரை இல்​லாத பலத்தை அளித்​துள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் கூறி​னார்.

    அதி​கரிப்பு மிக முக்​கி​யம்: நாட்​டின் ராணுவத் தளவாட உற்​பத்தி அதி​கரிப்பு , பதற்​ற​மான நேரங்​களில் வெளி​நாட்டு நிறு​வனங்​களை சார்ந்​திருப்​பதை குறைக்​கும். மிக முக்​கிய​மான ராணுவத் தளவாடங்​கள் எல்​லாம் விரை​வில் விநி​யோகம் செய்​யப்​படு​வது உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. ராணுவத் தளவாட உற்​பத்தி அதி​கரிப்​புக்கு மத்​திய அரசு மேற்​கொண்ட கொள்கை சீர்​திருத்​தம், தனி​யார் துறையை ஒருங்​கிணைத்​தது, அன்​னிய நேரடி முதலீட்டை தாராளமய​மாக்​கியது ஆகிய​வையே காரணம்.

    தற்​சார்பு இந்​தியா திட்​டம் கடந்த 2020-ம் ஆண்டு அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இத்​திட்​டத்​தால் ராணுவ தளவாட கொள்​முதல் நடை​முறை​கள் எளி​தாக்​கப்​பட்​டன. முப்​படைகளுக்​கான சேவை​கள் மற்​றும் தொழில்​நுட்​பங்​கள் மேம்​படுத்​தப்​பட்​டன. ராணுவத் தளவாட உற்​பத்​தி​யில் புதுமை கண்​டு​பிடிப்பு திட்​டம் (ஐடெக்​ஸ்) திட்​டம் கடந்த 2021-ம் ஆண்டு கொண்டு ரூ.499 கோடி மதிப்​பில் கொண்​டு​வரப்​பட்​டது.

    இத்​திட்​டம், ஸ்டார்ட் அப் நிறு​வனங்​கள், குறு,சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​களக்கு தேவை​யான ஆதரவை அளித்​தது. இதன்​மூலம் ராணுவத் தொழில்​நுட்​பத்​தில் புதுமை கண்​டு​பிடிப்​பு​கள் உரு​வாக்​கப்​பட்​டன. இத்​திட்டம் 300-க்​கும் மேற்​பட்ட புதுமை கண்​டு​பிடிப்​பாளர்​களுக்கு 5 ஆண்​டு​களுக்கு தேவை​யான ஆதரவை அளிக்​கிறது.

    38,000-க்​கும் மேற்​பட்ட இறக்​குமதி பொருட்​கள் உள்​நாட்​டில் தயாரிப்​ப​தற்கு அடை​யாளம் காணப்​பட்​டன. இவற்​றில் 14,000-க்​கும் மேற்​பட்ட பொருட்​கள் உள்​நாட்​டில் தற்​போது தயாரிக்​கப்படு​கின்​றன. 5,500-க்​கும் மேற்​பட்ட ராணுவத் தளவாடங்​களை உள்​நாட்​டில் குறிப்​பிட்ட கால வரம்​புக்​குள் தயாரிக்க பட்​டியலிடப்​பட்​டது. இவற்​றில் துப்​பாக்​கி​கள், ரேடார்​கள், இலகு ரக ஹெலி​காப்​டர்​கள் உட்​பட 3,000-க்​கும்​ மேற்​பட்​ட பொருட்​கள்​ உள்​நாட்​டில்​ தயாரிக்​கப்​படுகின்​றன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இந்து அடையாளத்துடன் 12 பெண்களை மணம் முடித்து மதம் மாற கட்டாயப்படுத்தியவர் கைது

    August 18, 2025
    தேசியம்

    ஒடிசாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல்: 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு

    August 18, 2025
    தேசியம்

    வாக்காளர் உரிமையை நிலைநாட்ட பிஹாரில் 1,300 கி.மீ. யாத்திரையை தொடங்கி வைத்தார் ராகுல் காந்தி

    August 18, 2025
    தேசியம்

    ஜார்க்கண்ட் அரசுக்கு எதிரான மனு மீது இன்று விசாரணை

    August 18, 2025
    தேசியம்

    ராணுவ பயிற்சியில் படுகாயமடைந்ததால் மாற்றுத் திறனாளியான விவகாரம்: வழக்கு பதிவு செய்த உச்ச நீதிமன்றம்

    August 18, 2025
    தேசியம்

    மேற்கு வங்கத்தில் பேருந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு, 36 பேர் காயம்

    August 18, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • இந்து அடையாளத்துடன் 12 பெண்களை மணம் முடித்து மதம் மாற கட்டாயப்படுத்தியவர் கைது
    • சென்ட்ரல் நிலையத்தில் ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்திய 96 பேர் மீது வழக்குப்பதிவு
    • எந்த நாட்டில் மிகவும் விஷ பாம்புகள் உள்ளன? | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஒடிசாவின் நான்கு முக்கிய மாவட்டங்களில் தங்க வயல்: 20 டன் அளவுக்கு தங்கம் இருக்கலாம் என மதிப்பீடு
    • சென்னை திருவல்லிக்கேணியில் சாரணர் இயக்கத்துக்கு நவீன வசதியுடன் தலைமை அலுவலகம்: பள்ளிக்கல்வித் துறை

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.