Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சீன தளங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதா? – நாடாளுமன்ற குழுவிடம் விக்ரம் மிஸ்ரி விவரிப்பு
    தேசியம்

    சீன தளங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதா? – நாடாளுமன்ற குழுவிடம் விக்ரம் மிஸ்ரி விவரிப்பு

    adminBy adminMay 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சீன தளங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதா? – நாடாளுமன்ற குழுவிடம் விக்ரம் மிஸ்ரி விவரிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த ராணுவ மோதல் குறித்து, வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவிடம் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார்.அதன்படி, விக்ரம் மிஸ்ரி இன்று விளக்கம் அளித்தார்.

    காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையில் நடைபெற்ற வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி, காங்கிரஸின் ராஜீவ் சுக்லா மற்றும் தீபேந்தர் ஹூடா, ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, பாஜகவின் அபராஜிதா சாரங்கி மற்றும் அருண் கோவில் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த விக்ரம் மிஸ்ரி, “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் எப்போதும்போல வழக்கமான களத்தில்தான் நடந்தது. அண்டை நாட்டிலிருந்து அணு ஆயுதப் பயன்பாட்டுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான முடிவு என்பது இரு தரப்பு மட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த மோதலில் சீன தளங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியதா என்றால், பாகிஸ்தான் விமானத் தளங்களை இந்தியா தாக்கியதால் அது ஒரு பொருட்டல்ல” என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், பாகிஸ்தானில் இயங்கி வரும் 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்தும், பொது மக்களை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது. 4 நாட்கள் நடைபெற்ற இந்த ராணுவ மோதல், கடந்த 10-ம் தேதி முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் ராணுவ டிஜிஎம்ஓ தொலைபேசி மூலம் விடுத்த கோரிக்கையை இந்திய ராணுவத்தின் டிஜிஎம்ஓ ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த மோதல் நின்றது என்று மத்திய அரசு தெரிவித்தது. இது குறித்து வெளியுறவுத் துறைக்கான நாடாளுமன்றக் குழுவிடம், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேரில் விளக்கம் அளிப்பார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மாநில அந்தஸ்து கோரி லடாக் பாஜக அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை

    September 24, 2025
    தேசியம்

    பள்ளி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: டெல்லியில் பிரபல சாமியார் தலைமறைவு

    September 24, 2025
    தேசியம்

    3,787 ஆதரவற்றோர் உடல்களுக்கு இறுதிச் சடங்கு: ‘உதவும் சேவகர்கள்’ அமைப்பினரின் மனிதாபிமானம்

    September 24, 2025
    தேசியம்

    சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட் தலைவர் உயிரிழப்பு

    September 24, 2025
    தேசியம்

    பாதுகாப்பு படையினருக்கு ம.பி.யில் ட்ரோன் பயிற்சி

    September 24, 2025
    தேசியம்

    பிரதமர் மோடியின் ‘சுதேசி’ கோரிக்கைக்கு ஆதரவு: ஜோஹோ தளத்துக்கு மாறிவிட்டதாக மத்திய அமைச்சர் தகவல்

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “தவெக தலைவர் விஜய்யின் வெறுப்பு அரசியல் எடுபடாது” – திருமாவளவன் கருத்து
    • அமைதியான கொலையாளி: பெண் அவள் புறக்கணித்த சிறுநீரக செயலிழப்பின் பொதுவான அறிகுறிகளைப் பகிர்ந்து கொள்கிறாள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அஜித்தை இயக்கும் ’மார்கோ’ இயக்குநர்?
    • புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு முன்னாள் முதல்வர் நாராயணசாமி திடீர் போராட்டம்
    • க்யூராமியை முத்தமிடுவதற்கு மூன்று புள்ளிகள் க ou ராமி: வீட்டு மீன்வளங்களுக்கான 5 அழகான க ou ராமி மீன்-கவனிப்பு, உணவு மற்றும் தொட்டி உதவிக்குறிப்புகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.