Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, August 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சீனாவுக்கு எதிராக இந்தியாவை திருப்புவதற்கான அமெரிக்காவின் முயற்சியே 25% வரி விதிப்பு – ராம் மாதவ்
    தேசியம்

    சீனாவுக்கு எதிராக இந்தியாவை திருப்புவதற்கான அமெரிக்காவின் முயற்சியே 25% வரி விதிப்பு – ராம் மாதவ்

    adminBy adminJuly 31, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சீனாவுக்கு எதிராக இந்தியாவை திருப்புவதற்கான அமெரிக்காவின் முயற்சியே 25% வரி விதிப்பு – ராம் மாதவ்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த இந்தியாவை பயன்படுத்த முடியாத நிலையில், இந்தியாவை பணிய வைக்கும் முயற்சியாகவே அமெரிக்கா 25% வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பாஜக முன்னாள் பொதுச் செயலாளரும் இந்தியா அறக்கட்டளையின் தலைவருமான ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராம் மாதவ், “ஆழமான தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்காவை விட சீனா சில மாதங்களே பின்தங்கியுள்ளது. இந்தியா நான்காவது பெரிய பொருளாதார சக்தியாக விளங்குகிறது. சீனாவின் எழுச்சியைத் தடுக்க அமெரிக்காவுக்கு இந்தியாவால் மட்டுமே உதவ முடியும் என அந்நாட்டு நிபுணர்கள் நம்புகிறார்கள்.

    ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள் சீனாவுடன் நெருக்கமான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளன. இதனால், அந்த நாடுகள் அமெரிக்கா – சீனா இடையே சார்பு நிலையை எடுக்க தயங்குகின்றன. இதன் காரணமாக, சீனாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு இந்தியாவின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது.

    எனினும், மோடியை பணிய வைப்பது கடினம் என்றும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதன் சுயாட்சியில் உறுதியாக வேரூன்றியுள்ளது என்றும் ட்ரம்ப் காண்கிறார்.

    ஐரோப்பிய ஒன்றியம், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் ட்ரம்ப்பின் கட்டளைகளுக்கு அமைதியாக சரணடைந்தாலும், இந்தியா அவ்வாறு அடிபணிய மறுப்பது அமெரிக்காவில் அமைதியின்மையை அதிகரிக்கச் செய்கிறது. எனவேதான், இந்தியாவை தனது வழிக்கு திருப்ப 25% வரிகள் போன்ற தீவிர நடவடிக்கைகளை ட்ரம்ப் நாடுகிறார்.” என்று தெரிவித்துள்ளார்.

    இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்காவே காரணம் என டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். எனினும், பிரதமர் மோடி இதனை ஒப்புக்கொள்ளவில்லை. ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நடவடிக்கையை நிறுத்துமாறு எந்தவொரு உலகத் தலைவரும் எங்களிடம் கேட்கவில்லை என தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் பேசிக்கொள்ளவில்லை என்று நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கூறினார்.

    இந்நிலையில், இந்தியாவை பணிய வைக்கும் முயற்சியாகவே அமெரிக்கா 25% வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவரை கைது செய்ய அழுத்தம்: முன்னாள் அதிகாரி தகவல்

    August 1, 2025
    தேசியம்

    Bihar SIR | எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

    August 1, 2025
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் தயார்

    August 1, 2025
    தேசியம்

    அமர்நாத் யாத்திரையில் 4 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்தனர்

    August 1, 2025
    தேசியம்

    மணிப்பூரில் 4 தீவிரவாதிகள் கைது: 26 துப்பாக்கிகள் பறிமுதல்

    August 1, 2025
    தேசியம்

    நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • படவேடு ரேணுகாம்பாள் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
    • “கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” – மு.க.ஸ்டாலினை நலம் விசாரித்த பின் வைகோ பேட்டி
    • எல்லா மார்பு வலி என்பது மாரடைப்பு என்று அர்த்தமல்ல: அது ஆஞ்சினாவாக இருக்கலாம்; அதன் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் முக்கிய வேறுபாட்டைப் புரிந்துகொள்வது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவரை கைது செய்ய அழுத்தம்: முன்னாள் அதிகாரி தகவல்
    • திருவெறும்பூர் அரசுப் பள்ளி மாணவரின் மர்ம மரணம் பற்றி விசாரணை தேவை: அன்புமணி

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.