Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, September 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றன: பாக். பிரதமர் இருந்தபோதே மறைமுகமாக சாடிய மோடி
    தேசியம்

    சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றன: பாக். பிரதமர் இருந்தபோதே மறைமுகமாக சாடிய மோடி

    adminBy adminSeptember 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்றன: பாக். பிரதமர் இருந்தபோதே மறைமுகமாக சாடிய மோடி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தியான்ஜின்: “சமீபத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டோம். இதுபோன்ற சூழ்நிலையில், சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது இயற்கையானது” என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கடந்த 2001-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

    இந்நிலையில், எஸ்சிஓ அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். மாநாட்டின் ஒரு பகுதியாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேற்று பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப்பும் கலந்து கொண்ட 25-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “பயங்கரவாதம் என்பது எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தல் ஆகும்.

    கடந்த 40 ஆண்டுகளாக பயங்கரவாதத்தின் தாக்குதலை இந்தியா அனுபவித்து வருகிறது. சமீபத்தில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான பக்கத்தைக் கண்டோம். இந்த துக்க நேரத்தில் எங்களுடன் நின்ற நட்பு நாட்டிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பயங்கரவாதம் தொடர்பாக எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்பதை நாம் தெளிவாகவும் ஒருமனதாகவும் கூற வேண்டும். இந்தத் தாக்குதல் (பஹல்காம்) மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டிற்கும், நபருக்கும் வெளிப்படையான சவாலாக இருந்தது.

    இதுபோன்ற சூழ்நிலையில், சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது இயற்கையானது. அனைத்து வடிவங்களிலும், வண்ணங்களிலும் பயங்கரவாதத்தை நாம் ஒருமனதாக எதிர்க்க வேண்டும். இது மனிதகுலத்திற்கு எதிரான நமது கடமை.

    எஸ்சிஓ- வின் பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பின் (RATS) கீழ் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. கூட்டு தகவல் நடவடிக்கையை வழிநடத்துவதன் மூலம் அல்-கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்துப் போராட இந்தியா முன்முயற்சி எடுத்தது. பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக நாங்கள் எங்கள் குரலை எழுப்பினோம். அதில் உங்கள் ஆதரவிற்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எஸ்சிஓவின் இன் உறுப்பினராக இந்தியா மிகவும் நேர்மறையான பங்கைக் கொண்டுள்ளது. எஸ்சிஓ-விற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கை என்பது பாதுகாப்பு, இணைப்பு மற்றும் வாய்ப்பு ஆகிய மூன்று முக்கியமான தூண்களை அடிப்படையாகக் கொண்டது.” என்று அவர் கூறினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தேவஸ்தான மருத்துவமனைகளில் சேவை புரிய பக்தர்களுக்கு வாய்ப்பு

    September 4, 2025
    தேசியம்

    வர்த்தக உறவை மேம்படுத்த 3 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்தார் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ்

    September 4, 2025
    தேசியம்

    காசோலை மோசடி வழக்கில் சிறை தண்டனை தவிர்க்கலாம்: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

    September 4, 2025
    தேசியம்

    பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு: கல்வி நிறுவனங்கள் செப்.7 வரை மூட உத்தரவு

    September 4, 2025
    தேசியம்

    டிசம்பர் 2024-க்குள் வந்த பாக்., ஆப்கன், வங்கதேச சிறுபான்மையினர் பாஸ்போர்ட், விசா இல்லாமல் இந்தியாவில் தங்க அனுமதி

    September 4, 2025
    தேசியம்

    பிரதமர், அவரது தாயாருக்கு எதிரான கருத்தை கண்டித்து பிஹாரில் இன்று முழு அடைப்புக்கு என்டிஏ அழைப்பு

    September 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தேவஸ்தான மருத்துவமனைகளில் சேவை புரிய பக்தர்களுக்கு வாய்ப்பு
    • அதிமுக பொதுச் செயலாளர் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி
    • சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை; வெள்ளி விலையில் மாற்றமில்லை
    • வீக்கம் காரணங்கள்: பிரபலமான ஹார்வர்ட் டாக்டர் ச ura ரப் சேத்தி வீக்கத்திற்கான 3 முக்கிய காரணங்களையும் இயற்கையாகவே அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதையும் வெளிப்படுத்துகிறார்
    • வாட்ச்: ஹவாயின் கிலாவியா எரிமலை மீண்டும் வெடிக்கும்; உருகிய எரிமலைக்கு சாட்சியாக கூட்டம் சேகரிக்கிறது – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.