Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, July 21
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சிறுநீர் குடிக்க வைத்​து, தழைகளை உண்ண வைத்து பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமி​யார் மீது வழக்கு
    தேசியம்

    சிறுநீர் குடிக்க வைத்​து, தழைகளை உண்ண வைத்து பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமி​யார் மீது வழக்கு

    adminBy adminJuly 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிறுநீர் குடிக்க வைத்​து, தழைகளை உண்ண வைத்து பக்தர்களை சித்ரவதை செய்த போலி சாமி​யார் மீது வழக்கு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    மும்பை: ம​கா​ராஷ்டி​ரா​வில் அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக கூறி, பக்​தர்​களை சித்​ர​வதை செய்த போலி சாமி​யார் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். மகா​ராஷ்டிர மாநிலம் சத்​ரபதி சம்​பாஜி நகர் மாவட்​டம், வஜாபூர் தாலு​கா​வில் உள்​ளது ஷியூர் கிராமம். இந்த கிராமத்​தில் உள்ள கோயி​லில் சஞ்​சய் பகாரே என்​பவர் சாமி​யா​ராக இருக்​கிறார்.

    தனக்கு அமானுஷ்ய சக்தி இருப்​ப​தாக​வும், திரு​மண​மா​காத பெண்​களுக்கு திரு​மணம் ஏற்​பாடு செய்ய முடி​யும், அகோரி பூஜை மூலம் குழந்தை இல்​லாத தம்​ப​திக்கு குழந்தை பேறு கிடைக்க செய்ய முடி​யும், ஆவி​களை விரட்ட முடி​யும் என்​றெல்​லாம் கூறி வந்துள்​ளார்.

    இது​போல் பல்​வேறு மூட நம்​பிக்​கைகளை கடந்த 2 ஆண்​டு​களாக பரப்பி வந்​துள்​ளார். தன்னை தானே ‘பா​பா’ என்று அழைத்​துக் கொண்​டுள்​ளார். அதை நம்பி ஏராள​மான பக்​தர்​கள் அவரிடம் வந்​தனர். அவர்​களுக்கு ஆன்​மீக சிகிச்சை அளிப்​ப​தாக​வும் பூஜை செய்​வ​தாக​வும் கூறி கம்​பால் அடிப்​பது, காலணி​களை வாயில் கவ்விக் கொண்டு கோயிலை சுற்றி ஓடிவர செய்​வது போன்ற அத்​து​மீறல்​களை செய்​துள்​ளார்.

    அத்​துடன் ஒரு கட்​டத்​தில் தன்​னிடம் வருபவர்​களை இலை, தழைகளை உண்ண சொல்லி கட்​டாயப்​படுத்தி உள்​ளார். உச்சகட்டமாக தன்​னுடைய சிறுநீரையே குடிக்க செய்​திருக்​கிறார். இதுகுறித்து கேட்​டால் இவை எல்​லாம் ஆன்​மிக சிகிச்​சை​யின் ஒரு அங்​கம் என்று கூறி ஏமாற்றி வந்​துள்​ளார். தன்​னிடம் வரும் ஆண், பெண் பக்​தர்​களை பாரபட்​சம் இல்​லாமல் சித்​ர​வதை செய்துள்​ளார்.

    இந்​நிலை​யில் மூட நம்​பிக்கை எதிர்ப்பு அமைப்பை சேர்ந்த சமூக ஆர்​வலர்​கள் சிலர், ரகசிய கேம​ராக்​கள் மூலம் ‘ஸ்​டிங் ஆபரேஷன்’ நடத்தி சஞ்​சய் பகாரே​வின் அட்​டூழி​யங்​களை ஆதா​ர​மாக சேகரித்​தனர். அவற்றை போலீ​ஸில் ஒப்​படைத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று புகார் அளித்​தனர்.

    அந்த அமைப்​பினர் அளித்த வீடியோ​வில் ஒரு மனிதரை படுக்க வைத்து அவர் முகத்​தின் மீது போலி சாமி​யார் சஞ்​சய் தனது காலை வைத்து அழுத்​துகிறார். பின்​னர் அவர் முகத்​தில் மஞ்​சள் வண்ண பொடியை தூவு​கிறார். இந்த பூஜைக்​குப் பின்​னர் அவரால் நிற்க கூட முடிய​வில்​லை. சிலர் தாங்கி பிடித்​துக் கொள்​கின்​றனர். ஆண், பெண்ணை சஞ்​சய் கம்​பால் அடிக்​கும் காட்​சிகளும்​ அதில்​ இடம்​பெற்​றுள்​ளன, இதுகுறித்​து போலீ​ஸார்​ எப்​ஐஆர்​ பதிவு செய்​து தீவிர வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    விமான விபத்துக்கான காரணத்தை ஏஏஐபி பாரபட்சமின்றி ஆராய்கிறது: அமைச்சர் ராம்மோகன் நாயுடு

    July 21, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் விவகாரம்: இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

    July 21, 2025
    தேசியம்

    உ.பி-யில் கன்வர் யாத்ரீகர்களுக்கு மலர் கொடுத்து வழியனுப்பிய முஸ்லிம்கள்!

    July 21, 2025
    தேசியம்

    பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ஆம் ஆத்மி எம்எல்ஏ அன்மோல் ராஜினாமா

    July 21, 2025
    தேசியம்

    மழைக்கால கூட்டத்தொடர் நமது ராணுவ வீரர்களின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும்: பிரதமர் மோடி

    July 21, 2025
    தேசியம்

    பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி: 70 சதவீதம் தீக்காயமடைந்த ஒடிசா சிறுமி

    July 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
    • மிகவும் தாராளமான மகப்பேறு விடுப்பு கொள்கைகளைக் கொண்ட 7 நாடுகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • விமான விபத்துக்கான காரணத்தை ஏஏஐபி பாரபட்சமின்றி ஆராய்கிறது: அமைச்சர் ராம்மோகன் நாயுடு
    • தலைமைச் செயலாளர்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஐகோர்ட் முடித்துவைப்பு
    • இயற்கை மூலிகைகள் மூலம் வீட்டில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.