Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 5
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு
    தேசியம்

    சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சிந்து நதி நீர் ஒப்பந்தம்: பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா நிறுத்தி வைத்துள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து ஏப்ரல் 23-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படுகிறது என்பது உட்பட 5 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    பாகிஸ்தானின் குடிநீர் தேவையில் 70 சதவீதத்துக்கும் மேல் பூர்த்தி செய்யக்கூடியது என்பதால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு அந்நாட்டுக்கு மிகப் பெரிய இடியாக அமைந்தது.

    தொடர்ந்து மே 7ம் தேதி பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

    இதைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே தொடர்ந்து 4 நாட்கள் நடந்த மோதலில், பாகிஸ்தான் ராணுவம் கடும் இழப்புகளைச் சந்தித்தது. இதையடுத்து, மே 10ம் தேதி பாகிஸ்தான் டிஜிஎம்ஓ, இந்திய டிஜியும்ஓவை தொடர்பு கொண்டு ராணுவ நடவடிக்கையை நிறுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, மோதல் நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் நீர்வள அமைச்சக செயலாளர் சையத் அலி முர்தாசா, இந்தியாவின் நீர்வள செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் ஒரு வாரத்திற்கு முன்பு வந்துள்ளது. அதில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் எனவே, பாகிஸ்தானின் சிந்து நதி ஆணையருடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய பிரதிநிதிகளை இந்தியா பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் பெயர் வெளியிட விரும்பாத அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    1960 முதல் நடைமுறையில் உள்ள Indus Waters Treaty(IWT) ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக இரு நாடுகளும் சிந்து நதி ஆணையர்களை நியமித்துள்ளன. இந்த ஆணையர்களின் கடைசி சந்திப்பு மே 2022 இல் டெல்லியில் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஜனவரி 2023 முதல், ஒப்பந்தத்தை திருத்துவது குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இந்தியா, பாகிஸ்தானுக்கு 4 முறை கடிதம் எழுதியுள்ளது, ஆனால், “திருப்திகரமான பதில்” கிடைக்கவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    மேலும் அக்கடிதங்களில், IWT-ஐ நிறுத்தி வைத்ததற்கும் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறுவதற்கும் பாகிஸ்தான் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக தகவல்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

    July 5, 2025
    தேசியம்

    பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தலைமறைவான பிஎஃப்ஐ நிர்வாகி விமான நிலையத்தில் கைது: என்ஐஏ நடவடிக்கை

    July 5, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான், சீனா, துருக்கியை எதிர்கொண்டோம்: ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தகவல்

    July 5, 2025
    தேசியம்

    பிஹார் கல்லூரி முதல்வர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

    July 5, 2025
    தேசியம்

    ஜெகன் ஆட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை: பவன் கல்யாண் உறுதி

    July 5, 2025
    தேசியம்

    இந்தியாவுக்கு முதல் 3 அபாச்சி ஹெலிகாப்டரை வழங்குகிறது அமெரிக்கா

    July 5, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சூப்பர் யுனைடெட் செஸ் போட்டி: ரேபிட் பிரிவில் பட்டம் வென்றார் குகேஷ்
    • தோல்வியை வைத்து இயக்குநரை எடை போடுவதில்லை: விஜய் சேதுபதி
    • சென்னை அருகே நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து – 4 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்; 2 பேர் காயம்
    • மத்திய அரசின் இஎல்ஐ திட்டம்: முதல் முறை பணியில் சேருவோருக்கு ஊக்கத் தொகை
    • பிஹார் வாக்காளர் பட்டியலில் திருத்தம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.