Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாஜக
    தேசியம்

    சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாஜக

    adminBy adminJune 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து முஸ்லிம்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பாஜக
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்வது குறித்து உ.பி. முஸ்லிம்களுக்கு மாநில பாஜக சிறுபான்மையினர் பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    நாடு முழுவதிலும் விரைவில் தொடங்கவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இச்சூழலில் உ.பி.யில் சாதிவாரி கணக்கெடுப்பின்போது முஸ்லிம்கள் தங்கள் சாதிக்கு பதிலாக ‘இஸ்லாம்’ என்று தங்கள் மதத்தை மட்டும் குறிப்பிட்டாலே போதுமானது என்று மவுலானாக்கள் தகவல் பரப்புவதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பல்வேறு காரணங்களும் இருப்பதாக கருதப்படுகிறது.

    இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டிடம் உ.பி. பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் குன்வர் பாஸித் அலி கூறுகையில் “வரவிருக்கும் சாதிவாரி கணக்கெடுப்பில் தகவல்கள் துல்லியமாக இருப்பது அவசியம். இதை குறிப்பாக முஸ்லிம்களுக்கு எடுத்துக் கூறுவது முக்கியமாகிறது.

    ஏனெனில், இஸ்லாமியர்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பன்முகத்தன்மை மறைக்கப்பட்டுள்ளது. விரிவான இந்த சாதிவாரி கணக்கெடுப்பு, பல்வேறு முஸ்லிம் சாதிகளின் உண்மை நிலையை வெளிப்படுத்தும்.

    இது, அவர்களுக்கு பயனுள்ள கொள்கை வகுப்பதிலும், சமூகநீதியை வழங்குவதிலும் உதவியாக இருக்கும். இது சாதி கணக்கெடுப்பே தவிர, மதக் கணக்கெடுப்பு அல்ல. சாதி என்பது கலாச்சாரத்தின் ஒரு பகுதி. எனவே, இது தொடர்பாக முஸ்லிகள் இடையே விரைவில் மாநிலம் தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாங்கள் தொடங்குவோம். எங்களின் இந்த நடவடிக்கை புரட்சிகரமானதாக அமையும்” என்றார்.

    இந்தியாவில் முஸ்லிம் மக்கள்தொகையில் சுமார் 85 சதவீதம் பேர் பாஸ்மந்தா (பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை) சமூகங்களைச் சேர்ந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. இதனால் அவர்கள் தொடர்பான சாதிக் கணக்கெடுப்பு தரவுகள் மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு வகையில் பயன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உ.பி.யில் அடுத்த சட்டப்பேரவை தேர்தல் 2027-ல் வருகிறது. இதற்கு முன் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானால் அது, உ.பி. அரசியலில் பெரிய புயலைக் கிளப்பவும் வாய்ப்புள்ளது.

    ஏனெனில் உ.பி.யில் பெரும்பாலான முஸ்லிம்கள் தங்கள் சாதியை பெயருன் இணைத்து குறிப்பிடுகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்புக்கு பின் அவர்களில் எத்தனை பேர் அக்காலங்களில் மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் என்பதும் வெளியாகி விடும். இது, இந்து-முஸ்லிம் மத அரசியல் மேலோங்கி நிற்கும் உ.பி.யின் அரசியல் கட்சிகளுக்கு முக்கியமானது.

    இதுவரை உ.பி.யை ஆட்சி செய்த காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் வரலாற்றுரீதியாக முஸ்லிம் சமூகத்தை தவறாக வழிநடத்தியதாக பாஜக குற்றம் சாட்டுகிறது. இந்த அரசியலைப் புரிந்துகொண்டு முஸ்லிம்கள் தங்கள் ஆதரவை பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு அளிப்பதாகவும் பாஜக பேசி வருகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அகமதாபாத் விமான விபத்து பற்றி ஊக செய்திகளை வெளியிட வேண்டாம்: மத்திய அமைச்சர்

    July 20, 2025
    தேசியம்

    பிரதமர் மோடி ஜூலை 23-26 தேதிகளில் இங்கிலாந்து, மாலத்தீவுக்குப் பயணம்

    July 20, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயார்: கிரண் ரிஜிஜு

    July 20, 2025
    தேசியம்

    கேரளாவில் தொடர் கனமழை: 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

    July 20, 2025
    தேசியம்

    3 முக்கிய விஷயங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் பதிலளிக்க வேண்டும்: காங்கிரஸ்

    July 20, 2025
    தேசியம்

    தொடர் தோல்வி ராகுல் காந்தியை சித்தாந்த வெறுமையின் படுகுழியில் தள்ளியுள்ளது: தர்மேந்திர பிரதான்

    July 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல” – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
    • உலகின் மிகவும் அழுத்தமான 10 நகரங்கள்!
    • “கூட்டணி ஆட்சிதான்…” – பழனிசாமி பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் ரியாக்‌ஷன்
    • போட்டோஷூட்டுக்காக சங்கமித்த இந்திய கிரிக்கெட் அணி, மான்செஸ்டர் யுனைடெட்!
    • சமூகத்தில் பொருளாதார தீண்டாமை திணிப்பு: இந்து முன்னணி குற்றச்சாட்டு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.