ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் தண்டேவாடாவில் 2 பெண்கள் உள்ளிட்ட 12 நக்சலைட்கள், போலீஸ், சிஆர்பிஎப் அதிகாரிகள் முன்னிலையில் சரணடைந்துள்ளனர். இவர்களில் ரூ.28.50 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட 9 பேரும் அடங்குவர். அரசின் ‘உங்கள் வீடு, கிராமத்துக்கு திரும்பு’ பிரச்சாரத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 1,005 நக்சலைட்கள் சரண் அடைந்துள்ளனர்.
இந்த சாதனை அரசின் தொலைநோக்கு கொள்கைகள், பாதுகாப்புப் படைகளின் தொடர் நடவடிக்கை மற்றும் உள்ளூர் சமூகங்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மாவோயிஸ்ட்களின் வெற்று சித்தாந்தத்தால் வழிதவறிச் சென்ற இளைஞர்கள் மீண்டும் நல்வழிக்கு திரும்பியுள்ளனர்.