Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கொல்கத்தாவில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: மின்சாரம் தாக்கி மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு
    தேசியம்

    கொல்கத்தாவில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: மின்சாரம் தாக்கி மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு

    adminBy adminSeptember 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கொல்கத்தாவில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: மின்சாரம் தாக்கி மூவர் உட்பட 8 பேர் உயிரிழப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்​கத்​தா​வில் திங்​கள்​கிழமை இரவு முழு​வதும் கனமழை கொட்​டி தீர்த்தது. இதில் மின்​சா​ரம் தாக்கி மூவர் உட்பட மொத்​தம் 8 பேர் உயிரிழந்தனர். கொல்​கத்​தா​வில் நேற்​று​முன்​தினம் இரவு முழு​வதும் கனமழை பெய்​தது. இதன் காரண​மாக, நகரின் பல இடங்​களில் தண்​ணீர் தேங்​கியது. தாழ்​வான பகு​தி​களில் உள்ள வீடு​களுக்​குள் வெள்​ளம் புகுந்​த​தால் மக்​களின் அன்​றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்​கப்​பட்​டது.

    பெனி​யாபு​குர், காலிகபூர், நேதாஜி நகர், காரியஹட், ஏக்​பல்​பூர், பெஹலா மற்​றும் ஹரிதேவ்​பூர் நகரில் நிகழ்ந்த பல்​வேறு சம்​பவங்​களில் மொத்​தம் 8 பேர் உயி​ரிழந்​தனர். இதில் மின்​சார கசி​வின் காரண​மாக உயி​ரிழந்த 3 பேரும் அடக்​கம். சாலைகள், ரயில் பாதைகளில் தண்​ணீர் தேங்​கிய​தால் பேருந்து போக்​கு​வரத்​து, புறநகர் ரயில் சேவை, மெட்​ரோ சேவை​கள் முடங்​கின. தண்​ணீர் வீடு​களுக்​குள் புகுந்​த​தால் மக்​களின் உடமை​களுக்கு பெருத்த சேதம் ஏற்​பட்​டது. கனமழை தொடரும் என்ற அறி​விப்​பின் காரண​மாக பள்​ளி​களுக்கு நேற்று விடு​முறை அறிவிக்​கப்​பட்​டது.

    கொல்​கத்தா முனிசிபல் கார்ப்​பரேஷன் புள்​ளி​விவரப்​படி, கொல்​கத்தா நகரின் தெற்கு மற்​றும் கிழக்கு பகு​தி​கள் கனமழை​யால் அதி​கம் பாதிப்​படைந்​துள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டது. குறிப்​பாக, கரியா காம்​தாஹரி​யில் சில மணி நேரங்​களில் மட்​டும் 332 மில்லி மீட்​டர் அளவுக்கு மழை கொட்டி தீர்த்​தது. இதைத் தொடர்ந்து ஜோத்​பூர் பார்க்​கில் 285 மி.மீ, காலிகட் 280 மி.மீ, டாப்​சியா 275 மி.மீ, பாலிகஞ்ச் 264 மி.மீ. உள்​ளிட்ட நகரங்​களி​லும் அதிக அளவில் மழைப்​பொழிவு இருந்​தது.

    வங்​காள விரி​குடா பகு​தி​யில் ஏற்​பட்ட குறைந்த காற்​றழுத்த தாழ்வு நிலை காரண​மாகவே கொல்​கத்​தா​வில் விடிய விடிய மழை கொட்​டித் தீர்த்​த​தாக வானிலை மைய அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். துர்கா பூஜை கொண்​டாட்​டங்​கள் களை​கட்​டி​யுள்ள நிலை​யில் கொல்​கத்தா நகரில் பெய்து வரும் இந்த கனமழை பக்​தர்​களுக்கு கடும் இடையூறை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

    சாலைகள் முழு​வதும் தண்​ணீர் தேங்​கி​யுள்​ள​தால் ஏர் இந்​தியா மற்​றும் இண்​டிகோ விமான நிறு​வனங்​களின் புறப்​பாடு தாமத​மாகலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, விமான நிலை​யத்​துக்கு புறப்​படு​வதற்கு முன்​பாக பயணி​கள் தங்​களது புறப்​பாடு நேரத்தை மீண்​டும் ஒரு முறை உறு​திப்​படுத்​திக் கொள்​ளு​மாறு விமான நிறு​வனங்​கள் கேட்​டுக்​கொண்​டுள்​ளன.

    கொல்​கத்தா மேயரும், திரிண​மூல் காங்​கிரஸ் மூத்த தலை​வரு​மான பிர்​ஹாத் ஹக்​கீம் கூறுகை​யில்” கொல்​கத்தா நகரில் இவ்​வளவு தண்​ணீர் தேங்​கியதை நான் இது​வரை பார்த்​த​தில்​லை. பாதிக்​கப்​பட்ட மக்​களுக்கு மாநக​ராட்​சி, உணவு மற்​றும் தங்​குமிடத்தை ஏற்​பாடு செய்து வரு​கிறது. மழை தொடர​வில்லை என்​றால் கொல்​கத்தா நகரின் நிலைமை விரை​வில் இயல்பு நிலைக்கு திரும்​பும்” என்​றார்​.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாஜக எம்.பி.யின் மனைவியிடம் டிஜிட்டல் கைது மோசடி செய்து பறித்த ரூ.14 லட்சத்தை மீட்ட கர்நாடக போலீஸார்

    September 24, 2025
    தேசியம்

    கடந்த 5 ஆண்டுகளில் ஒடிசாவிலிருந்து புலம்பெயர்ந்த 289 தொழிலாளர்கள் உயிரிழப்பு

    September 24, 2025
    தேசியம்

    அமித் ஷா குரலில் பேசி முன்னாள் வங்கி ஊழியரிடம் ரூ.4 கோடி மோசடி: உறவினர் 5 பேர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப் பதிவு

    September 24, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

    September 24, 2025
    தேசியம்

    நவராத்திரி நடனங்களில் இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை: விஎச்பி அறிவிப்பால் வட மாநிலங்களில் சர்ச்சை

    September 24, 2025
    தேசியம்

    உயர் படிப்புக்காக ரஷ்யா சென்ற இந்திய இளைஞரை உக்ரைன் போருக்கு அனுப்பிய ராணுவம்

    September 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • டிஎஸ்பியை கைது  செய்ய உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க அறிக்கை: நீதிமன்றம் உத்தரவு
    • பராக் ஒபாமா 102 வயதான பெண்ணை சந்திக்கிறார்: அவரது எளிய உணவு ரகசியங்கள் வைரலாகி, நீண்ட ஆயுள் பாடங்கள் மற்றும் வாழ்க்கை உதவிக்குறிப்புகளுடன் மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்துகின்றன | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாஜக எம்.பி.யின் மனைவியிடம் டிஜிட்டல் கைது மோசடி செய்து பறித்த ரூ.14 லட்சத்தை மீட்ட கர்நாடக போலீஸார்
    • கேப்டன் ஸ்ரீனிவாசமூர்த்தி ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் மூலம் மாணவர்களின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம் தொடக்கம்
    • எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, அனிருத்… – திரைத் துறையில் யார் யாருக்கு கலைமாமணி விருது?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.