Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, July 26
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு தாமதம்: மூத்த வழக்கறிஞர்கள் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்
    தேசியம்

    கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு தாமதம்: மூத்த வழக்கறிஞர்கள் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்

    adminBy adminJuly 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கொலீஜியம் பரிந்துரைக்கும் நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு தாமதம்: மூத்த வழக்கறிஞர்கள் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரைக்கும் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவர். இதன் பரிந்துரைப்படியே உயர்நீதிமன்ற நீதிபதிகளும் மாற்றம் செய்யப்படுகின்றனர்.

    இந்த பட்டியலில் மத்திய அரசு சிலரது பெயர்களை மட்டுமே தேர்வு செய்கிறது. மற்றவர்கள் நீதிபதிகளாக நியமனம் செய்யப்படுவதில்லை. கடந்த 2019, 2020, 2022-ம் ஆண்டில் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட சில நீதிபதிகளின் பெயர்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தாதர், பிரசாந்த் பூஷன் ஆகியோர் 2 வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இதை மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். காவை மற்றும் நீதபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது வழக்கறிஞர் அரவிந்த் தாதர் வாதிடுகையில் கூறியதாவது: கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து கொலீஜியம் பரிந்துரைந்த நபர்களுக்கு தற்போது வரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் முடிவு எடுக்க ஒவ்வொரு முறையும் உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயம் செய்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு தாமதம் செய்வதை பரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் பணி மூப்பு இழப்பு ஏற்படுவதால், டெல்லி, மும்பையில் இருந்து பரிந்துரை செய்யப்பட்ட பல வழக்கறிஞர்கள் ஆர்வம் இழந்து தங்கள் பெயரை நீதிபதிகள் பரிந்துரை பட்டியலில் இருந்து திரும்ப பெற்றுக் கொள்கின்றனர்.

    இந்த தாமதம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2023-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணை பட்டியலில் இருந்து திடீரென நீக்கப்பட்டன. இது குறித்து சில வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பியபோது, கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி பதில் அளித்த அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ‘‘சில விஷயங்களை பற்றி எதுவும் கூறாமல் அப்படியே விட்டுவிடுவதுதான் சிறந்தது’’ என கருத்து தெரிவித்தார்.

    வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிடுகையில், ‘‘டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் வழக்கறிஞர் தேசிய சட்ட பள்ளியில் முதல் ரேங்க் பெற்றவர். அவரது பெயர் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. நீதிபதிகள் நியமனம் விஷயம் மத்திய அரசு தாமதம் செய்வது தொடர்ந்து நடைபெறுகிறது’’ என்றார். இதையடுத்து இந்த மனுக்களை விசாரிப்பதாக நீதிபதிகள் ஒப்புக் கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ட்ரோன் மூலம் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது டிஆர்டிஓ

    July 26, 2025
    தேசியம்

    பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் ஆக. 1-ம் தேதி முதல் அமல்: முதல்முறை ஊழியர்கள் ரூ.15,000 ஊக்கத் தொகை பெறுவர்

    July 26, 2025
    தேசியம்

    மாநிலங்களவை எம்.பி.யாக வில்சன், கமல், சிவலிங்கம், சல்மா பதவியேற்பு: தமிழில் உறுதி ஏற்றனர்

    July 26, 2025
    தேசியம்

    அனைத்து கட்சி கூட்டத்தில் உடன்பாடு: மக்களவையில் ஜூலை 28 முதல் இயல்புநிலை திரும்பும்

    July 26, 2025
    தேசியம்

    கேரள சிறையில் இருந்து தப்பிய ‘ஒற்றைக் கை’ ஆயுள் தண்டனை குற்றவாளியை மீண்டும் கைது செய்த போலீஸார்

    July 26, 2025
    தேசியம்

    கேமிங் செயலிகள் மூலம் தகவல் பரிமாற்றம்? – தீவிரவாதிகளின் ரகசிய நடவடிக்கை

    July 25, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ட்ரோன் மூலம் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது டிஆர்டிஓ
    • ஓட்டம் அல்லது குதித்தல் இல்லை: 21 நாட்களில் தொப்பை கொழுப்பை எரிக்க 4 எளிய வீட்டு பயிற்சிகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
    • பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம் ஆக. 1-ம் தேதி முதல் அமல்: முதல்முறை ஊழியர்கள் ரூ.15,000 ஊக்கத் தொகை பெறுவர்
    • உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த சுந்தர் பிச்சை!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.