Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 4
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்: இருவருக்கு தொற்று உறுதி
    தேசியம்

    கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்: இருவருக்கு தொற்று உறுதி

    adminBy adminJuly 4, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கேரளாவில் மீண்டும் பரவும் நிபா வைரஸ்: இருவருக்கு தொற்று உறுதி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவனந்தபுரம்: கேரளாவில் 18 வயது இளம்பெண்ணுக்கும், 38 வயது பெண்ணுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண், மூளைக்காய்ச்சல் அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் கோழிக்கோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி ஜூலை 1 அன்று உயிரிழந்தார். இதையடுத்து, கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

    இளம்பெண்ணுக்கு நிபா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், பிரேதப் பரிசோதனை செய்தவர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இதேபோல், கேரளாவின் பாலக்காடு மாவட்டம் தச்சநாட்டுக்காராவைச் சேர்ந்த 38 வயது பெண்மணி, தீவிர காய்ச்சல் காரணமாக கரிங்கல்லத்தாணி மருத்துவமனையிலும், பின்னர் மன்னார்க்காட் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றார். பின்னர், பெரிந்தல்மன்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு நிபா தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) இன்று இதனை உறுதி செய்தது. அவரது உடல்நிலை மோசடைந்துள்ளதை அடுத்து, பெரிந்தல்மன்னா மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ அதிகாரி (DMO) ஆர். ரேணுகா தெரிவித்துள்ளார்.

    நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு மாவட்டங்களில் சுகாதார அதிகாரிகள் உஷார் நிலையில் உள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ், “புனேவில் இருந்து நிபா வைரஸ் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பே கேரளாவில் அது தொடர்பான நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, வைரஸ் பரவுவதைத் தடுக்க மலப்புரம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் 26 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிய காவல்துறையின் உதவி கோரப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட அளவில் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்வார்கள். கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட இயற்கைக்கு மாறான அனைத்து மரணங்களும் கண்காணிக்கப்படும்” என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற படிப்பினைகள் என்னென்ன? – ராணுவ துணை தலைமை தளபதி விவரிப்பு

    July 4, 2025
    தேசியம்

    கடலில் கலக்கும் 2,000 டிஎம்சி நீரில் 200 டிஎம்சி கோதாவரி நீர் மக்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும்: சந்திரபாபு நாயுடு உறுதி

    July 4, 2025
    தேசியம்

    தலாய் லாமாவால் மட்டுமே வாரிசை தேர்வு செய்ய முடியும்: சீனாவின் எதிர்ப்புக்கு இந்தியா பதிலடி

    July 4, 2025
    தேசியம்

    ஸ்ரீநகரில் அமைதியாக நடைபெற்ற மொஹரம் ஊர்வலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

    July 4, 2025
    தேசியம்

    கர்நாடகாவில் இளம் வயது மாரடைப்பு மரணம் அதிகரிப்பு: 40 நாளில் 23 பேர் உயிரிழப்பு

    July 4, 2025
    தேசியம்

    பாஜக தேசியத் தலைவராக பெண் ஆளுமை; ஒப்புதல் அளித்த ஆர்எஸ்எஸ்: ரேஸில் முந்தும் நிர்மலா சீதாராமன்!

    July 4, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நீலகிரி அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் போக்சோவில் கைது
    • கோவிட் தடுப்பூசி மற்றும் திடீர் மாரடைப்பு: டெல்லி ஐம்ஸ் எந்த தொடர்பும் இல்லை என்று கூறுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஆபரேஷன் சிந்தூரில் பெற்ற படிப்பினைகள் என்னென்ன? – ராணுவ துணை தலைமை தளபதி விவரிப்பு
    • ஓசூர் அருகே சிறுவனை கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது
    • மழைநீர் குடிப்பது பாதுகாப்பானதா? விஞ்ஞானிகள் பதிலை வெளிப்படுத்துகிறார்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.