Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?
    தேசியம்

    கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

    adminBy adminJune 16, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    உத்தராகண்டின் கேதார்நாத் கோயில் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

    உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. இதில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையானது. சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பனிக் காலத்தில் மூடப்பட்டிருக்கும். கோடைக்காலத்தில் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும்.

    இந்த ஆண்டு கடந்த மே 2-ம் தேதி கேதார்நாத் கோயில் திறக்கப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை இயக்கப்படுகிறது. இதற்காக கேதார்நாத்தில் 3 ஹெலிபேட் தளங்கள் உள்ளன. இங்கிருந்து 9 தனியார் நிறுவனங்கள் ஹெலிகாப்டர் சேவைகளை இயக்கி வருகின்றன. ஒரு ஹெலிகாப்டரில் விமானி உட்பட 7 பேர் பயணம் செய்ய முடியும். நாள்தோறும் 1,500 பேர் ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

    இந்த சூழலில் கேதார்நாத் கோயிலில் வழிபாடு நடத்திய 6 பக்தர்கள், கேதார்நாத்தில் இருந்து நேற்று ஹெலிகாப்டர் மூலம் குப்தகாஷிக்கு சென்றனர். விமானி ராஜ்வீர் சிங் சவுகான் ஹெலிகாப்டரை இயக்கினார். இந்த ஹெலிகாப்டர் கவுரிகண்ட்- சோன்பிரயாக் வனப்பகுதியில் பறந்தபோது கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானி உட்பட 7 பேரும் உயிரிழந்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வீரர்கள் நீண்ட நேரம் போராடி சடலங்களை மீட்டனர்.

    மகாராஷ்டிராவை சேர்ந்த ராஜ்குமார் சுரேஷ் (41), அவரது மனைவி சாரதா (35), அவர்களது பெண் குழந்தை காசி (2), உத்தர பிரதேசத்தை சேர்ந்த வினோத் தேவி (66), அவரது பேரன் திரிஸ்டி சிங் (19), உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டம், ரான்சி பகுதியை சேர்ந்த விக்ரம் (46), ராஜஸ்தானை சேர்ந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகான் ஆகிய 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

    உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஹெலிகாப்டர் விபத்தில் பக்தர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மீட்புப் படை வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

    உத்தராகண்ட் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அதிகாரி சோனியா கூறும்போது, “மோசமான வானிலை காரணமாக ஆர்யான் அவிட்டேசன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கிறது. அடுத்த 2 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

    கேதார்நாத் புனித யாத்திரை ரத்து: கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக சோன்பிரயாக் பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து கேதார்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் தங்கள் பயணத்தை தொடரக்கூடாது. அவரவர் தங்கியுள்ள இடங்களை விட்டு வெளியேறக்கூடாது. பாதைகள் சீரமைக்கப்பட்ட பிறகு புனித யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்து உள்ளனர்.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக மோசமான வானிலை காரணமாக ருத்ரபிரயாக் சாலையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணம் செய்த பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடந்த 6 வாரங்களில் மட்டும் அடுத்தடுத்து 5 ஹெலிகாப்டர் விபத்துகள் நேரிட்டு உள்ளன. எனவே ஹெலிகாப்டர் சேவையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உத்தராகண்ட் அரசு முடிவு செய்துள்ளது.

    உயர்நிலைக் குழு விசாரணை: ஹெலிகாப்டர் விபத்து குறித்து உத்தராகண்ட் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படும். பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகே சார்தாம் புனித யாத்திரைக்கான ஹெலிகாப்டர் சேவை மீண்டும் தொடங்கப்படும்.

    தலைநகர் டேராடூனில் ஹெலிகாப்டர் சேவைகளுக்கான கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். இந்த மையத்தில் விமான போக்குவரத்து இயக்குநரகம், தேசிய பேரிடர் மீட்புப் படை, விமான போக்குவரத்து துறை, ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் இணைந்து பணியாற்றுவார்கள், கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக உயர்நிலைக் குழு விசாரணை நடத்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். தவறுகள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    அனுபவம் உள்ள விமானிகளை மட்டுமே பணியமர்த்த வேண்டும். மோசமான வானிலையின்போது ஹெலிகாப்டர்களை இயக்கக்கடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஹெலிகாப்டர் பயணத்தின்போது பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிகளை வரையறுக்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைக்க முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா திடீர் உயிரிழப்பு ஏன்? – பிரபல இதய நோய் மருத்துவர் விளக்கம்

    July 1, 2025
    தேசியம்

    மதம் மாற்றி தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்த உ.பி.யில் இருந்து கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமி மீட்பு

    July 1, 2025
    தேசியம்

    மகாராஷ்டிர தொடக்க பள்ளிகளில் மும்மொழி கொள்கை ரத்து

    July 1, 2025
    தேசியம்

    தெலங்கானா ரசாயன ஆலை வெடிவிபத்து: உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – நடந்தது என்ன?

    July 1, 2025
    தேசியம்

    தந்தை பேச்சை கேட்காத மனோஜித் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன: கொல்கத்தா போலீஸ் தகவல்  

    July 1, 2025
    தேசியம்

    65 ஆண்டுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியது: பூஜை செய்து வழிபட்ட சித்தராமையா

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கவுதம் ராம் கார்த்திக்!
    • ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு – முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
    • மூத்த நடிகைகளின் அலமாரிகளால் ஈர்க்கப்பட்ட 5 ரவிக்கை வடிவமைப்புகள்
    • பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா திடீர் உயிரிழப்பு ஏன்? – பிரபல இதய நோய் மருத்துவர் விளக்கம்
    • வாலிபாலில் சென்னை ஐசிஎஃப் அணி வெற்றி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.