Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றது உச்ச நீதிமன்றம்
    தேசியம்

    குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றது உச்ச நீதிமன்றம்

    adminBy adminAugust 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்றது உச்ச நீதிமன்றம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதாரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

    பிஹாரில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலாபாக்சி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் கூறும்போது. “5 கோடி வாக்காளர்கள், தாங்கள் இந்தியக் குடிமகன்கள் என்பதை 2.5 மாதங்களில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஆதாரை ஆவணமாக ஏற்க மறுப்பது அநீதியாகும்” என்று வாதிடப்பட்டது.

    தேர்தல் ஆணையம் சார்பில் கூறும்போது, “மனுதாரர்கள் தரப்பில் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. வரைவு வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருந்தால் நேரடியாக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

    தற்போதைய நிலையில் ஆதார், வாக்காளர் அட்டை ரேசன் அட்டையை குடியுரிமை சான்றுக்கான ஆவணமாக ஏற்க முடியாது. இந்த ஆவணங்களில் போலிகள் அதிகம் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மாலாபாக்சி ஆகியோர். “ஆதார் அட்டை குடியுரிமை சான்று கிடையாது என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை நாங்கள் ஏற்கிறோம். விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

    இதற்கு பதில் அளிக்க தேர்தல் ஆணையம் தயாராக இருக்க வேண்டும்” என்றனர். வழக்கு விசாரணை இன்றும் நடைபெற உள்ளது.

    உயர் நீதிமன்றம் உத்தரவு: வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிய பாபு அப்துல் ரூப் சர்தார் என்பவர் ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அமிர் போர்கர் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், “ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அட்டையை வைத்திருக்கும் ஒருவரை இந்திய குடிமகனாக முடியாது. இந்த ஆவணங்கள் அடையாள ஆவணங்கள் மட்டுமே” என்று உத்தரவிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அணு ஆயுதம் உள்ள பொறுப்பற்ற நாடு பாகிஸ்தான்: அசிம் முனீர் அச்சுறுத்தலுக்கு இந்தியா விமர்சனம்

    August 12, 2025
    தேசியம்

    செஸ் வரி வசூல் ரூ.3.69 லட்சம் கோடியை உரிய திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை: மத்திய அரசு மீது சிஏஜி குற்றச்சாட்டு

    August 12, 2025
    தேசியம்

    3.5 லட்சம் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன: மக்களவையில் மத்திய அரசு தகவல்

    August 12, 2025
    தேசியம்

    ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டையால் மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் ஆகிவிட முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்

    August 12, 2025
    தேசியம்

    எம்.பி.க்களுக்கான 184 அடுக்குமாடி குடியிருப்புகள்: பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

    August 12, 2025
    தேசியம்

    டெல்லியில் நாய்க்கடிக்கு 7 மாதங்களில் 26,000 பேர் பாதிப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த அரசு முடிவு

    August 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பள்ளிகள் இடையிலான வாலிபால்: டான் போஸ்கோ, வேலம்மாள் அரை இறுதிக்கு முன்னேற்றம்
    • ‘தாயுமானவர்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்: முதியோர் மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம்
    • உரத்த குறட்டை ஏன் ஒரு சிவப்புக் கொடியாக இருக்கக்கூடும் என்று சிறந்த செயல்பாட்டு மருத்துவ மருத்துவர் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மாமல்லபுரத்தில் அன்புமணி கூட்டிய பொதுக்குழு சட்ட விரோதம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
    • உயர் யூரிக் அமில அறிகுறிகள்: இரத்த பரிசோதனை உறுதிப்படுத்துவதற்கு முன்பு உங்கள் உடல் கொடுக்கும் உயர் யூரிக் அமிலத்தின் 7 ஆரம்ப அறிகுறிகள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.