Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»குடியரசு துணைத் தலைவர் தேர்தலால் மீண்டும் ஒத்திவைக்கப்படும் பாஜக தேசிய தலைவர் தேர்வு!
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தலால் மீண்டும் ஒத்திவைக்கப்படும் பாஜக தேசிய தலைவர் தேர்வு!

    adminBy adminAugust 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குடியரசு துணைத் தலைவர் தேர்தலால் மீண்டும் ஒத்திவைக்கப்படும் பாஜக தேசிய தலைவர் தேர்வு!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: பாஜகவின் புதிய தேசியத் தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் செப்டம்பர் 9 இல் நடைபெறும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் காரணமாகி விட்டது.

    பாஜகவின் தேசியத் தலைவராக மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா உள்ளார். இவரது பதவிக்காலம் முடிந்த பின்பும் 2024 மக்களவைத் தேர்தலுக்காக, அவரது பதவி காலம் முதன்முதலாக நீட்டிக்கப்பட்டது. பின்னர், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் காரணமாக அது நீட்டிக்கப்பட்டது. அமைப்புத் தேர்தல்கள் முடிவடையாததால் புதிய தலைவர் தேர்தல் நடத்த முடியவில்லை.

    இதையடுத்து சமீபத்தில், அமைப்புத் தேர்தல் பணிகள் நிறைவடைந்தன. அதன் பிறகும் தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாத நிலை பாஜகவுக்கு ஏற்பட்டு விட்டது. இதன் பின்னணியில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் தன் பதவியை ராஜினாமா செய்தது காரணமாகி விட்டது.

    தற்போது, தேர்தல் ஆணையத்தால் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி விட்டது. பாஜக வட்டாரங்களில் கிடைத்த தகவல்களின்படி, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் முடியும் வரை கட்சி தனது தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளது.

    எனினும், பாஜகவின் புதிய தேசியத் தலைவர் பதவிக்கு இதுவரையும் மத்திய அமைச்சர்களான தர்மேந்திர பிரதான், மனோகர் லால் கட்டார் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன.

    அதேசமயம், இதை விட முக்கியமாக மாநிலங்களவையின் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை தேர்வு செய்வது பாஜக தலைமைக்கு முக்கியமாகி விட்டது. மாநிலங்களவையில் பாஜகவிற்கு 102 எம்பிக்களுடன் பெரும்பான்மை உள்ளது.

    இருப்பினும் அக்கட்சி தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் உறுப்பினர்களுக்கும் ஏற்புள்ள வகையில் வேட்பாளரை தேர்வு செய்வது சவாலாகி உள்ளது. ஏனெனில், பல்வேறு எதிர்கட்சிகளின் சார்பிலான எம்.பிக்கள் மாநிலங்களவையில் உள்ளனர். இவர்களை சமாளித்து மாநிலங்களவையின் நடவடிக்கைகளை சீராக பிரச்சினையின்றி வைப்பது அரசுக்கு அவசியம்.

    வரவிருக்கும் அக்டோபரில் பிஹார் சட்டப்பேரவைக்கு தேர்தல் வர உள்ளது. இதையடுத்து மேற்குவங்க மாநில சட்டப்பேரவை உள்ளிட்ட பல தேர்தல்கள் தொடர்ந்து வருகிறது. இத்துடன் 2027 இல் புதிய குடியரசுத் தலைவர் தேர்தலும் வந்து விடும். இதனிடையே மத்திய அமைச்சரவையிலும் மாற்றம் செய்து புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டி உள்ளது.

    இவற்றின் மீதான முக்கிய முடிவுகளை எடுக்க, மிகவும் திறமையானவரை புதிய தேசிய தலைவராக அமரவைப்பது பாஜகவுக்கு அவசியம். மேலும், இப்பதவியில் அமர்பவர்கள், பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா ஆகியோருக்கு ஒத்துபோக வேண்டி இருக்கும். இதுபோன்ற காரணங்களால் தள்ளிப்போன தேர்தல் மீண்டும் ஒத்தி வைக்கப்படும் சூழலில் சிக்கியுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை காங். ஆக. 5 அன்று அம்பலப்படுத்தும்: கே.சி. வேணுகோபால்

    August 3, 2025
    தேசியம்

    ‘மக்களை விட பணம் முக்கியமா?’ – மத்திய அரசை சாடிய சிவசேனா எம்.பி | IND vs PAK Asia Cup

    August 3, 2025
    தேசியம்

    இந்திய பொருளாதாரம் செழிப்பாக உள்ளது – IMF அறிக்கையை சுட்டிக்காட்டி பியூஷ் கோயல் பதிவு

    August 3, 2025
    தேசியம்

    பிஹாரில் சொந்த வீடு இருக்கும்போது, தமிழகத்தில் எப்படி வாக்காளராக முடியும்? – ப.சிதம்பரம் கேள்வி

    August 3, 2025
    தேசியம்

    சத்தீஸ்கரில் ஆள்கடத்தல் வழக்கில் சிக்கிய கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

    August 3, 2025
    தேசியம்

    அமெரிக்கா நம்பகத்தன்மையற்ற நாடு: ரஷ்ய தூதர் டெனிஸ் அலி​போவ் கருத்து

    August 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தீரன் சின்னமலை 220வது நினைவு நாள்: அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை
    • ஆப்டிகல் மாயை: 9 வினாடிகளில் 3 UNARBED பூசணிக்காயைக் கண்டுபிடி | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • தேர்தல் ஆணையத்தின் முறைகேடுகளை காங். ஆக. 5 அன்று அம்பலப்படுத்தும்: கே.சி. வேணுகோபால்
    • பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – திருமூர்த்தி மலையில் ஆடி பெருக்கு பூஜைகள் நிறுத்தம்
    • வீடு வீடாகச் சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தெரிவியுங்கள் – தொண்டர்களுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.