Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 20
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்
    தேசியம்

    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்

    adminBy adminAugust 20, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனுத் தாக்கலின்போது அதிமுகவின் தம்பிதுரை உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்.பிக்களும் கலந்துகொண்டனர்.

    யார் இந்த சிபிஆர்? – திருப்பூரைச் சேர்ந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிராவின் ஆளுநராக 2024-ம் ஆண்டு ஜூலை 31 அன்று பதவியேற்றார். அதற்கு முன்பு, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார்.

    அக்டோபர் 20, 1957 அன்று பிறந்த ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சுவயம்சேவகர் ஆக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1974-ம் ஆண்டு பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.

    1996-ம் ஆண்டில் தமிழக பாஜக செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 1998, 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவையில் இருந்து இருமுறை எம்​.பி.​யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக பதவி வகித்தார். பாஜக தலைவராக இருந்த காலகட்டத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.

    அரசியல் வாழ்க்கையை தாண்டி, ராதாகிருஷ்ணன் கல்லூரி காலத்தில் டேபிள் டென்னிஸில் சாம்பியனாகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் மற்றும் கைப்பந்து அவருக்கு பிடித்தமான விளையாட்டுகள்.

    கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முதல் மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகித்து வருகிறார். இந்தச் சூழலில், குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாள​ராக சி.பி.​ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

    இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி: குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி போட்டியிடுகிறார். அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஏகமனதாக அவரை தேர்வு செய்துள்ளன.

    உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி இந்தியாவின் முற்போக்கான சட்ட வல்லுநர்களில் ஒருவர். தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஆகுலமல்லாவரத்தில் 1946-ல் பிறந்த சுதர்சன் ரெட்டி, 1971-ல் ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை நிறைவு செய்தார். அதே ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பார் கவுன்சிலில் பெயரை பதிவு செய்தார்.1995-ல் ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்றார். 2005-ல் குவாஹாட்டி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 2007 முதல் 2011 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். 2013-ல் கோவா மாநில லோக்யுக்தாவில் பணியாற்றினார். பின்னர், தனிப்பட்ட காரணங்களால் 7 மாதங்களில் பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. இவர் நாளை 21-ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ரூ.75,000 கோடி முதலீட்டில் 3 கப்பல் கட்டும் தளங்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்

    August 20, 2025
    தேசியம்

    ‘மத்திய – மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் பாலமாக உள்ளார்கள்’ – உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் வாதம்

    August 20, 2025
    தேசியம்

    ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை மசோதா மக்களவையில் தாக்கல்

    August 20, 2025
    தேசியம்

    டெல்லியில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாணவர்கள் வெளியேற்றம்

    August 20, 2025
    தேசியம்

    கேள்வி கேட்பதே தேசதுரோகமா? – மூத்த பத்திரிகையாளர்களுக்கு சம்மன்; ஸ்டாலின் கண்டனம்

    August 20, 2025
    தேசியம்

    காவிரியில் தமிழகத்துக்கு விநாடிக்கு 1 லட்சம் கன அடி நீர் திறப்பு

    August 20, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ரூ.75,000 கோடி முதலீட்டில் 3 கப்பல் கட்டும் தளங்களை உருவாக்க மத்திய அரசு திட்டம்
    • தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது: உயர் நீதிமன்றம்
    • திருச்சியில் வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் விநியோகம் – திருவெறும்பூரில் பணிகள் தீவிரம்
    • பொதுவான வலி நிவாரணி மருந்துகள் மீண்டும் மீண்டும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும்: ஆய்வு | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘மத்திய – மாநில அரசுகளுக்கு ஆளுநர்கள் பாலமாக உள்ளார்கள்’ – உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் வாதம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.