Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 23
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
    தேசியம்

    குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

    adminBy adminJuly 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: சட்ட மசோதாக்கள் மீது ஆளுநரும், குடியரசுத் தலைவரும் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடர்பாக குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாக கிடப்பில் போட்டதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் 8 அன்று பிறப்பித்த உத்தரவில். “தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்காமல். அவற்றை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் பரிந்துரை செய்தது சட்டவிரோதம். அந்த 10 மசோதாக்களும் உடனடியாக சட்டமாக்கப்பட்டு, அமலுக்கு வந்துவிட்டன. மறுநிறைவேற்றம் செய்து அனுப்பிவைக்கப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், குடியரசுத் தலைவர் 3 மாதங்களிலும் முடிவெடுக்க வேண்டும்” என காலக்கெடு நிர்ணயம் செய்து தீர்ப்பளித்தனர்.

    இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடந்த மே 13-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 143-ஐ பயன்படுத்தி, உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகளை எழுப்பி, விளக்கம் கோரி கடிதம் அனுப்பியிருந்தார்.

    குடியரசுத் தலைவரின் இந்த கடிதம் வழக்காக விசாரணைக்கு ஏற்கப்பட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது குடியரசுத் தலைவரின் இந்த விளக்கம் கோரும் கடிதத்தை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்று, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சனும், கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணி சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

    மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தனது வாதத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பான குடியரசுத் தலைவரின் இந்த விளக்கம், ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை பலவீனப்படுத்தும் தீவிரமான முயற்சி என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி. “இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என வாதிட்டார்.

    அப்போது மத்திய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அரசியலமைப்பின் 143-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் தனக்கு எழும் சந்தேகங்களுக்கு விடைகாணும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தையும், ஆலோசனையையும் கேட்க வழிவகை உள்ளது. குறிப்பாக, மாநில அரசுகள் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களில் ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் கையெழுத்திடுவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்கும் நீதித்துறையின் அதிகாரம் குறித்த கூர்மையான கேள்வியும், ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவதில் நீதித்துறையின் தலையீட்டுக்கான சாத்தியக்கூறுகள் குறித்த கேள்வியும் இதில் அடக்கம்” என்றார்.

    அதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தரப்பில் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், அதன் பிறகு அதில் உள்ள சாராம்சங்களின் அடிப்படையில் காலவரம்பு நிர்ணயம் செய்து விசாரிக்கப்படும். இந்த விவகாரத்தில் அரசியல் சாசனம் தொடர்பாக சில விளக்கங்களும் தேவைப்படுவதால், இந்த வழக்கில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு உதவ வேண்டும். இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை ஆகஸ்ட் மாதம் தொடங்கும்” என்று கூறி விசாரணையை வரும் ஜூலை 29-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பக்தர்களின் வசதிக்காக திருமலையில் 3-வது க்யூ காம்ப்ளக்ஸ்: அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம்

    July 23, 2025
    தேசியம்

    எரிபொருள் சுவிட்ச் பரிசோதனையை நிறைவு செய்தது ஏர் இந்தியா

    July 23, 2025
    தேசியம்

    மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து 12 பேர் விடுதலையை எதிர்த்து மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு

    July 23, 2025
    தேசியம்

    நாடாளுமன்ற இரு அவையிலும் எதிர்க்கட்சியினர் 2-ம் நாளாக அமளி

    July 23, 2025
    தேசியம்

    இந்திய ராணுவத்திடம் 3 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை ஒப்படைத்தது போயிங்

    July 23, 2025
    தேசியம்

    ஜெகதீப் தன்கர் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

    July 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • காசாவில் மூன்று நாட்களில் 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு: ஐ.நா பகிர்வு
    • நெல்லை காந்திமதியம்மன் | ஆடி மாதமும் அம்மன் திருவருளும்
    • மெட்ரோ பணி​யில் இருந்த ராட்சத கிரேன் பழுதால் போக்குவரத்து நெரிசல்
    • ஆமணக்கு எண்ணெய் மற்றும் குளிர் அழுத்தப்பட்ட ஆமணக்கு எண்ணெய்: முடி மீண்டும் வளர்வதற்கு எது சிறந்தது? – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பக்தர்களின் வசதிக்காக திருமலையில் 3-வது க்யூ காம்ப்ளக்ஸ்: அறங்காவலர் குழு கூட்டத்தில் தீர்மானம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.