Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 1
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»குஜராத் விமான விபத்தில் என்ன நடந்தது? – விமான போக்குவரத்து துறை விளக்கம்
    தேசியம்

    குஜராத் விமான விபத்தில் என்ன நடந்தது? – விமான போக்குவரத்து துறை விளக்கம்

    adminBy adminJune 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குஜராத் விமான விபத்தில் என்ன நடந்தது? – விமான போக்குவரத்து துறை விளக்கம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    குஜராத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் என்ன நடந்தது என்பது பற்றி விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, செயலாளர் சமீர் குமார் சின்ஹா ஆகியோர் நேற்று விளக்கம் அளித்தனர்.

    குஜராத்தின் அகமதாபாத் நகரில் கடந்த 12-ம் தேதி அன்று லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் பயணிகள், விமானம் விழுந்த விடுதியில் இருந்த மருத்துவர்கள் உட்பட மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மத்திய அரசு சார்பில் நேற்று முதல் முறையாக விளக்கம் அளிக்கப்பட்டது. விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, செயலாளர் சமீர் குமார் சின்ஹா ஆகியோர் நேற்று பேட்டி அளித்தனர். சமீர் குமார் சின்ஹா அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ஏர் இந்தியா விமானம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்த புறப்பட்ட ஒரு நிமிடத்தில் மெஹானி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. 650 அடி உயரத்துக்கு மேலே பறந்த விமானம், திடீரென கீழே இறக்கத் தொடங்கியது. விமான கட்டுப்பாட்டு அறைக்கு மதியம் 1.39 மணியளவில் ‘மேடே’ அவசர அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து விமான கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் விமானியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால், பதில் இல்லை. விமான நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள மெஹானி நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.

    விமான விபத்து நடப்பதற்கு முன்பாக, அந்த விமானம் பாரீஸ் – டெல்லி – அகமதாபாத் வழித்தடத்தில் இயக்கப்பட்டது. அப்போது அதில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இவ்வாறு சமீர் குமார் சின்ஹா கூறினார்.

    அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறுகையில், ‘‘ அகமதாபாத்தில் நடந்த விமான விபத்து நாட்டையே உலுக்கிவிட்டது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். நானும் சாலை விபத்தில் என் தந்தையை இழந்துள்ளேன். அதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடியும். விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்தின் உத்தரவுப்படி போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானங்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தியாவில் இயங்கும் 34 ட்ரீம்லைனர் விமானங்களில் 8 விமானங்கள் ஏற்கெனவே ஆய்வில் உள்ளன’’ என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!

    July 1, 2025
    தேசியம்

    பெண்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றும் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள்: செலவு என்ன?

    July 1, 2025
    தேசியம்

    வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    July 1, 2025
    தேசியம்

    பிராமணர்களுக்கு தடை விதித்த பிஹார் கிராமம் – பின்னணி என்ன?

    July 1, 2025
    தேசியம்

    பயணிகளின் அனைத்து தேவைகளுக்குமான ரயில்ஒன் செயலி – ரயில்வே அமைச்சர் அறிமுகம்

    July 1, 2025
    தேசியம்

    தெலங்கானா விபத்து: உயிரிழப்பு 44 ஆக அதிகரிப்பு; ரூ.1 கோடி இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவு

    July 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
    • புற்றுநோய்: முழுமையான இருளில் தூங்குவது: புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்க இது எவ்வாறு உதவுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மகாராஷ்டிராவில் ஒலிபெருக்கி கட்டுப்பாடு எதிரொலி: மசூதிகளின் பாங்கு ஒலிக்கும் ‘செயலி’க்கு வரவேற்பு!
    • 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரியில் ஜூலை 9 தொழிற்சங்கங்கள் பந்த்
    • இந்த மாலை உணவுகள் மற்றும் பானங்கள் உங்கள் மூளை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அல்சைமர் ஆபத்தை அதிகரிக்கும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.