Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 11
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
    தேசியம்

    குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

    adminBy adminJuly 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    வடோதரா: குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

    குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டம் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் (மஹி) ஆற்றின் குறுக்கே கம்பீரா – முஜிப்புர் பகுதிகளை இணைக்கும் பாலம் இருந்தது. வழக்கம்போல நேற்று காலை வாகனங்களில் ஏராளமானோர் பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைக்கும் சென்று கொண்டிருந்தனர்.

    திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்ற பலர் வாகனங்களுடன் ஆற்றில் விழுந்தனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆற்றில் நீந்திச்சென்று பலரை மீட்டனர். தகவலறிந்து விரைந்துவந்த போலீஸார், தீயணைப்புப் படையினர், மாநில மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்த பாலம் ஆனந்த் மாவட்டத்தையும், வடோதரா மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. பாலம் இடிந்து விழுந்தது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    முதல்கட்ட விசாரணையில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த 2 டிரக்குகள், எஸ்யுவி கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் விழுந்தது தெரியவந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘பாலத்தில் விரிசல் விடும் சப்தம் பயங்கரமாக கேட்டது. சில விநாடிகளில் பாலத்தின் ஒரு பகுதி அப்படியே இடிந்து விழுந்தது’’ என்றனர். பத்ரா எம்எல்ஏ சைதன்யாசின் ஜலா உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினார்.

    இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, ‘‘மத்திய குஜராத்தையும், சவுராஷ்டிரா பகுதியையும் இணைக்கும் முக்கிய பாலமாக இது இருந்தது. இந்த பாலத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதை பராமரிக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டனர். இங்கு போக்குவரத்து நெரிசல் மட்டுமன்றி, அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதற்கான இடமாகவும் இருந்தது. பலமுறை இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றனர்.

    குஜராத் மாநில அரசு சார்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், முழு மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்கும் என்றும் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனப் பிரதமரும் அறிவித்திருந்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    அது என்ன ‘SIR’? – பிஹார் வாக்காளர் பட்டியலில் ‘சிறப்புத் தீவிர திருத்தம்’ சலசலப்பும் பின்னணியும்!

    July 10, 2025
    தேசியம்

    பெங்களூரு சாலையில் சென்ற பெண்களை அனுமதியின்றி வீடியோ எடுத்து பகிர்ந்த இளைஞர் கைது!

    July 10, 2025
    தேசியம்

    இடதுசாரி தீவிரவாத அமைப்புகளை முடக்க மகாராஷ்டிர பேரவையில் மசோதா தாக்கல்

    July 10, 2025
    தேசியம்

    உக்ரைனியர்களை ரஷ்யாவாலும், பாலஸ்தீனர்களை இஸ்ரேலாலும் அழித்துவிட முடியாது: ப.சிதம்பரம்

    July 10, 2025
    தேசியம்

    கர்நாடக முதல்வர் பதவி காலியாக இல்லை: சித்தராமையா

    July 10, 2025
    தேசியம்

    SIR-க்கு ஆதார் ஏற்கப்படாதது ஏன்? – பிஹார் வாக்காளர் பட்டியல் விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

    July 10, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பழநி கோயில் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்களா? – நிர்வாகம் மறுப்பு
    • 10 ஆறுதல் புனைகதைகள் ஒரு மழை நாளில் ஒரு போர்வை போல உணர்கின்றன | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அக்.10 வெளியாகிறது ‘பாகுபலி: தி எபிக்’ – படக்குழு அறிவிப்பு!
    • மதுரை மாநகராட்சியில் ‘பதவி’ எதிர்பார்த்து காய் நகர்த்திய கவுன்சிலர்கள் ஏமாற்றம்!
    • சிறிய இடங்கள் பெரியதாகவும் பிரகாசமாகவும் தோற்றமளிக்க 5 உள்துறை வடிவமைப்பு தந்திரங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.