Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, July 18
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»காஷ்மீர் எல்லையில் கூடுதல் பதுங்கு குழிகள்: தலைமை செயலாளர் அதல் துலோ தகவல்
    தேசியம்

    காஷ்மீர் எல்லையில் கூடுதல் பதுங்கு குழிகள்: தலைமை செயலாளர் அதல் துலோ தகவல்

    adminBy adminMay 15, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காஷ்மீர் எல்லையில் கூடுதல் பதுங்கு குழிகள்: தலைமை செயலாளர் அதல் துலோ தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    Last Updated : 15 May, 2025 06:06 AM

    Published : 15 May 2025 06:06 AM
    Last Updated : 15 May 2025 06:06 AM

    காஷ்மீர் எல்லையில் கூடுதல் பதுங்கு குழிகள்: தலைமை செயலாளர் அதல் துலோ தகவல்

    ராஜோரி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் மக்களின் பாதுகாப்புக்காக கூடுதல் பதுங்கு குழிகள் அமைக்கப்படும் என ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் அதல் துலோ தெரிவித்துள்ளார்.

    இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது காஷ்மீர் எல்லை கிராமங்களில் பாகிஸ்தான் படை பீரங்கி மற்றும் துப்பாக்கிகளால் தொடர் தாக்குதல் நடத்தியது. இதில் எல்லை கிராமங்களில் வசித்த பலரது வீடுகள் சேதம் அடைந்தன. கால்நடைகள் இறந்தன. தற்போது இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் தலைமை செயலாளர் அதல் துலோ, பாகிஸ்தான் குண்டு வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட ராஜோரி மாவட்டத்தை பார்வையிட்டார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்பு, எல்லைப் பகுதியில் பீரங்கி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்றது. இதில் குப்வாரா, உரி மற்றும் பூஞ்ச் பகுதியில் ஏராளமான வீடுகள், வழிபாட்டு தலங்கள் சேதம் அடைந்தன. அதிக பாதிப்புகளை சந்தித்தாலும், மக்கள் ராணுவத்துக்கு துணையாக நின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் பணியில் உள்ளாட்சி துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சேதங்கள் மதீப்பீடு செய்யப்பட்டு விரைவில் நிவாரணம் அளிக்கப்படும்.

    ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் தற்போது 9,500 பதுங்கு குழிகள் உள்ளன. மேலும் பதுங்கு குழிகள் அமைக்கப்பட வேண்டும் என இங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாங்கள் அவற்றை விரைவில் கட்டுவோம். பதுங்கு குழிகளுக்கு பற்றாக்குறை ஏற்படாது. இவ்வாறு அதல் துலோ கூறினார்.

    ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தங்கதர் பகுதியில் சமுதாய பதுங்கு குழிகளை நேற்று ஆய்வு செய்தார். குப்வாரா மக்களை சந்தித்தபின் பேட்டியளித்த அவர், ‘‘ சேதங்களை மதிப்பீடு செய்யும் பணி முடிவடைந்தவுடன், மக்களுக்கு அரசு இழப்பீடு வழங்கும்’’ என்றார்.

    லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
    Follow

    FOLLOW US




    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ‘இது பொறுப்பற்ற செயல்’ – அகமதாபாத் விமான விபத்து குறித்த அமெரிக்க ஊடக செய்திக்கு ஏஏஐபி எதிர்வினை

    July 17, 2025
    தேசியம்

    ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டால் இந்தியாவுக்கு மாற்று வழிகள் உள்ளன: மத்திய அரசு

    July 17, 2025
    தேசியம்

    கேரளாவில் தொடரும் கனமழை: வயநாடு, கண்ணூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    July 17, 2025
    தேசியம்

    நிலமோசடி வழக்கில் ராபர்ட் வதேராவின் ரூ.37 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத் துறை அதிரடி

    July 17, 2025
    தேசியம்

    நிமிஷா பிரியாவை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? – இந்திய வெளியுறவு அமைச்சகம் விவரிப்பு

    July 17, 2025
    தேசியம்

    இந்தியாவை தாக்கினால் விளைவுகள் உண்டு என்ற வலுவான செய்தி உலகுக்கு வழங்கப்பட்டுள்ளது: அமித் ஷா

    July 17, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நகங்களில் சிறிய வெள்ளை புள்ளிகள் யாவை? சிறந்த செயல்பாட்டு மருத்துவம் இது ஒரு எச்சரிக்கை அடையாளமாக இருக்கலாம் என்று கூறுகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் 36,731 பேருக்கு தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு
    • சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஆந்த்ரே ரஸல் ஓய்வு!
    • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர போலி சான்றிதழ் அளித்த 20 பேருக்கு 3 ஆண்டு தடை
    • பெண் சுகாதார ஆராய்ச்சி ஏன் வயதான எதிர்ப்பு அறிவியலின் எதிர்காலமாக இருக்கலாம் – இந்தியாவின் காலங்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.