Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, July 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»காங்கிரஸ் அரசுகளைவிட மோடி அரசு கேரளாவுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது: அமித்ஷா
    தேசியம்

    காங்கிரஸ் அரசுகளைவிட மோடி அரசு கேரளாவுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது: அமித்ஷா

    adminBy adminJuly 12, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    காங்கிரஸ் அரசுகளைவிட மோடி அரசு கேரளாவுக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது: அமித்ஷா
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருவனந்தபுரம்: பிரதமர் மோடி தலைமையிலான அரசு, முந்தைய காங்கிரஸ் அரசுகளை விட கேரளாவுக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

    திருவனந்தபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமித்ஷா, “கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணி மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரண்டும் ஊழல் நிறைந்தவை. கேரள மாநிலத்தின் மீது மத்திய அரசு மாற்றாந்தாய் அணுகுமுறையோடு இருப்பதாகக் கூறுவது தவறு. மோடி தலைமையிலான மத்திய அரசு முந்தைய யுபிஏ அரசாங்கத்தை விட கேரளாவுக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.

    எல்டிஎஃப் மற்றும் யுடிஎஃப் அரசுகள் ஊழல் நிறைந்த அரசாங்கமாக இருந்து வருகிறது. எடிஎஃப் அரசாங்கத்தில் கூட்டுறவு வங்கி ஊழல், ஏஐ கேமரா ஊழல், லைஃப் மிஷன் ஊழல், பிபிஇ கிட் ஊழல் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தங்கக் கடத்தல் ஊழல் ஆகியவை நடைபெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசு கேரளாவுக்கு காங்கிரஸ் அரசுகள் விடுவித்த நிதியைவிட பல மடங்கு நிதியை விடுவித்தது. இது குறித்த ஒவ்வொரு விவரத்தையும் இன்று பாஜக தலைமை அலுவலகம் மூலம் பகிரங்கமாக வெளியிடுவேன்.

    பிரதமர் மோடி கேரளாவின் வளர்ச்சிக்கு மூன்று முக்கிய தொலைநோக்கு திட்டங்களைக் கொண்டுள்ளார். ஊழல் இல்லாத நிர்வாகம், அரசுத் திட்டங்களில் பாகுபாடு இல்லாதது மற்றும் அரசியல் நன்மைகளுக்கு அப்பால் கேரளாவின் வளர்ச்சி ஆகிய மூன்று இவை ஆகும். பாஜக மற்றும் சிபிஐ(எம்) இரண்டுமே ஒழுங்கமைப்பட்ட கட்சிகள். ஆனால் இரண்டிற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. சிபிஎம்-க்கு மாநிலத்தின் வளர்ச்சியை விட கட்சி நலன் பெரியது. அதே நேரத்தில் பாஜக கட்சி கட்டமைப்பை விட மக்கள் நலனை முன்னிறுத்துகிறது” என்றார்

    தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா மார்ச் 31, 2026-க்குள் நக்சலிசம் இல்லாத நாடாக மாறும். பயங்கரவாதத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பாஜகவைத் தவிர வேறு யாராலும் பதிலளிக்க முடியாது. உரி தாக்குதலுக்கு சர்ஜிக்கல் ஸ்டிரைக், புல்வாமா தாக்குதல்களுக்கு வான்வழித் தாக்குதல், பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று பதிலளித்தோம்.” என்று அவர் கூறினார்.

    140 உறுப்பினர்களை கொண்ட கேரள சட்டமன்றத்துக்கு 2026ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப், காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மேற்கு வங்கம், கேரளா, தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும்: அமித் ஷா நம்பிக்கை

    July 13, 2025
    தேசியம்

    அகமதாபாத் விமான விபத்து: எரிபொருள் சப்ளை நின்றதே விபத்துக்கு காரணம் – முதல்கட்ட அறிக்கை கூறுவது என்ன?

    July 13, 2025
    தேசியம்

    சத்தீஸ்கரில் ரூ.1.18 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட 23 மாவோயிஸ்டுகள் சரண்

    July 12, 2025
    தேசியம்

    ஐஐஎம் கொல்கத்தா மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போலீஸார் தீவிர விசாரணை

    July 12, 2025
    தேசியம்

    ‘வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் 17 உரைகள்’ – மோடிக்கு பாஜக பாராட்டு; காங்கிரஸ் விமர்சனம்

    July 12, 2025
    தேசியம்

    இளைஞர்கள்தான் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்துக்கான உத்தரவாதம்: பிரதமர் மோடி

    July 12, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தவர்கள் குடும்பத்துடன் தவெக தலைவர் விஜய் சந்திப்பு
    • உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: பாமக தொண்டர்களுக்கு ராமதாஸும் உருக்கமான கடிதம்
    • தமிழகத்தில் தனி பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி: புதுச்சேரியில் பழனிசாமி உறுதி
    • விண்ணுக்கு மனிதர்கள் பயணிக்கும் ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் டிசம்பரில் பரிசோதனை: இஸ்ரோ தலைவர் தகவல்
    • இணையத்தில் ட்ரோலுக்கு ஆளான சாய் அபயங்கர் – பின்னணி என்ன?

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.