Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»“கவுடில்யரின் தத்துவத்தை பிரதமர் மோடி செயல் வடிவில் காட்டியுள்ளார்” – ஜக்தீப் தன்கர் புகழாரம்
    தேசியம்

    “கவுடில்யரின் தத்துவத்தை பிரதமர் மோடி செயல் வடிவில் காட்டியுள்ளார்” – ஜக்தீப் தன்கர் புகழாரம்

    adminBy adminMay 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “கவுடில்யரின் தத்துவத்தை பிரதமர் மோடி செயல் வடிவில் காட்டியுள்ளார்” – ஜக்தீப் தன்கர் புகழாரம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: “நமது பிரதமர் மோடி, கவுடில்யரின் தத்துவத்தை செயல் வடிவில் வெளிப்படுத்தியுள்ளார்” என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இந்தியா அறக்கட்டளையைச் சேர்ந்த கவுடில்யா அமைப்பின் பிரதிநிதிகளுடன் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் புதுடெல்லியில் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர், “நமது பிரதமர், ஒரு சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர். பெரிய அளவிலான நம்பிக்கை கொண்டவர். மிகப் பெரிய மாற்றத்தின் மீது அவர் அளப்பரிய நம்பிக்கை கொண்டுள்ளார்.

    பத்தாண்டு கால நிர்வாகத்திற்குப் பிறகு, அரசின் முடிவுகள் அழியாத சுவடுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. பல தசாப்த கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள ஒருவரை நாம் பெற்றுள்ளோம். அதுதான் அனைத்து விதமான மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. ‘எதிரியின் எதிரி ஒரு நண்பன்” என்று கூறியவர் கவுடில்யர். கவுடில்யரின் இந்த தத்துவத்தை செயல்வடிவில் எடுத்துக் காட்டியுள்ளார் நமது பிரதமர்.

    இந்த நாட்டில் புதுமையான நிர்வாகம் நடைமுறையில் உள்ளது. நாட்டில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களுக்கு அதிகாரிகள் செல்வதற்குத் தயங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வளர்ச்சியில் பின்தங்கியுள்ள அத்தகைய மாவட்டங்களுக்கு ‘முன்னேற விரும்பும் மாவட்டங்கள்’ என்று பெயரிட்டடார். தற்போது அவை வளர்ச்சியில் முன்னணி மாவட்டங்களாக மாறிவிட்டன.

    தொழில்முனைவோருக்கு வசதிகள் கிடைக்கும் சூழல் போன்ற பல்வேறு காரணிகளால் மக்கள் பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கிறார்கள் என்று கருதிய பிரதமர், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களும் பொருளாதார நடவடிக்கைகளின் மையங்களாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    கவுடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில், ‘மன்னரின் மகிழ்ச்சி அவரது குடிமக்களின் மகிழ்ச்சியில் உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியாக இயங்கும் எந்தவொரு நாட்டின் அரசியலமைப்புக் சட்டத்தையும் உற்று நோக்கினால், இந்தத் தத்துவம் ஜனநாயக ஆட்சி முறை மற்றும் அதன் விழுமியங்களின் அடிப்படையான ஆன்மா மற்றும் சாரத்தைக் காண முடியும்.

    இந்தியாவில், ஜனநாயகம் நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததாலோ அல்லது அந்நிய ஆட்சியிலிருந்து நாம் சுதந்திரம் பெற்றதாலோ தொடங்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் ஒரு ஜனநாயக நாடாக இருக்கிறோம். மேலும் இந்த வெளிப்பாடு மற்றும் உரையாடல், வேத கலாச்சாரத்தில் அனந்த் வாத் என்று அறியப்படுகிறது” என்று தெரிவித்தார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நாடு முழுவதும் இன்று மெகா வேலைநிறுத்தம்: 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்பு

    July 9, 2025
    தேசியம்

    ‘கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயிலில் நடந்த 10+ பாலியல் கொலைகள்’ – முன்னாள் ஊழியர் பகீர் தகவல்

    July 8, 2025
    தேசியம்

    கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? – ரந்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம்

    July 8, 2025
    தேசியம்

    அகமதாபாத் விமான விபத்து: அரசிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

    July 8, 2025
    தேசியம்

    “நான் பகுதிநேர நடிகர்… முழுநேர அரசியல்வாதி!” – ஸ்மிருதி இரானி

    July 8, 2025
    தேசியம்

    போரை நிறுத்தியதற்கு ட்ரம்ப் மீண்டும் உரிமை கோருகிறார்; மோடி எப்போது மவுனம் கலைப்பார்? – காங். கேள்வி

    July 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பாரத் பந்த்: தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் – அமைச்சர் சிவசங்கர் தகவல்
    • தமிழகத்தில் இன்று வெப்பநிலை உயரும்
    • பிஎட் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
    • நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
    • உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.