Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, June 28
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகளுக்கு இழப்பீடு: மத்திய அமைச்சர் தகவல்
    தேசியம்

    கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகளுக்கு இழப்பீடு: மத்திய அமைச்சர் தகவல்

    adminBy adminJune 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கர்நாடக மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகளுக்கு இழப்பீடு: மத்திய அமைச்சர் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: மாம்பழ விவசாயிகளின் துயரத்துக்கு தீர்வு காணக் கோரி மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கு திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் குறிப்பாக கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் மாம்பழ சாகுபடி அதிகம் நடக்கிறது. பாரம்பரிய மாம்பழ விவசாயிகள் கடந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்தபோது டன் ஒன்றுக்கு ரூ.18,000 அளவுக்கு கூடுதல் விலை பெற்றனர். ஆனால், தற்போது மிகக் குறைந்த மகசூல் கிடைத்திருக்கும் நிலையில், கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.4,000 மட்டுமே கிடைக்கிறது.

    உற்பத்திச் செலவு முந்தைய ஆண்டை விட அதிகம் இருப்பதால், விவசாயிகள் பழங்களை மரத்திலேயே விட்டுவிட்டு, சாலைகளில் வீசி எறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது விவசாயிகள் அரசின் ஆதரவைக் கோரி வருகின்றனர். இந்நிலையில்,

    பிரதமர் அன்னதாதா ஆய் சம்ரக்ஷண் அபியான் திட்டத்தின் கீழ் சந்தை தலையீட்டு விலையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். தோட்டக்கலை ஒருங்கிணைந்த மேம்பாட்டு மிஷன் திட்டத்தின் கீழ் குளிர்பதன வசதிகள் மற்றும் மாம்பழக் கூழ் உற்பத்தி அலகுகளை அமைக்க வேண்டும். பழரச பானங்களில் 20 சதவீதம் பழரசக் கூழ் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்ற நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

    பானப் பொருட்களில் செயற்கை ரசாயனங்கள் சேர்ப்பதற்கு பதிலாக இயற்கை பழரசத்தைப் பயன்படுத்த வேண்டும். விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்காக இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். நடுத்தர வணிகர்களின் சிண்டிகேட் அமைப்பை ஒழிக்க கடுமையான ஒழுங்குமுறை விற்பனை முறையை அமல்படுத்த வேண்டும்.

    விவசாயிகளை ஒடுக்கும் நடுத்தர வணிகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். நஷ்டத்துக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி மாம்பழத்தின் மகசூலை இந்த பருவத்தில் பாதுகாக்க வேண்டும். இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். இவ்வாறு எம்பி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஒரு புலி, 4 குட்டிகளை விஷம் வைத்து கொன்றதாக கர்நாடகாவில் 3 பேர் கைது

    June 28, 2025
    தேசியம்

    சட்டக் கல்லூரி மாணவி வழக்கு: முதல்வர் மம்தா, திரிணமூல் காங். மீது பாஜக சரமாரி குற்றச்சாட்டு

    June 28, 2025
    தேசியம்

    “அரசியல் சாசன முகவுரை மாற்ற முடியாதது, ஆனால்…” – ஜெகதீப் தன்கர் பேச்சு

    June 28, 2025
    தேசியம்

    “அற்புதம்…” – விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி சிலாகிப்பு

    June 28, 2025
    தேசியம்

    அரசியலமைப்பு முகவுரையில் இருந்து ‘மதச்சார்பின்மை’ வார்த்தையை நீக்க வேண்டும்: அசாம் முதல்வர்

    June 28, 2025
    தேசியம்

    ‘சட்டப்பிரிவு 370’ என்பது அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானது: தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • கிராம சுகாதார செவிலியர்கள் ஜூலை 10-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
    • உத்தரகண்ட் பயணம், உத்தரகண்ட் சுற்றுலா, உத்தரகண்டில் பார்வையிட வேண்டிய இடங்கள், உத்தரகண்டில் செய்ய வேண்டிய விஷயங்கள், உத்தரகண்டில் உள்ள மலை நிலையங்கள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • டி20-யில் முதல் சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா: இங்கிலாந்துக்கு எதிராக அபாரம்!
    • போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகர் கிருஷ்ணா ஜாமீன் கோரி மனு
    • உணவு லேபிள்களைப் படிப்பது போதாது! இந்த அன்றாட பொருட்கள் ஆரோக்கியத்திற்கு அழிவை ஏற்படுத்துகின்றன; ஏன் என்று தெரியும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.