Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, July 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கர்நாடகாவில் அதிர்ச்சி: கடந்த 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை
    தேசியம்

    கர்நாடகாவில் அதிர்ச்சி: கடந்த 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை

    adminBy adminJuly 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கர்நாடகாவில் அதிர்ச்சி: கடந்த 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: கர்நாடகாவில் 2024 முதல் இதுவரையிலான 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை நடந்துள்ளதாக அரசின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் அரசை பாஜகவும், மத்திய பாஜக அரசை காங்கிரஸும் மாறி மாறி குற்றம்சாட்டியுள்ளன.

    கர்நாடகாவில் 2024 முதல் 2025 ஆம் ஆண்டின் இப்போது வரையிலான 16 மாதங்களில் 981 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவற்றில், 825 விவசாயிகள் விவசாயக் காரணங்களுக்காக தற்கொலை செய்துகொண்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 138 பேர் வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டனர். அதில் இதுவரை 807 குடும்பங்களுக்கு மாநில அரசு இழப்பீடு வழங்கியுள்ளது, 18 பேருக்கான இழப்பீடு இன்னும் நிலுவையில் உள்ளது.

    மாவட்டங்களை பொறுத்தவரை, ஹாவேரியில் அதிகபட்சமாக 128 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். மைசூரில் 73 விவசாயிகளும், தார்வாட்டில் 72 விவசாயிகளும், பெலகாவி 71 விவசாயிகளும் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் பெங்களூரு ரூரல், பெங்களூரு அர்பன், உடுப்பி மற்றும் கோலார் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் தற்கொலைகள் எதுவும் பதிவாகவில்லை.

    இதுகுறித்து காங்கிரஸ் அரசை சாடிய பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, “காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால் விவசாயிகள் மத்தியில் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, மாநிலத்தில் விவசாயத் துறையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டங்கள் நிறுத்தப்பட்டன. சித்தராமையா அரசு கர்நாடக விவசாயிகளை ஏமாற்றிவிட்டதை இது தெளிவாகக் காட்டுகிறது.” என்றார்

    பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், “பாஜகவும் விஜயேந்திராவும் இந்த விஷயத்தில் பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. பூச்சிக்கொல்லிகளின் பற்றாக்குறை குறித்து குறிப்பிட்டிருந்தோம். பிரதமர் மோடி குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிப்பதாக உறுதியளித்திருந்தார், ஆனால் அது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. டீசல் விலை அதிகரித்துள்ளது, கூடுதல் வரிகள் அதிகமாக உள்ளன. விவசாயிகளுக்காக மாநில அரசு பல மானியங்களை வழங்குகிறது. ஆனால், மத்திய அரசு கூடுதல் வரிகளை விதிப்பதை நிறுத்த வேண்டும்.” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இந்து கோயில் கட்ட நிலத்தை தானம் அளித்த இஸ்லாமியர்கள்: உ.பி-யில் நெகிழ்ச்சி சம்பவம்

    July 28, 2025
    தேசியம்

    போர் நிறுத்தத்துக்கான காரணத்தை பிரதமரிடம் இருந்து அறிய விரும்புகிறோம்: காங்கிரஸ்

    July 28, 2025
    தேசியம்

    பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட சுலேமான் ஷா சுட்டுக்கொலை?

    July 28, 2025
    தேசியம்

    ‘ஆபத்தானது, தொந்தரவானது’ – நாய்க்கடி சம்பவங்கள் குறித்து தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணை

    July 28, 2025
    தேசியம்

    ஏர் இந்தியாவின் 31 விமானங்களில் சோதனை நிறைவு: கனிமொழி சோமு கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்

    July 28, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    July 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • குயினோவா வெர்சஸ் பிரவுன் அரிசி: எடை இழப்பு, செரிமான ஆரோக்கியம் மற்றும் புரதத் தேவைகளுக்கு எந்த தானியத்திற்கு உங்களுக்கு சரியானது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ஹாரி சார்லஸ் யார்? 7 6.7 மில்லியன் விசித்திரக் கதை திருமணத்திலிருந்து ஈவ் ஜாப்ஸின் ஒலிம்பியன் கணவனை சந்திக்கவும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘ஆஷஸ் தொடரில் ஆஸி. ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்காது’ – இங்கிலாந்துக்கு ஸ்மித் வார்னிங்
    • ஓசெம்பிக் அல்லது கடுமையான உடற்பயிற்சிகளும் இல்லாமல் பெண் 35 கிலோ சிந்திக்கிறாள்: அவளிடமிருந்து 5 பயனுள்ள எடை இழப்பு உதவிக்குறிப்புகள் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • TOI விளக்குகிறது: நிசார் எவ்வாறு கட்டப்பட்டது – எந்த தரவுகளும் வருவதற்கு 90 நாட்கள் ஆகும் | இந்தியா செய்தி – டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.