Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, July 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»‘கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயிலில் நடந்த 10+ பாலியல் கொலைகள்’ – முன்னாள் ஊழியர் பகீர் தகவல்
    தேசியம்

    ‘கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயிலில் நடந்த 10+ பாலியல் கொலைகள்’ – முன்னாள் ஊழியர் பகீர் தகவல்

    adminBy adminJuly 8, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ‘கர்நாடகாவின் தர்மஸ்தலா கோயிலில் நடந்த 10+ பாலியல் கொலைகள்’ – முன்னாள் ஊழியர் பகீர் தகவல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பெங்களூரு: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் உள்ள கோயிலில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட பல பெண்களின் உடல்களை தானே புதைத்ததாக முன்னாள் ஊழியர் போலீஸிஸிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக மாநிலம் தட்சின கன்னட மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதா கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அது தொடர்பாக யாரும் புகார் அளிக்காததால் போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை.

    இதுகுறித்து மங்களூருவை சேர்ந்த வழக்கறிஞர் சச்சின் தேஷ்பாண்டே கூறுகையில், “தர்மஸ்தலா கோயிலில் 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை தூய்மைப் பணியாளராக பணியாற்றிய 52 வயதான நபர் தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், அவர் தர்மஸ்தலா கோயிலில் பணியாற்றியபோது பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் சடலங்களை நேத்ராவதி ஆற்றங்கரையில் புதைத்துள்ளனர். தற்போது போலீஸில் புகார் அளித்த தூய்மைப் பணியாளர் பணிக்கு சேர்ந்தபோது, ஓர் உடலை புதைக்குமாறு வற்புறுத்தப்பட்டிருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தபோது கோயில் நிர்வாகிகள் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும், குடும்பத்தோடு கொளுத்திவிடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதன் காரணமாக அந்த தூய்மைப் பணியாளர் 10-க்கும் மேற்பட்ட பெண்களை ஆற்றங்கரையோரம் புதைத்துள்ளார். பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு, காயமடைந்திருந்த பல பெண்களின் உடல்களை எரித்துள்ளார். அதில் பள்ளி மாணவிகளும் அடங்குவர். ஒருமுறை பள்ளி மாணவி ஒருவரின் உடலை, அவரது பாடப்புத்தக பையுடன் சேர்த்து எரித்துள்ளார்.

    2014-ல் சம்பந்தப்பட்ட தூய்மைப் பணியாளரின் குடும்பத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கே கோயில் நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை கொல்ல முயற்சித்தபோது, அங்கிருந்து குடும்பத்தோடு தப்பி தலைமறைவானார். அவர் தற்போது தனது தவறை உணர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக போலீஸில் புகார் அளித்துள்ளார்.

    உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் தனஞ்செய் மூலமாக கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக புகார் அளித்த முன்னாள் தூய்மைப் பணியாளருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்றார்.

    3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

    இது குறித்து போலீஸாரிடம் விசாரித்த போது, “இந்த புகார் குறித்து 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மஸ்தலாவில் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட பெண்களின் பட்டியலை கொண்டு விசாரணை நடத்த இருக்கிறோம். இதுகுறித்து கோயில் நிர்வாகிகளை விசாரித்து, உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் நேத்ராவதி ஆற்றங்கரையில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்” என தெரிவித்தனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    நாடு முழுவதும் இன்று மெகா வேலைநிறுத்தம்: 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்பு

    July 9, 2025
    தேசியம்

    கர்நாடக முதல்வர் மாற்றப்படுகிறாரா? – ரந்தீப் சிங் சுர்ஜேவாலா விளக்கம்

    July 8, 2025
    தேசியம்

    அகமதாபாத் விமான விபத்து: அரசிடம் முதற்கட்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

    July 8, 2025
    தேசியம்

    “நான் பகுதிநேர நடிகர்… முழுநேர அரசியல்வாதி!” – ஸ்மிருதி இரானி

    July 8, 2025
    தேசியம்

    போரை நிறுத்தியதற்கு ட்ரம்ப் மீண்டும் உரிமை கோருகிறார்; மோடி எப்போது மவுனம் கலைப்பார்? – காங். கேள்வி

    July 8, 2025
    தேசியம்

    அரசு பங்களாவை இன்னும் காலி செய்யாதது ஏன்? – முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் விளக்கம்

    July 8, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
    • உள்ளாட்சி அமைப்புகளின் தனி அலுவலர் பதவிக்காலம் நீட்டிப்பு
    • நாடு முழுவதும் இன்று மெகா வேலைநிறுத்தம்: 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்க வாய்ப்பு
    • தென் மாவட்டங்களின் 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10 முதல் அரசு பஸ்களை அனுமதிக்க கூடாது: ஐகோர்ட்
    • ஜெயலலிதா சொ.கு வழக்கில் தொடர்பில்லாத தனது சொத்தும் முடக்கப்பட்டதாக மூதாட்டி வழக்கு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.