Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி: ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்த ராஜஸ்தான் தொழிலதிபர்
    தேசியம்

    கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி: ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்த ராஜஸ்தான் தொழிலதிபர்

    adminBy adminAugust 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி: ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்த ராஜஸ்தான் தொழிலதிபர்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புது டெல்லி: ராஜஸ்தானில் கருப்பு பணத்தை வெள்ளையாக்க அரசியல் கட்சி துவங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்த தொழிலதிபர் வருமான வரித்துறையினரிடம் சிக்கினார்.

    ராஜஸ்தானின் பில்வாராவில் தொழிலதிபராக இருப்பவர் கமலேஷ் ஆச்சார்யா. இவர், தனது நண்பர்களான வழக்கறிஞர்கள் விகாஸ் வியாஸ் மற்றும் தீபக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து ஒரு அரசியல் கட்சி துவக்கி உள்ளார்.

    சுமார் மூன்று வருடங்களுக்கு முன் துவக்கப்பட்ட இக்கட்சியின் பெயர், ‘தேசிய சர்வ சமாஜ் கட்சி’. இதன் பின்னணியில் தமது கறுப்புப் பணத்தை மத்திய அரசிற்கு எந்த வகை வரிகளும் செலுத்தாமல் அவற்றை வெள்ளைப் பணமாக்குவது காரணமாக இருந்துள்ளது.

    கட்சி துவக்கிய பின் அதன் பெயரில் கடந்த மூன்று வருடங்களில் ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. இதன் மீதானப் புகார்களினால், நேற்று இந்த மூவர் வீடுகளிலும் மத்திய வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

    இதில் பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்தக் கட்சி இதுவரை ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. கட்சியின் பெயரில் எங்கும் கூட்டம் நடத்தியதாகவும் தகவல்கள் இல்லை.

    ஆனால், பில்வாராவில் இரண்டு வழக்கறிஞர்களும் அவர்களது நண்பரும் மூன்று ஆண்டுகளில் கட்சியின் கணக்கிலிருந்து ரூ.271 கோடி பரிவர்த்தனை செய்துள்ளனர். இந்த மூவரும் கட்சியின் வங்கிக் கணக்குகள் மூலமாக நன்கொடைகளுக்கான பணத்தைப் பெற்று வந்தனர். நன்கொடைகள் சேகரித்த பின், அதற்கான ஒரு குறிப்பிட்ட கமிஷனைக் கழித்து நன்கொடையாளர்களுக்குத் திருப்பித் தருவதை வழக்கமாக்கி உள்ளனர்.

    அரசியல் கட்சியின் பெயரில் இந்த செயல்முறையின் மூலம், கருப்புப் பணம் சட்டப்பூர்வமாக வெள்ளை பணமாக்கப்பட்டு வந்துள்ளது. இந்த நன்கொடைகளை பெரும்பாலும் மும்பையின் சில ஆடிட்டர்கள் மூலமாக செய்துள்ளனர். இது வெளிச்சத்திற்கு வந்த பிறகு, வருமான வரித் துறை பில்வாராவிற்கு பின் மும்பையிலும் சோதனை நடத்தினர். பில்வாரா நடவடிக்கைக்கு முன்பாக, வருமான வரிக் குழு உத்தரபிரதேசத்தின் காசியாபாத்திற்கு சென்றுள்ளனர்.

    அங்கு தான் இந்த அரசியல் கட்சியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இருந்தது. அது பூட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதும், பில்வாராவில் உள்ள குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக நடைபெற வாய்ப்பு – தகவல்

    September 22, 2025
    தேசியம்

    ‘ஆபரேஷன் சிந்தூர்’ பார்ட் – 2 நடக்குமா? – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியது என்ன?

    September 22, 2025
    தேசியம்

    2006 முதல் 2014 வரை ஜிஎஸ்டியை எதிர்த்த ஒரே முதல்வர் நரேந்திர மோடி: ஜெயராம் ரமேஷ்

    September 22, 2025
    தேசியம்

    எச்1பி விசா கட்டண உயர்வால் திருமணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்காவுக்கு அவசரமாக புறப்பட்ட இந்தியர்கள்

    September 22, 2025
    தேசியம்

    அருணாச்சல், திரிபுராவுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்

    September 22, 2025
    தேசியம்

    ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பெட்ஷீட், கம்பளி திருடிய பயணிகள் சிக்கினர்

    September 22, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘டிரம்பின் எச் 1 பி விசா கட்டுப்பாடுகளுக்குப் பின்னால் உண்மையான காரணம்…’: கூகிள் தலைமையகத்திற்கு வெளியே தனது புகைப்படத்திற்குப் பிறகு எச் -1 பி விசா கட்டண உயர்வுக்கு இணைய வரவு எம்பிஏ சாய் வாலாவை இணைய வரவு வைக்கிறது | உலக செய்தி – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • பாக். வீரர் ஃபர்ஹானின் துப்பாக்கிச் சூடு போஸும் சர்ச்சையும் – IND vs PAK
    • திறமையான வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணத்தை ரத்து செய்ய இங்கிலாந்து பரிசீலனை?
    • எரிவாயு திட்டங்களில் அரசின் நிலைப்பாடு என்ன? – அக்.2-ல் உண்ணாவிரதம் அறிவித்தார் பிஆர் பாண்டியன்
    • துளசி நீர் நன்மைகள்: துளசி தண்ணீரை வைத்திருக்க 7 காரணங்கள் காலையில் முதல் விஷயம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.