Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Saturday, August 2
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கன்னியாஸ்திரிகள் கைது | நீதிமன்றத்துக்கு அழுத்தம் தர காங். முயற்சி? – சத்தீஸ்கர் துணை முதல்வர் கேள்வி
    தேசியம்

    கன்னியாஸ்திரிகள் கைது | நீதிமன்றத்துக்கு அழுத்தம் தர காங். முயற்சி? – சத்தீஸ்கர் துணை முதல்வர் கேள்வி

    adminBy adminAugust 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கன்னியாஸ்திரிகள் கைது | நீதிமன்றத்துக்கு அழுத்தம் தர காங். முயற்சி? – சத்தீஸ்கர் துணை முதல்வர் கேள்வி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ராய்ப்பூர்: கேரள கன்னியாஸ்திரிகள் இருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போராட்டங்களை நடத்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க முயல்கிறதா என்ற கேள்வி எழுவதாக சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சர்மா, “கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் ஆட்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்துகிறது.

    இத்தகைய போராட்டங்கள், சிறுபான்மை கிறிஸ்தவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அன்றி வேறல்ல. ஏற்கெனவே, காங்கிரஸ் குழு ஒன்று, கன்னியாஸ்திரிகளைச் சந்திக்க அனுமதி கோரியது. நாங்கள் அனுமதி அளித்தோம். நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுப்பதுதான் காங்கிரசின் நோக்கமா?

    இந்த வழக்கை காவல்துறை விசாரித்து வருகிறது. அவர்களுக்கு பிணை வழங்குவதா வேண்டாமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்” என தெரிவித்தார்.

    கன்னியாஸ்திரிகள் இருவரும் கடந்த ஜூலை 25-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த கைதைக் கண்டித்து கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் போராட்டங்களை நடத்தின. பாஜக தலைமையிலான சத்தீஸ்கர் அரசு மதச் சுதந்திரத்தை நசுக்குவதாக இரு தரப்பும் பாஜகவை குற்றம் சாட்டின. அதேநேரத்தில், கேரள பாஜகவும் கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேரள பாஜக மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர், கன்னியாஸ்திரிகள் இருவரும் சட்டவிரோத மத மாற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பதை நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த எம்பி சசி தரூர், “கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டது மிகப் பெரிய அநீதி. சட்டவிரோதமாக அவர்கள் எதையும் செய்யவில்லை. பணிக்காகவே பழங்குடி பெண்கள் சிலரை மாநகருக்கு அவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அதைப் பார்த்த பஜ்ரங் தல் அமைப்பினர் செய்த பிரச்சினை காரணமாகவே கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சரி அல்ல. அனைவருமே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கேரளாவில் உள்ள பாஜகவினர், தாங்கள் சத்தீஸ்கர் சென்று கன்னியாஸ்திரிகளை ஜாமீனில் அழைத்து வரப் போவதாகக் கூறினர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.” என குற்றம் சாட்டினார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    செப்டம்பர் 9-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்

    August 2, 2025
    தேசியம்

    ஜார்க்கண்டில் வீட்டுக்குள் நுழைந்த புலியை பாதுகாப்பாக மீட்க உதவிய தந்தை, மகளுக்கு விருது!

    August 1, 2025
    தேசியம்

    “நாகரிகமில்லாத பொறுப்பற்றவர் ட்ரம்ப்!” – இந்திய பொருளாதாரம் குறித்த கருத்துக்கு தேவகவுடா காட்டம்

    August 1, 2025
    தேசியம்

    அமெரிக்க உறவு முதல் நிமிஷா பிரியா வழக்கு நிலை வரை: இந்திய வெளியுறவுத் துறை விளக்கம்

    August 1, 2025
    தேசியம்

    பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு

    August 1, 2025
    தேசியம்

    பிஹார் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை இடம்பெறவில்லை

    August 1, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நடிகைக்கு மனநல பிரச்சினை: தந்தை போலீஸில் புகார்
    • பாமக பொதுக்குழு கூட்டம்: ராமதாஸ், அன்புமணி போட்டி அறிவிப்பு
    • குழந்தைகளுக்கு கருணை கற்பிப்பது எப்படி: பெற்றோருக்கு 5 உதவிக்குறிப்புகள்
    • இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழப்பு: முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி
    • காசி – ராமேசுவரம் கோயில் தீர்த்தங்களை பரிமாறிக்கொள்ள வழிபாட்டு ஒப்பந்தம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.