Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கனடா ஜி7 உச்சி மாநாட்டில் மோடிக்கு அழைப்பு இல்லை? – ‘ராஜதந்திர குளறுபடி’ என காங். விமர்சனம்
    தேசியம்

    கனடா ஜி7 உச்சி மாநாட்டில் மோடிக்கு அழைப்பு இல்லை? – ‘ராஜதந்திர குளறுபடி’ என காங். விமர்சனம்

    adminBy adminJune 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கனடா ஜி7 உச்சி மாநாட்டில் மோடிக்கு அழைப்பு இல்லை? – ‘ராஜதந்திர குளறுபடி’ என காங். விமர்சனம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: “கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்படாதது மற்றுமொரு ராஜதந்திர குளறுபடி” என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே “மத்தியஸ்தம்” செய்ய அமெரிக்காவை அனுமதித்த “தவறு”க்குப் பிறகு இந்த ராஜதந்திர குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

    உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து ஆலோசிக்கும் ஜி7 உச்சி மாநாடு இம்முறை ஜூன் 15 முதல் 17 வரை கனடாவில் நடைபெற உள்ளது. இதில், ரஷ்யா – உக்ரைன் உள்பட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றன. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு கனடா அழைப்பு விடுக்கவில்லை என செய்திகள் வெளியாகி உள்ளன. ஒருவேளை, கனடா இனி அழைப்பு விடுப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டாலும், அதில் பங்கேற்பதற்கான அடிப்படை வேலைகளை மேற்கொள்ள போதுமான காலம் இல்லாததால் பிரதமர் மோடி, மாநாட்டை தவிர்ப்பார் என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்கா அதிபர், பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து, ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி மற்றும் கனடா நாடுகளின் பிரதமர்கள் கனடாவின் ஆல்பர்ட்டாவில் உள்ள கனனாஸ்கிஸில் ஜூன் 15 முதல் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார்கள். பிரேசில், மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் அதிபர்களுக்கும், ஆஸ்திரேலிய பிரதமருக்கும் உச்சிமாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    2014 க்கு முன்பு, ஜி7, ஜி8 ஆக இருந்தது. அப்போது, அதில் ரஷ்யாவும் இருந்தது. ஜி8 உச்சிமாநாட்டுக்கு இந்தியா அழைக்கப்படும். பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங்கின் குரல் அதில் ஒலிக்கும். ஜூன் 2007-இல் ஜெர்மனியில் நடந்த அத்தகைய ஓர் உச்சிமாநாட்டில்தான் காலநிலை மாற்ற பேச்சுவார்த்தைகளுக்கான பிரபலமான மன்மோகன் சிங் -மெர்க்கல் சூத்திரம் வெளியிடப்பட்டது. 2014-க்குப் பிறகும் இந்தியப் பிரதமர்களை அழைக்கும் பாரம்பரியம் தொடர்ந்தது.

    ஆனால் இப்போது, ​​6 ஆண்டுகளில் முதல் முறையாக, ‘விஸ்வகுரு’ கனடா உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார். என்ன சொன்னாலும், இது மற்றொரு பெரிய ராஜதந்திர குளறுபடி என்பதே உண்மை. பல 10 ஆண்டு கால இந்திய வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா தலைகீழாக மாற்ற அனுமதித்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய அந்த நாட்டை அனுமதித்த பின்னர் நேரிட்ட மற்றுமொரு ராஜதந்திர குழப்பம் இது” என தெரிவித்துள்ளார்.

    காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று 2023-ஆம் ஆண்டு அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்தியா – கனடா உறவு மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    ஹரியானாவில் முன்னாள் காங். எம்எல்ஏ-வின் ரூ.557 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

    June 30, 2025
    தேசியம்

    ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா இழந்த விமானம் குறித்து காங்கிரஸ் மீண்டும் கேள்வி

    June 30, 2025
    தேசியம்

    சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி அரசின் நல திட்டங்களால் 95 கோடி பேர் பயன்: பிரதமர் மோடி பகிர்வு

    June 30, 2025
    தேசியம்

    பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட மாணவியை சந்திக்க கொல்கத்தா மகளிர் ஆணைய உறுப்பினருக்கு அனுமதி மறுப்பு

    June 29, 2025
    தேசியம்

    ஜார்க்கண்ட்: ஜாம்ஷெட்பூரில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளியில் இருந்து 162 குழந்தைகள் மீட்பு

    June 29, 2025
    தேசியம்

    புரி கோயில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: மாவட்ட எஸ்.பி, ஆட்சியர் பணியிட மாற்றம்

    June 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • நெல்லையை வீழ்த்திய திருப்பூர் தமிழன்ஸ்!
    • திமுக கூட்டணி மறுபரிசீலனைக்கு அவசியமில்லை: நிர்வாக குழு கூட்டத்துக்கு பிறகு வைகோ திட்டவட்டம்
    • இந்தியாவில் பெண் தொழில்முனைவோர் உலக சராசரியைவிட மிகவும் குறைவு
    • ஹரியானாவில் முன்னாள் காங். எம்எல்ஏ-வின் ரூ.557 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை
    • தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும்: மத்திய அமைச்சர் எல்​.​முருகன் தகவல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.