Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Friday, September 12
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கடையடைப்பு, பைக் பேரணிகள் முதல் சாலை, ரயில் மறியல் வரை – எப்படி இருந்தது பாரத் பந்த்?
    தேசியம்

    கடையடைப்பு, பைக் பேரணிகள் முதல் சாலை, ரயில் மறியல் வரை – எப்படி இருந்தது பாரத் பந்த்?

    adminBy adminJuly 9, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கடையடைப்பு, பைக் பேரணிகள் முதல் சாலை, ரயில் மறியல் வரை – எப்படி இருந்தது பாரத் பந்த்?
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    பொதுத்​ துறை நிறு​வனங்​களை தனி​யாருக்கு தாரை வார்க்​கக் ​கூ​டாது, தொழிலா​ளர்​களுக்கு எதி​ரான 4 சட்​டங்​களை திரும்​பப் ​பெற வேண்​டும், பொதுத் ​துறை நிறு​வனங்​களில் காலிப்​ பணி​யிடங்​களை நிரப்ப வேண்​டும், மத்​திய – மாநில அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை மீண்​டும் கொண்​டுவர வேண்​டும் என்​பன உள்​ளிட்ட 17 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் இன்று (ஜூலை 9) நாடு முழுவதும் பரவலாக பாரத் பந்த் நடைபெற்றது.

    10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் நடந்த பாரத் பந்த் காரணமாக நாடு முழுவதும் பரவலாக சாலை, ரயில் மறியல்கள், கண்டனப் பேரணிகள், இருசக்கர வாகனப் பேரணிகள் நடைபெற்றன. கேரளாவில் பாரத் பந்த் தாக்கம் பரவலாக உணரப்பட்டது. அங்கே பொது, தனியார் போக்குவரத்து வாகனங்கள் பெரும்பாலும் இயங்கவில்லை. குறிப்பாக, தொலைதூரங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலுமாகவே இயங்கவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

    வெறிசோடிய திருவனந்தபுரம்

    மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் – போலீஸார் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற மோதல் போக்கு நீடித்தது. இருப்பினும், மாநிலம் முழுவதுமே வன்முறை சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாமல் தவிர்க்கும் பொருட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    கொல்கத்தாவில் நடந்த பேரணி

    தேசியத் தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை பந்த் தாக்கம் பெரிதாக உணரப்படவில்லை. அனைத்திந்திய வர்த்தக கூட்டமைப்பினர் ஆதரவாக ஆங்காங்கே போராட்டங்கள் நடந்த போதிலும், டெல்லியில் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போலவே இயங்கின. டெல்லியின் மிகவும் பரபரப்பான கனோட் பேலஸில் வழக்கம்போல் வணிக நிறுவனங்கள் செயல்பட்டன. டெல்லியில் உள்ள பிரபலமான கான் மார்கெட் உள்பட 700 சந்தைகளும், 56 தொழிற்பேட்டைகளும் வழக்கம்போல் இன்று இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த சாலை மறியல்

    கர்நாடகாவில் மைசூரு நகரில் அமைந்துள்ள தொழிற்பேட்டைகளில் மட்டும் பந்த் தாக்கம் லேசாக உணரப்பட்டது. அங்கு ஏஐயுடியுசி, சிஐடியு, ஏஐகேஎம்எஸ் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் மாநில, மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். பேரணியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜகதீஷ் சூர்யா பேசுகையில், “இந்த பந்த் போராட்டமானது, மத்திய, மாநில அரசுகளுக்கு தொழிற்சங்கங்களின் பலத்தை வலியுறுத்தும்படி அமைந்துள்ளது” என்றார்.

    இடம்: சென்னை அண்ணா சாலை | படம்: பி.ஜோதி ராமலிங்கம்

    தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. கல்வி நிலைங்கள், வணிக நிறுவனங்களும் வழக்கம் போல் இயங்கின. பெரிதாக பாதிப்பு ஏதுமில்லை என்றாலும் தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். தலைநகர் சென்னை தொடங்கி தென்மாவட்டங்கள் வரை இத்தகைய மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

    விருதுநகரில் 17 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 2,312 பேர் கைது

    எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்ஆர்எம்யு துணை பொதுச்செயலாளரும், எஸ்ஆர்எம்யு சென்னை கோட்ட தலைவருமான பால் மேக்ஸ்வெல் தலைமை வகித்து பேசினார். ஹிந்த் மஸ்தூர் சபா சார்பில், அண்ணாசாலை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்ஆர்எம்யூ தலைவரும் ஹிந்த் மஸ்தூர் சபா தலைவருமான ராஜா ஸ்ரீதர் பங்கேற்றார். 13 தொழிற்சங்கங்களை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    கடலூரில் தொழிற்சங்கத்தினர் 15 இடங்களில் மறியல் போராட்டம்; 1500 பேர் கைது

    மதுரையில் நடந்த சாலை மறியல் – படம்: ஆர்.அசோக்

    புதுச்சேரியில் பெரும்பாலும் கடைகள், வணிக நிறுவனங்கள் பூட்டியிருந்தன.

    அசாமில், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பரவலாக இன்றை பந்த்தில் இணைந்து போராட்டங்களில் கலந்து கொண்டனர். அங்கு சரக்கு வாகனங்கள் பெரிதாக இயங்கவில்லை. மாநிலத்தில் போக்குவரத்துக் கழகங்கள் பரவலாக பந்த்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. பேருந்துகள், லாரிகள் ஓடவில்லை. பள்ளி வாகனங்கள், அவசரகால சேவை ஊர்திகள் இயங்க அனுமதிக்கப்பட்டன. கவுகாத்தியில் மாநகரப் பேருந்துகள், ஆப் மூலம் இயங்கும் டாக்சி சேவைகள் கூட இயங்கவில்லை.

    தெலங்கானாவில் ஹைதராபாத் நகரில் தொழிற்சங்க உறுப்பினர்கள் பைக் பேரணி நடத்தொனர். நகரின் பல்வேறு பகுதிகளிலும் சிவப்புக் கொடிகளுடன் போராட்டங்கள் நடந்தன. சிஐடியு, டியுசிஐ, ஏஐயுடியுசி உறுப்பினர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் பாகிலிங்கம்பள்ளியில் இருந்து பேரணியாகச் சென்றனர். சிலர் பைக்கிலும் பேரணியில் இணைந்தனர். சிக்கட்பள்ளி வந்தபோது அவர்கள் தடுத்து கைது செய்யப்பட்டனர்.

    தெலங்கானாவில் நடந்த பைக் பேரணி

    தெலங்கானாவின் கம்மம் நகரில் நடந்த பேரணி

    மும்பையில் வங்கி ஊழியர்கள் பாரத் பந்த்தில் இணைந்தனர். – படம்: இமானுவேல் யோகினி

    53% இந்தியர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை: காங்கிரஸ் – பாரத் பந்த் ஒட்டி கர்நாடகா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சூர்ஜேவாலா அளித்தப் பேட்டியில், “இந்திய தொழில் சக்தியில், 53% பேருக்கு சமூகப் பாதுகாப்பு இல்லை. 80% தொழில் சக்தி அமைப்புசாராதவர்களாகவே இருக்கின்றனர். 60% தொழிலாளர்கள் எவ்வித எழுத்துபூர்வ ஒப்பந்தமும் இல்லாமல் தான் பணியாற்றுகின்றனர்.” என்றார்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    பாஜகவுக்கு வாக்களிப்பது கேரள கலாச்சாரத்தை அழித்துவிடும்: பினராயி விஜயன்

    September 11, 2025
    தேசியம்

    சீன எல்லை வழியாக கடந்த 2 ஆண்டுகளில் ரூ.800 கோடி மதிப்புள்ள தங்கம் இந்தியாவுக்கு கடத்தல்

    September 11, 2025
    தேசியம்

    ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவின் ரத யாத்திரையை தொடங்கி வைத்த கர்நாடக உள்துறை அமைச்சர்: காங்கிரஸில் சர்ச்சை

    September 11, 2025
    தேசியம்

    புலியைப் பிடிக்காததால் கிராம மக்கள் ஆத்திரம்: கர்நாடகாவில் 7 வனத் துறையினர் கூண்டில் அடைப்பு

    September 11, 2025
    தேசியம்

    இண்டியா கூட்டணி எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நன்றி

    September 11, 2025
    தேசியம்

    ‘குடியரசு துணைத் தலைவர் தேர்தலிலும் வாக்கு திருட்டு’ – பாஜக மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு

    September 11, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சாதிய படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் உருவாக்க தமிழக அரசுக்கு பிருந்தா காரத் வலியுறுத்தல்
    • திமுகதான் ஐசியூ-வில் உள்ளது: உதயநிதிக்கு பழனிசாமி பதிலடி
    • ஆசிரியர் ‘டெட்’ தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு
    • ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.24,307 கோடி முதலீடுக்கு ஒப்பந்தங்கள்
    • மாரடைப்பு ஆபத்து: ஜிம்மைத் தொடங்கவா? இளைஞர்களிடையே மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க இருதயநோய் நிபுணர் ஐந்து சோதனைகளை பரிந்துரைக்கிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.