Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Tuesday, September 9
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»கடல் முதல் மலை வரையிலான எல்லைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க திட்டம்
    தேசியம்

    கடல் முதல் மலை வரையிலான எல்லைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க திட்டம்

    adminBy adminSeptember 9, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    கடல் முதல் மலை வரையிலான எல்லைகளை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க திட்டம்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: கடல் முதல் மலைகள் வரை இந்​தி​யா​வின் எல்​லைப் பகு​தி​களை ட்ரோன்​கள் மூலம் கண்​காணிக்க ராணுவம் திட்​ட​மிட்டுள்​ளது. பாகிஸ்​தான், சீனா, வங்​கதேசம், மியான்​மர், பூடான் நாடு​களு​டன் இந்​தியா எல்​லையை பகிர்ந்து கொண்டு உள்​ளது. மேலும் இலங்​கை, மாலத்​தீவு ஆகிய தீவு நாடு​கள் இந்​தி​யா​வுக்கு அருகே அமைந்​துள்​ளன. மிக நீண்ட கால​மாக சீன, பாகிஸ்​தான் எல்​லைப் பகு​தி​களில் பிரச்​சினை நீடித்து வரு​கிறது.

    எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக கடந்த 1962-ம் ஆண்​டில் இந்​தி​யா, சீனா இடையே மிகப்​பெரிய போர் நடை​பெற்​றது. கடந்த 2017-ம் ஆண்​டில் சிக்​கிமின் டோக்​லாம் பகு​தி​யில் இரு நாடு​கள் இடையே 73 நாட்​கள் போர் பதற்​றம் நீடித்​தது. கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்கு பகு​தி​யில் இந்​திய, சீன வீரர்​களிடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​டது.

    எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக கடந்த 1947, 1965, 1971, 1999-ம் ஆண்​டு​களில் இந்​தி​யா​வுக்​கும் பாகிஸ்​தானுக்​கும் இடையே போர்கள் நடை​பெற்​றன. பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதல் தொடர்​பாக கடந்த மே மாதம் 2 நாடு​களுக்​கும் இடையே 4 நாட்​கள் அதிதீ​விர போர் நடை​பெற்​றது.

    இந்நிலையில், இந்​திய ராணுவ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: எல்​லைப் பகு​தி​களில் கண்​காணிப்பு மற்​றும் ஆயுதங்​களை கொண்டு செல்ல ட்ரோன்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. தகவல் தொடர்பு மற்​றும் தீவிர​வா​தி​களை வேட்​டை​யாட​வும் ட்ரோன்​கள் பயன்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இந்த சூழலில் எல்​லைப் பகு​தி​களை கண்​காணிக்க 5,000 சிறப்பு ட்ரோன்​களை பயன்​படுத்த திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. இவை தரைதளத்​துடன் கேபிள் மூலம் இணைக்​கப்​பட்டு இருக்​கும்.

    இதன்​படி சுமார் 100 மீட்​டர் உயரத்​தில் ட்ரோன்​கள் பறக்​கும். இவை சுமார் 10 கி.மீ. தொலைவு வரை கண்​காணிப்பு பணி​களை மேற்​கொள்​ளும். ஒரு ட்ரோன் தொடர்ந்து 9 மணி நேரம் பறக்​கும் திறன் கொண்​ட​தாக இருக்​கும். இந்த ட்ரோன்​களில் ஜிபிஎஸ் கருவி பொருத்​தப்​படும். சிறப்பு தகவல் தொடர்பு கருவி​கள் மூலம் செயற்​கைக்​கோள்​கள் உடன் ட்ரோன்​கள் இணைக்​கப்​பட்டு இருக்​கும்.

    காஷ்மீர், லடாக், வடகிழக்கு மாநிலங்​களின் மலைப்​பகு​தி​களில் சிறப்பு ட்ரோன்​கள் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​படும். இவை தரைதளத்​தில் கேபிளு​டன் இணைக்​கப்​பட்ட ட்ரோன்​கள் பறக்​கும். இதே​போல கடல் எல்​லைப் பகு​தி​களில் அச்​சுறுத்​தல் நில​வும் பகு​தி​களி​லும் ட்ரோன்​கள் பணி​யில் ஈடு​படுத்​தப்​படும். அனைத்து தட்​பவெப்ப சூழ்​நிலைகளி​லும் சிறப்பு ட்ரோன்​கள் கண்​காணிப்பு பணி​களை மேற்​கொள்​ளும்.

    இந்த ட்ரோன்​கள் இந்​தி​யா​வின் ஆகாஷ்தீர் வான் பாது​காப்பு கவச கட்​டமைப்​புடன் இணைக்​கப்​படும். இதன்மூலம் எதிரி​களின் வான்வழி அச்​சுறுத்​தல்​களை இந்​தியா மிக எளி​தாக எதிர்​கொள்​ள முடி​யும்​. இவ்​வாறு இந்​தி​ய ராணுவ வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மழை, வெள்ளத்தால் பாதித்த இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

    September 9, 2025
    தேசியம்

    “சிறையில் வாழ முடியவில்லை… எனக்கு விஷம் கொடுங்கள்!” – நீதிபதியிடம் நடிகர் தர்ஷன் முறையீடு

    September 9, 2025
    தேசியம்

    “ராகுல் காந்தி 2029-ல் பிரதமராக வருவார்” – டி.கே.சிவகுமார் நம்பிக்கை

    September 9, 2025
    தேசியம்

    ஜம்மு காஷ்மீரில் 2வது நாளாக துப்பாக்கிச் சூடு: 2 வீரர்கள் உயிரிழப்பு, 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    September 9, 2025
    தேசியம்

    ம.பி.யில் தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

    September 9, 2025
    தேசியம்

    கேதார்நாத்துக்கான ஹெலிகாப்டர் கட்டணம் ரூ. 5,000 வரை உயர்வு – தொழில்நுட்ப பாதுகாப்பு அதிகரிப்பு

    September 9, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • “திமுக தூண்டுதலில் தான் எல்லா வேலைகளும் நடக்கிறது” – நயினார் நாகேந்திரன் காட்டம்
    • அமெரிக்க அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட 10 பிரபலமான புத்தகங்கள்
    • மழை, வெள்ளத்தால் பாதித்த இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி: பிரதமர் மோடி அறிவிப்பு
    • வெளிநாட்டு முதலீடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: இபிஎஸ்
    • இடுப்பு ஆரோக்கியம்: சிறுநீர் கழிக்கும் போது பெண்கள் இதைச் செய்வதை நிறுத்த வேண்டும்: பெண்களுக்கு இடுப்பு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் குளியலறையின் தவறுகளை நிபுணர் எச்சரிக்கிறார்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.