Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, September 24
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ககன்யானுக்கான முதல் ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றி: இஸ்ரோ
    தேசியம்

    ககன்யானுக்கான முதல் ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றி: இஸ்ரோ

    adminBy adminAugust 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ககன்யானுக்கான முதல் ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றி: இஸ்ரோ
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: இஸ்ரோவின் முதல் விண்வெளி பயணமான ககன்யானில் செல்ல உள்ள விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதிப்படுத்தும் முதல் ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள பதிவில், “ககன்யான் பயணத்தின் தொடக்கம் முதல் முடிவு வரையிலான முழுமையான ஒருங்கிணைந்த ஏர் டிராப் சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரோ, இந்திய விமானப்படை, டிஆர்டிஓ, இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்வெளிப் பயணத்தில் மேலே புறப்படுவது முதல் பத்திரமாக கீழே தரையிறங்குவது வரை அனைத்துமே விண்வெளி வீரர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீழே இறங்கும்போது, உரிய நேரத்தில் பாராசூட் விரிவடைந்து விண்வெளி வீரர்களை அது பத்திரமாக தரையிறக்க வேண்டும். இதை உறுதிப்படுத்தும் நோக்கில் 5 டன் எடையுள்ள போலி குழுக்கள் மேலே அனுப்பப்பட்டு பிறகு பாராசூட் மூலம் பத்திரமாக கீழே இறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி வெற்றி பெற்றிருப்பது, ககன்யான் திட்டத்தில் மிக முக்கிய மைல்கலாகப் பார்க்கப்படுகிறது.

    இதனிடையே, ககன்யானில் பங்கேற்கவுள்ள குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, குரூப் கேப்டன் பி.பி. நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் ஆகியோரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டி கவுரவித்தார். இந்த நிகழ்வில் பேசிய ராஜ்நாத் சிங், “நான்கு ககன்யான் விண்வெளி வீரர்களும் நாட்டின் ரத்தினங்கள், தேசிய லட்சியங்களின் முன்னோடிகள்.

    இந்தியா விண்வெளியை ஆராய்ச்சிக்கான ஒரு துறையாக மட்டும் பார்க்கவில்லை. நாளைய பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிர்காலம் என அனைத்துமாக அதை இந்தியா பார்க்கிறது. பூமியின் மேற்பரப்பைத் தாண்டி விண்வெளியின் புதிய எல்லைகளுக்குள் நாம் சீராக முன்னேறி வருகிறோம்.

    சந்திரனில் இருந்து செவ்வாய் வரை நமது இருப்பையும் ஆய்வுகளையும் நாம் ஏற்கெனவே விரிவுபடுத்தியுள்ளோம். இப்போது ககன்யான் போன்ற திட்டங்களுக்கு நாடு முழுமையாக தயாராக உள்ளது.

    இந்த சாதனை வெறும் தொழில்நுட்ப மைல்கல் மட்டுமல்ல. தற்சார்பு பாரதத்தில் இது ஒரு புதிய அத்தியாயம். உலகின் முன்னணி விண்வெளி சக்திகளில் ஒன்றாக இந்தியா பெருமையுடன் உயர்ந்து நிற்கிறது. இந்தியாவின் விண்வெளித் திட்டம் ஆய்வகங்கள், ஏவுதள வாகனங்களுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இது நமது தேசிய விருப்பங்கள், உலகளாவிய பார்வை ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும்.

    சந்திரயான் முதல் மங்கள்யான் வரை, மன உறுதியால் மிகவும் சவாலான இலக்குகளை குறிப்பிடத்தக்க சாதனைகளாக மாற்ற முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது.

    குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் வெற்றிகரமான விண்வெளிப் பயணம் அசாதாரண சாதனை. இது வெறும் தொழில்நுட்ப சாதனை மட்டுமல்ல, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் செய்தி” என்று தெரிவித்தார்.

    இந்தப் பாராட்டு விழாவில் முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் ஏபி சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் முர்மு: நடிகர் மோகன்லாலுக்கு ‘தாதா சாகேப் பால்கே விருது’ 

    September 24, 2025
    தேசியம்

    71-வது தேசிய விருது: மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!

    September 23, 2025
    தேசியம்

    வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா: கனமழைக்கு இதுவரை 7 பேர் பலி – பாதிப்பு நிலவரம் என்ன?

    September 23, 2025
    தேசியம்

    சினிமா டிக்கெட் விலையை ரூ.200 என நிர்ணயித்த கர்நாடக அரசின் அறிவிப்புக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

    September 23, 2025
    தேசியம்

    இந்திய இளைஞர்களின் வேலையின்மைக்கும் வாக்குத் திருட்டுதான் காரணம்: ராகுல் காந்தி

    September 23, 2025
    தேசியம்

    “அனைவருக்கும் நன்றி!” – 2 ஆண்டுகளுக்குப் பின் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான ஆசம் கான்

    September 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் முர்மு: நடிகர் மோகன்லாலுக்கு ‘தாதா சாகேப் பால்கே விருது’ 
    • குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி வேடமணிந்தனர்
    • இபிஎப் நிறுவனத்தில் நடப்பாண்டு ஜூலையில் தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் அதிக உறுப்பினர் சேர்க்கை
    • வீட்டிலுள்ள கால் சோளங்களை பாதுகாப்பாக அகற்றுவதற்கான இயற்கை வழிகள் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க அரசு அலுவலர்களுக்கு உதயநிதி அறிவுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.