Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, September 22
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»ஓடிடி தளங்களில் ஆபாசங்களை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
    தேசியம்

    ஓடிடி தளங்களில் ஆபாசங்களை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

    adminBy adminApril 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    ஓடிடி தளங்களில் ஆபாசங்களை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புதுடெல்லி: ஓடிடி, சமூக வலைதளங்களில் நிலவும் கட்டுப்பாடற்ற ஆபாசங்களை தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாமே என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக, பத்திரிகையாளரும், முன்னாள் தகவல் ஆணையருமான உதய் மஹுர்கர் மற்றும் பிறர் தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று (ஏப்.28) நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏஜி மாஷிஷ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மத்திய அரசுக்கும், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஆல்ட்பாலாஜி, முபி, உல்லு டிஜிட்டல் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கும், எக்ஸ் கார்ப், கூகுள், மெட்டா இன்க், ஆப்பிள் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

    மனு விவரம்: ஓடிடி, சமூக வலைதள ஆபாசம் தொடர்பான மனுவில், “முன்பு தனிநபர் தவறாக இருந்த ஒன்று, இன்று பரந்துபட்ட பிரச்சினையாகி உள்ளது. சமூக வலைதளம் தொடங்கி ஓடிடி வரை இன்று எல்லா டிஜிட்டல் தளங்களிலும் இந்த வன்முறை ஊடுருவியுள்ளது. இதை ஒழுங்குபடுத்தவில்லை என்றால், இது சமூக மதிப்பீடுகள், மனநலன் மற்றும் பொது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமையும். இத்தகைய கன்டென்ட்டுகள் தான் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான மனநிலையில் இளம் வயதினர் மத்தியில் ஊக்குவிக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், “இந்த மனு வெறும் விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டது அல்ல. இது உண்மையான அக்கறையின் வெளிப்பாடு” என்று வாதிட்டதோடு, சமூக வலைதளங்களில் எவ்வித கட்டுப்பாடுமின்றி வெளியாகும் சில கன்டென்டுகளை உச்ச நீதிமன்ற அமர்வின் பார்வைக்கு சமர்ப்பித்தார்.

    மனுதாரரின் வழக்கறிஞரின் வாதங்களைக் கேட்ட நீதிபதி காவாய், “மத்திய அரசு, ஏதேனும் செய்யலாம். சட்டபூர்வமாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் கூறினார். அப்போது துஷார் மேத்தா, “சில விஷயங்கள் சர்வ சாதாரணமாக பெரும்பாலானோர் பார்க்கும் ஊடகங்களில் கூட ஒளிபரப்பப்படுகிறது. சில வீடியோக்கள் வக்கிரமானதாக உள்ளன. இவற்றை ஒழுங்குபடுத்த சில வழிமுறைகள் உள்ளன. இன்னும் சில திட்டமிடுதல் நிலையில் இருக்கின்றன” என்றார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, ஓடிடி தளங்கள் மற்றும் சில சமூக வலைதளங்கள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ‘ஓடிடி, சமூக வலைதளங்களில் வெளியாகும் பல்வேறு கண்டனத்துக்குரிய, ஆபாசமான, அநாகரிகமான காட்சிகள் குறித்து இந்த மனு மிக முக்கியமான அக்கறையை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் கூட ஓடிடி, சமூக வலைதளங்களில் வக்கிரம் மிகுந்த கன்டென்ட்டுகள் இருப்பதாக விளக்கியுள்ளார். சில வரைமுறைகள் வகுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். எனவே, மத்திய அரசு சட்ட வரம்புக்கு உட்பட்டு இதன் மீதான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    மத்திய அரசு எந்த மொழியையும் திணிக்கவில்லை: அமைச்சர் தர்மேந்திர பிரதான்

    September 21, 2025
    தேசியம்

    ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும்: பிரதமர் மோடி

    September 21, 2025
    தேசியம்

    பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை!

    September 21, 2025
    தேசியம்

    பிரதமர் மோடியின் தாயாரை அவமதித்ததாக ஆர்ஜேடி மீது பாஜக மீண்டும் குற்றச்சாட்டு

    September 21, 2025
    தேசியம்

    நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: விஎச்பி கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கண்டனம்

    September 21, 2025
    தேசியம்

    ஈரானில் இந்தியர்களை கடத்தி பணம் பறிக்கும் கும்பல்: மத்திய அரசு எச்சரிக்கை

    September 21, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • சிறந்த நிர்வாகத்துக்கு குடிமைப் பணியாளர்கள்தான் முதுகெலும்பு: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகழாரம்
    • 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாணவர்கள் பெயர் பட்டியலில் விவரங்களை சரிபார்க்க வேண்டும்: தேர்​வுத் ​துறை உத்​தர​வு
    • ஏழைகளின் ‘டாக்டர்’ கனவை நனவாக்கி வரும் 7.5% உள் இடஒதுக்கீடு: அரசு பள்ளி மாணவர் 632 பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு
    • 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா | IND vs PAK சூப்பர் 4
    • எச்1பி விசாவுக்கு ஒருமுறை மட்டுமே கட்டணம்: ட்ரம்பின் புதிய ஆணை குறித்து அமெரிக்க அரசு விளக்கம்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.